ஈரமணம்

ஈரமணம்

1 mins read

முகக்­க­வ­ச­ம­ணிந்து

போர்­வீ­ரர்­கள்

யுத்­தத்­திற்கு

ஆயத்­த­மா­கி­றார்­கள்.

இடை­வெளி

தூரங்­க­ளி­லும்

பெருக்­கல்

அடை­யா­ளங்­க­ளி­லும்

உல­வும் கேள்­விக்­கு­றி­கள்.

சுத்­தி­க­ரிப்­புக் குடு­வை­களில்

பீய்ச்­சிப் பீய்ச்சி

சிகிச்சை நெடி­யே­றும்

தற்­காப்­பின் ஈர­ம­ணம்.

கைகள்

கழு­விக் கழு­விக்

கரை­சல்­களில்

வழிந்­தோ­டும்

நம்­பிக்­கை­யின் நாட்­கள்.

கொத்­துக் கொத்­தாய்

முடி­வு­றும்

மறை­வு­டன் சம­ராடி

முன்­னே­றும்

தியா­கக் கேட­யங்­கள்.

நீங்­கள்,

இயற்கை

இறை­வன்

இல்லை

சரி

இப்­ப­டி­யான

தர்க்­கங்­க­ளை­யெல்­லாம் தாண்டி

தேசங்­கள்

எண்­ணிக்கை

மீட்பு

பாதிப்பு

என்ற

நடு­வ­ளை­யத்­திற்­குள்

சுழன்று கொண்­டி­ருக்­கி­றீர்­கள்...

நாளை­யின் பறவை

தன் கூட்­டி­லி­ருந்து

புலர்­வின்

பெரும் உற்­சா­கத்­து­டன்

திவ்­ய­மாய்

சிற­க­சைத்து மேலெ­ழும்­பு­கிறது...

விடி­ய­லின் புள­காங்­கித

மலர்­க­ளைச் சொரிந்­த­படி

புன்­ன­கைக்­கும் உல­கின்

குண­வ­னம்...

பரி­சோ­த­னை­யில்

இல்லை

எனும்

மகிழ்ச்­சி­யின் முடி­வோடு

இயல்­பாய்

இயங்க ஆரம்­பித்­து­விட்­டது

நக­ரம்...

நீங்­கள் எதிர்­பார்த்­துக்

காத்­தி­ருந்த செய்­தி­தான்

கண்­டு­பி­டித்­தா­யிற்று!