வெளிநாட்டு ஊழியனின் ‘உள்ளிருப்புக்காலம்’

சி.கருணாகரசு

சிறகுகளை

மடித்து வைத்த

குருவிக்கூடானது

எனது வசிப்பிடம்.

வாசல் தாண்டிய

வெளியுலகு

வாய்க்குமா என்றே

வாழ்நாட்கள் கடந்தன.

வாசல்,

முறைவாசலாகி

மூன்றுமுறையே திறக்கப்பட்டது

உணவுப்பொட்டலங்கள்

உள்நுழைய.

எனது

பட்டா நிலத்தின் அளவே

வானத்தை ரசிக்க

வாய்ப்புத்தந்தது

வசிப்பிட சாளரம்.

இருக்கும் இடத்திலேயே

வாழ்வைப் பொருத்திக்கொண்ட

மைனாக்களில் இரண்டு,

அவ்வப்போது

சாளரத்தில் வந்து அமர்கின்றன.

அவற்றின் சிறகுகளுக்கு

அப்படியொரு கொடுப்பினை.

மின்விசிறிகள்

வேகமெடுத்த சுழற்சியிலும்

மனத்தின் புழுக்கத்திற்கு

மருந்தில்லை.

எனது நீள்வட்ட

அறைக்குள் நிகழும்

அசைவுகள் அனைத்தையும்

ரசிக்கும் கட்டாயம் எனக்கு.

உற்றவன் மரணத்தில்

ஒருபிடி வாய்க்கரிசி போடவும்

வழியில்லாத் துயர்நிலையில்

எனது

கண்ணீர் துடைத்த

கைக்குட்டை கவிதைதான்.

எண்ணங்களுக்கு பூச்சூடி

எழில் கூட்ட

எனது,

குளிருக்கு போர்வையாகவும்

வெயிலுக்கு குடையாகவும்

இருந்ததென்னவோ

கவிதைகள்தான்.

எனது காதல்,

கவிதையின் மீதும்

கற்போடு இருந்ததால்

வலிநிரம்பிய காலத்தில்

மடிதந்து தலைகோதியது.

உயிர் அறுக்கும்

மன அழுத்தம்

சாளரத்தின் வழி வெளியேறாமல்

என்

ஆயுள் ரேகையின் நீளத்தை

அதிகப்படுத்தியது

கவிதையேதான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!