உன்னை உனக்குள் இழந்து பார்
தனியே அறையில் அமர்ந்து பார்
கண்களை மூடி இருந்து பார்
காரிருள் கண்டு நுழைந்து பார்
இனம் புரியா இன்பம்
தங்கு தடையின்றிப் பொங்கும்
ஐம்புலனும் ஒருங்கிணைந்தால்
அமைதி நிலை உருவாகும்
ஆன்மாவிடம் சரணடைந்தால்
ஆவதெல்லாம் பொன்னாகும்
அந்தி சந்தி வேளையிலே
ஆற்றல்களைத் திரட்டிப்பார்
ஆதவனைப் பணிந்து நின்றால்
அன்பு உன்னை ஆட்கொள்ளும்
கழிவுகளை வெளியேற்று
கவலையின்றிப் பணியாற்று
உறுதிகொண்ட நெஞ்சம்
உயர்நிலையில் மிஞ்சும்
வாழ்க்கை என்றும் வசந்தம்

