அவள் நீராடிச் செல்கையில்
பிடரி வளைத்து - என்னில்
முறுவல் தைத்து - பின்
இயல்பு திரும்பி தொலைந்திட...
உணர்கிறேன்!
மரூலாக் கனிகளை
கவளங்கள் பல தின்று நடந்த
வாரணம் செய்த
வனப் பாதையென...
ஆம்!
என் முகத்தில் ஈரம் தெளித்து
நெளிந்தாடிச் சென்ற - அவளின்
கருஞ்சுருள் கூந்தற் சாரலென்பது...
என் மனதில் பெய்திட்ட
ஆனந்தக் கள் கார்காலம்
- ஆலை கமலன்

