கிறுக்கல்கள்

கிறுக்கல்கள்

1 mins read

ஒற்றை எழுத்­தை­யும்

ஒற்­றைச் சொல்­லை­யும்

வெறு­மனே அடுக்­கி­வைத்து

பெரு­மி­தப்­பட்­டுக்­கொள்­ளும்

பக்­கு­வத்தை நான்

இன்­னும் எட்­ட­வில்லை.

விட்­டு­வி­டுங்­கள் என்னை.

வெறும் வார்த்­தை­க­ளால்

வெற்­றி­டத்தை நிரப்­பும்

பக்­கு­வத்­தை­யும் நான்

இன்­னும் எட்­ட­வில்லை.

விட்­டு­வி­டுங்­கள் என்னை.

'ஒற்றை'க்கா­லில்

நிற்­கச் சொல்லி

ஒற்­றைக்­கா­லில் நிற்­கா­தீர்­கள்.

உங்­கள் விருப்­பத்தை

எனக்கு ஊட்­டா­தீர்­கள்

நீங்­கள் விரும்­பும் காட்­சியை

எனது விழி­க­ளின் வழியே

காண முடி­யாது.

எனக்­குக் கடி­வா­ளம் கட்­டும் முன்

உங்­கள் வறட்­டுக் கடி­வா­ளத்­தைக்

கழற்­றிப் பாருங்­கள்

கவிதை தெரி­யும்.

என் கைத்­தறி நெசவு

உங்­க­ளுக்கு ஒட்­ட­டை­யா­கத் தெரி­ய­லாம்..

கைரே­கை­யைப் போன்­றவை

விருப்­பங்­கள்...

சற்று பின்­னோக்­கிப் பாருங்­கள்..

நீங்­கள் நிரந்­த­ர­மென்று

நினைப்­ப­தெல்­லாம்,

காலத்­துக்கு

கடல்­ம­ணல் கிறுக்­கல்­கள்..!