பகலென்றறிந்ததும்
என்னிரு கண்களை
தடுத்துப் பிழைக்கிறேன்
இருளென்றறிந்தும்
என்னிரு கைகளை
எடுத்து நுழைக்கிறேன்
தேடித் துழாவுகையில்
கோடி அகப்படுது
கைகளில்!
கோபம்;
துன்பம்;
துரோகம்;
வலி;
கிலி...
அவையெல்லாம்
எனதெதிரிகளிடமிருந்து
பிடுங்கிப்
புதைத்தவை தான்.
தொலைத்த
மகிழ்ச்சியை
தேடிக்
கொண்டிருக்கிறேன்
தினந்தோறும்
கைகளுக்குள்
சிக்கவிடாமல்
கண்ணாமூச்சி
ஆடுகிறது
காலம்!
- அன்பு(டன்)

