கலக்கம்

கலக்கம்

11 mins read

சிறுகதை

மணிமாலா மதியழகன்

"ராசண்­ணா.... நல்­லா­யி­ருக்­கீங்­களா? பாத்து எத்­தன வரு­ச­மாச்சி? எந்­த கம்­பெ­னிக்கு வந்­தி­ருக்­கீங்க?" மகிழ்ச்­சி­யில் நான் கேள்­வி­களை அடுக்க, முகத்­தில் எந்த உணர்ச்­சி­யை­யும் காட்­டா­மல், தோளி­லி­ருந்த என் கையை எடுத்­து­விட்டு அவர் வேக­மாக நடக்க ஆரம்­பித்­தார். பளா­ரென முகத்­தில் அறைந்­த­து­போல என் முகம் சிறுத்துப்போனது. கீழே வைத்த பைகளை எடுத்­துக்­கொண்டு கனத்த இத­யத்­து­டன் எம்­ஆர்­டியை நோக்­கிப்போனேன்.

மின்­ப­டி­யை­விட்டு நான் இறங்­கும்­போது அவர் பொங்கோல் நோக்­கிச்செல்­லும் ரயி­லுக்­குள் நுழை­வது தெரிந்தது.

மற்ற சம­ய­மாக இருந்­தி­ருந்­தால் திறந்­தி­ருந்த ரயி­லுக்­குள் ஓடிப்­போய் என்­னைத் திணித்­தி­ருப்­பேன்.

அடுத்து வந்த ரயி­லில் ஏறி­ய­தும் கையி­லி­ருந்த சுமை­யைக் கீழே வைத்த நொடி­யில் மனத்­தின் பாரம் தாளா­மல் நினை­வு­கள் பின்­னுக்கு நகர்ந்­தன.

நான்­காண்­டு­க­ளுக்கு முன், நான் சிங்­கப்­பூ­ருக்கு வந்த புதி­தில் ஆறு பேர் ஓர் அறை­யில் தங்­கி­யி­ருந்­தோம்.

செடி­களை நடு­தல், சாலை­யில் போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூ­றாக இருக்­கும் கிளை­க­ளைக் கழித்து விடு­தல், வய­தான மரங்­களை அப்­பு­றப்­ப­டுத்­து­தல் போன்ற பணி­களைச் செய்­தோம்.

இவற்­றில் செடி­களை நடும் வேலை வரும்­போது ராசு அண்­ண­னின் முகத்­தில் மகிழ்ச்சி படர்ந்­தி­ருக்­கும்.

நாங்­க­ளெல்­லாம் அதை ஒரு கட­மை­யா­கச் செய்ய, அதை அனு­ப­வித்­துச் செய்யும் அவரிடம் ஒரு­விதத் தாய்மை உணர்வு தெரி­யும்.

பிளாஸ்­டிக் பைக­ளி­லி­ருக்­கும் ஒவ்­வொரு செடி­யை­யும் குழந்­தையை ஏந்­து­வ­தைப்­போல எடுத்து, தோண்­டப்­பட்ட பள்­ளத்­தில் உரம் கலந்த மண்ணை அள­வா­கப் போட்டு நடு­வார்.

செடியை நட்­டு­விட்டு பூவா­ளி­யால் தண்­ணீர் ஊற்­றும்­போது இலை­க­ளின்­மேல் கொஞ்­சங்­கூட மண் ஒட்­டி­யி­ருக்­காது. 

சாலை­யின் மறு­பு­றம் இருக்­கும் மரத்­தின் கிளை­களை நோக்­கிக் கைகு­லுக்­கச் செல்­வ­தைப்­போல நீண்­டி­ருக்­கும் கிளை­களை கழித்து­வி­டும் வேலையை ஒரு­நாள் செய்து­கொண்­டி­ருந்­தோம்.

"நாம இப்­ப­டிச் செய்­யு­றோமே, இந்த மரத்­தி­லி­ருக்­கும் குரு­விங்க பாவ­மில்லே?" என்று கேட்­டார்.

"ஏண்ணே... ஏன்...? இருக்­குற வேலைக்கு ஒலை வச்­சி­டு­வீங்­க­போல..." சிவா அவ­ரைக் கிண்­டல் செய்­தான்.

"இல்­லடா... நாம­பாட்­டுக்கு வெட்டி வீசிட்டு அள்­ளிப்­போட்­டுக்­கிட்­டுப் போயி­டு­வோம். இங்க இருந்த குரு­விங்க வந்து அதுங்­க­ளோட குஞ்­சு­க­ளைக் காணாம தவிச்­சுப் போயி­டும்ல?" என்று கேட்­டார்.

"சின்­னப்­புள்ள மாதிரி யோசிக்­கி­றீங்­களே அண்ணே," என்று நான் அவ­ரைப் பார்த்­துச் சிரித்­தேன். 

என்­னவோ தெரி­ய­வில்லை இரண்டு நாளாக ராசண்­ணன் எதையோ பறி­கொ­டுத்த மாதி­ரியே இருந்­தார்.

"ஊரில் யாருக்­கா­வது உடம்­புக்கு முடி­ய­லையா? கல்­லூ­ரி­யில் படிக்­கும் பிள்­ளை­க­ளுக்­குப் பணம் கட்­ட­ணுமா? வேறு எது­வும் பிரச்­சி­னையா?" என்று கேட்­ட­போது, அதெல்­லாம் ஒண்­ணு­மில்லை என்­றார்.

எதையோ நினைத்­துக் கலங்­கு­வதை அவர் கண்­கள் காட்­டிக்­கொடுத்­தன.

ஓர் அறை­யில் தங்­கி­யி­ருந்­தா­லும் அடுத்­த­வர் பிரச்­சி­னையை ஓர­ள­வுக்­கு­மேல் துரு­விக் கேட்­பது நல்­ல­தில்லை என்று விட்­டு­விட்­டேன்.

சிராங்­கூன் சென்ட்­ர­லில் அமைந்­துள்ள மார்க்­கெட்­டைச் சுற்றி­யி­ருக்­கும் மரங்­க­ளில் உள்ள கிளை­க­ளைக் கழித்­து­வி­டும் வேலையை அன்று செய்ய வேண்­டும்.

வேலை நடக்­கும் பகு­திக்கு யாரும் வர முடி­யா­த­ளவு நாடா­வால் கட்­டி­னோம்.

மேற்பார்வையாளர் ஒரு­வர் வேலை­யைக் கண்­கா­ணிப்­ப­து­டன் யாரும் தடுப்­பைத் தாண்டி வந்­து­வி­டாத மாதி­ரி­யும் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார்.

ராசண்­ணன் இடுப்­பில் கயிற்­றைக் கட்­டிக்­கொண்டு ஒரு கையால் மரத்­தின் கிளை­யைப் பற்­றிக்­கொண்டு மறு கையி­லி­ருந்த ரம்­பத்தை கிளை­யின் மீது வைத்­தார்.

அடுத்த நொடியே அந்­தக் கிளை நிலத்தை நோக்கி வந்­தது.

அண்­ணாந்து பார்க்­கை­யில், மேலி­ருந்து பொன் துகளை வாரி இறைத்­த­தைப்­போல மரத்­து­கள் பறந்­தது.

கைக்­கெட்­டும் தூரத்­தி­ல் இருந்த கிளை­களை வெட்­டி­ய­வு­டன் ராசண்­ணன் கீழே நிறுத்­தி­யி­ருந்த வண்­டி­யில் இறங்­கி­னார்.

அது­வரை கீழே நின்­றி­ருந்த சிவா­வும் நானு­மாக கிளை­களை இழுத்­துப்போய் வண்­டி­யில் போட்­டோம்.  

அங்கே வந்த ஒரு­வர் "அப்­பாடா... ஒரு வழியா நல்ல காரி­யம் செய்­யு­றாங்க," என்று அரு­கி­லி­ருந்­த­வ­ரி­டம் சொன்­னார்.

"சிங்­கப்­பூ­ரி­லுள்ள மைனாக்­கள் எல்­லாம் இங்­க­தான் அடை­யுமோ என்­னவோ? ப்பா... சாயந்­தி­ர­மானா என்னா சத்­தம்? இப்­ப­வா­வது நட­வ­டிக்கை எடுத்­தாங்­களே!" என இரு­வ­ரும் பேசிக்­கொண்­டி­ருந்­த­னர். 

மரத்­தின் மற்­றொரு பக்­கத்­துக்கு வண்டி நகர்ந்­தது.

ராசண்­ணன் ரம்­பத்­தைக் கிளை­மீது கொண்­டு­போன வேளை­யில் "ஹேய்... ஸ்டாப்... ஸ்டாப்!" என மேற்பார்வையாளர், அண்­ணனை நோக்­கிக் கத்­தி­னார்.

எதற்கு இப்­ப­டிச் சத்­தம் போடு­கி­றார் என நாங்­கள் அண்­ணாந்து பார்த்­த­போ­து­தான் ராசண்­ணன் ஹெல்­மெட் அணி­ய­வில்லை என்­பது தெரிந்­தது.

கடு­மை­யான பார்­வையை வீசிய மேற்பார்வையாளரிடம் மன்­னிப்­புக் கேட்­ட­பி­றகு அவர் வேலை­யைத் தொடர்ந்­தார்.

'ம்.... இவ­ருக்கு என்­னாச்­சின்னு சொல்ல மாட்­டேங்­கி­றாரே?' 

வீட்­டுக்­குப் பணம் அனுப்­பு­வ­தற்­காக ராசண்­ணன் லிட்­டில் இந்­தி­யா­வுக்­குப் போவ­தா­கச் சொன்­னார்.

அலுப்­பாக இருந்­த­தால் மதிய சாப்­பா­ட்டையும் அந்த வார சமை­ய­லுக்கு வேண்­டிய பொரு­ளை­யும் அவ­ரையே வாங்­கி­வந்­து­வி­டச் சொன்­னோம். 

ஞாயிற்­றுக்­கி­ழமை என்­ப­தால் பொழுது உச்­சிக்­குப் போன பிற­கு­தான் அன்று எனக்கு விடிந்­தது.

பசி­யோடு காத்­தி­ருந்த வேளை­யில், "லிட்­டில் இந்­தியா எம்­ஆர்­டிக்­குப் பக்­கத்­தி­லி­ருக்­கும் காய்­கறிக் கடைக்கு உடனே வா," என கைபேசி­யில் அவ­ரி­ட­மி­ருந்து எனக்கு அழைப்பு வந்­தது.

பிரி­யா­ணி­யைச் சாப்­பிட்­டு­விட்டு படுக்­கை­யில் மறு­படி சுருண்­டு­கொள்­ள­லாம் என்று நினைத்­தி­ருந்­த­வன் உடனே கிளம்­பி­னேன்.

அண்­ணன் சொல்­லி­யி­ருந்த கடையை நோக்கி வரும்­போது சற்று தூரத்­தில் இருக்­கும்­போதே ஏதோ சரி­யில்­லை­யென எனத் தெரிந்­தது.

காய்­க­றிக்­க­டை­யின் அரு­கில் ராசண்­ணன் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்க, நான்கு பேர் அவ­ரைச் சுற்றி நின்­று­கொண்டு ஏதோ கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர்.

கடை­யில் பொருட்­களை எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­வர்­க­ளது கண்­கள் யாவும் அவர் இருந்த திசையை நோக்கியே இருந்­தன.

என்­னவோ தப்­பா­கத் தோன்ற கால்­க­ளின் வேகத்­தைக் கூட்­டி­னேன்.

"நீ மட்­டுந்­தான் இதைச் செய்­தியா? இல்ல உன் பின்­னாடி ஒரு கூட்­ட­மி­ருக்கா? எவ்­வ­ளவு நாளா இப்­ப­டிப் பண்­ணி­யி­ருக்கே?" என்று விசா­ரித்­த­னர்.

அவர் குர­லெ­ழும்­பா­மல் "மன்­னிச்­சி­டுங்க, நான் வேணும்னு செய்­யல..." என்று சொல்­லிக்­கொண்­டி­ருந்­தார். 

"என்­னாச்­சிண்­ணே?" என்­னைப் பார்த்­த­தும் அவர் கண்­களில் கண்­ணீர் பொங்­கி­யது.

"உங்­கூட்­டா­ளியா?" அங்­கி­ருந்த ஒரு பெண்­மணி என்­னைக் காட்­டிக் கேட்­டார். அந்­தக் குர­லால் அவ்­வ­ழியே போன அத்­தனை தலை­களும் என் பக்­கம் திரும்­பின.

நான் அண்­ண­னி­டம் விசா­ரிக்க, அவ­ரைப் பேச­வி­டாது அந்­தப் பெண்­மணி "என்­னாச்சா? உங்­கூட்­டாளி எங்­க­டை­யில திரு­டி­யி­ருக்­கான்," என்­றார்.

'ராசண்­ண­னைப் பார்த்தா இப்­ப­டிச் சொல்­றார்?' என் பார்­வை­யின் பொருளை உணர்ந்­த­தாலோ என்­னவோ அரு­கி­லி­ருந்த தாட்­டி­யான ஆள், "நாங்க விளை­யாட்­டுக்கு இந்­தாளை நிறுத்தி வச்­சி­ருக்­கோம்னு நினைச்­சியா? திருட்­டுப் பய கையுங்­க­ள­வுமா மாட்­டு­ன­தும் இல்­லவே இல்­லன்னு சாதிக்­கி­றான்," என்று சொன்­னார்.

"பொருளை எடுத்­துக் கூடை­யில வச்­ச­வன் பில் போடு­றப்ப அதை எடுத்­துக்­கிட்­டுப் போவாம கையி­லி­ருந்த வெங்­கா­யம், தக்­கா­ளிக்கு மட்­டும் பணத்­தைக் கட்­டிட்டு ஏதோ ஞாப­கத்­துல கூடை­யைக் கையி­லேயே எடுத்­துக்­கிட்டு கடை­யை­விட்டு வெளியே வந்­துட்­டேன்.

"நெச­மாவே நான் வேணும்னு செய்­ய­லங்க. சாமி சத்­தி­யமா இதான் உண்மை," என்று சொன்­ன­வர் அவர்­க­ளைப் பார்த்­துக் கையெடுத்­துக் கும்­பிட்­டார். 

"தய­வு­செஞ்சி நான் சொல்­றதை கேளுங்க. இவர் அப்­ப­டிப்­பட்­ட­வர் கிடை­யாது. என்­னவோ தெரி­யல, ரெண்டு நாளாவே யாரி­ட­மும் பேசா­ம­லே­தான் இருந்­தார். அத­னால்­தான் இப்­ப­டித் தப்பு நடந்­தி­டுச்­சின்னு நினைக்­கி­றேன். உண்­மை­யாவே திரு­டுற யாராச்­சும் கடை­யில­ இருக்­கிற கூடை­யோட வெளியே போவாங்­களா நீங்­களே சொல்­லுங்க?" என்­றேன்.

"மாட்­டிக்­கிட்­ட­வன் எவன்­தான் உள்­ளதை ஒத்­துக்­கு­வான்?

"சே... இதெல்­லாம் ஒரு பொழப்பா?" என தக்­கா­ளி­யைப் பொறுக்­கிக்­கொண்டே ஓர் அம்மணி வார்த்­தை­களை இறைத்­தார். 

"மத்த மத்த நாடு மாதி­ரியா இது? இங்­க­தான் எல்லா எடத்­து­ல­யும் கேமரா வச்சி நம்­மள பாத்­துக்­கிட்டே இருக்­காங்­களே.

"ஒரு சின்ன தப்பை செஞ்­சிட்டு இங்­கிட்­டி­ருந்து யாராச்­சும் தப்­பிச்­சிட முடி­யுமா?" 

"இங்க பாருங்க... யாரு தப்பு செஞ்­சாங்­களோ அவங்­க­ளைப் போலிசுல புடிச்சி குடுங்க. அதை விட்­டுட்டு எல்­லா­ரை­யும் அப்­ப­டிப் பேசுற வேலை வச்­சுக்­கா­தீங்க!"

"பாவம் புள்­ளக்­குட்­டிக்­கார மனு­ச­னா­யி­ருப்­பான். இவன் செஞ்­ச­துக்கு அதுங்க என்ன பண்­ணும்? பெரிய மன­சு­பண்ணி பொரு­ளுக்கு உண்­டான வெள்­ளிய வாங்­கிட்டு வுடு தாயீ!" 

அவ்­வ­ழியே வந்­த­வர்­கள் அவ­ர­வ­ரது மனத்­தில் பட்­ட­வற்றை சித­ற­டிக்க, கடைக்­கார அம்­மணி வாய் திறந்­தார்.

"இந்­தாள் எடுத்த பொரு­ளோட வெல முப்­பத்­தி­ரண்டு வெள்­ளி­தான். அதுக்­காக நான் பாக்­குல.

"எங்­கிட்ட பண­மில்­லன்னு சொல்­லி­யி­ருந்தா 'வொர்க் பர்­மிட் நம்­பர' வாங்­கிட்­டுப் பொருள குடுத்து அனுப்­பி­யி­ருப்­போம்.

"எத்­தி­னியோ பேரு எங்­க­டை­யில அப்­ப­டித்­தான் வாங்­கிட்­டுப் போவாங்க, சம்­ப­ளம் போட்­ட­தும் வாங்­குன கடனை திருப்பி அடைப்­பாங்க.

"இந்­தாள் செஞ்­சது பெரிய தப்­பில்­லையா? அவ்ளோ காய்­கறி, மளி­கைன்னு எடுத்து வச்­சிக்­கிட்டு வெறும் தக்­காளி, வெங்­கா­யத்­துக்கு மட்­டும் பில்­லைப்­ போட்டு வாங்­கிட்­டுப்போனா எப்­படி? கடைக்கு சேவாக்­கூ­லிய குடுத்து, இந்­தியா, மலே­சி­யான்னு சுங்­கத் தீர்வை கட்­டி பொருள எறக்­குற என் நெலம என்­னா­வு­றது? இந்த மாதிரி நாலு பேரு செஞ்சா நானும் எங்­கி­யா­வது திரு­டத்­தான் போவ­ணும்." 

"ஆமாக்கா, வுடா­தீங்க... இவ­னுகளுக்­கெல்­லாம் பாடம் கத்­துக் குடுக்­க­ணும். இன்­னும் போலிசுக்கு கால் பண்­ணா­மலா இருக்­கீங்க?"

"வேணாம் தம்பி. யாரு பெத்த புள்­ளையோ? ஏதோ போதாத காலம், அந்­தப் புள்­ளாண்­டான் இப்­ப­டிப் பண்­ணிட்­டான். போலிசுக்­கெல்­லாம் போனா அவ­னோட பொழப்பு கெட்டுப் போயி­டும். உனக்­குப் புண்­ணி­யமா போவட்­டும். பணத்த வாங்­கிட்டு வுட்­டு­டும்மா," நடை தளர்ந்த மூதாட்டி அண்­ண­னுக்­கா­கப் பரிந்துபேசி­னார். 

"இவ்ளோ பேசு­றியே... உங்­கடையா இருந்தா இப்­படி விட்­டு­டு­வியா?"

"அதான... வேடிக்கை பாத்­தமா வூட்­டுக்­குப் போன­மான்னு இல்­லாம பஞ்­சா­யத்து பண்ண வந்­துட்டே.... என்ன செய்­ய­ணும்னு எங்­க­ளுக்­குத் தெரி­யும். நீ கெளம்பு பெருசு!"

ஆளா­ளுக்­குப் பேச குனிந்­தி­ருந்த அண்­ண­னின் கண்­க­ளி­லி­ருந்து கண்­ணீர் பெரு­கி­யது.

"நடந்­தது தப்­பு­தான். தய­வு­செஞ்சி மன்­னிச்­சி­டுங்க. இந்­தப் பொரு­ளுக்­கான பணத்தைக் கொடுத்­து­ட­றேன். என்னை விட்­டு­டுங்க," என்று கெஞ்சிக்கேட்­டார்.

"என்­னாது பணம் குடுக்­கி­றியா? குரூப்­பா­யி­ருந்து திருட வேண்­டி­யது, மாட்­டிக்­கிட்டா இப்­பு­டில்­லாம் சமா­ளிக்­கி­ற­துன்னு உங்க திட்­ட­மாடா?" அந்­தத் தாட்­டி­யான ஆளின் குரல் எகி­றி­யது.

"அண்ணே... அப்­ப­டில்­லாம் இல்­லண்ணே...

"வேணும்னு செஞ்­சி­ருக்க மாட்­டாரு. சொன்னா நம்­ப­மாட்­டீங்க, இவரு டிஷ்யூ பேப்­பரை யூஸ் பண்­ணவே மாட்­டாரு. ஆனா­லும் வெளியே போயிட்டு வர்­றப்ப ரெண்டு பாக்­கெட்­டா­வது டிஷ்யூ பேப்­பர் இல்­லாம அறைக்­குத் திரும்­ப­மாட்­டாரு.

"முடி­யா­த­வங்­க­ளுக்கு, கைகால் நல்­லா­யி­ருக்­கிற நாம் இந்த உத­விய செஞ்சா குறைஞ்­சி­ட­மாட்­டோம்னு சொல்­வாரு. அப்­ப­டிப்­பட்­ட­வர் நிச்­ச­யமா இதை செஞ்­சி­ருக்­க­மாட்­டாரு என்­னைய நம்­புங்­கண்ணே." 

"தம்பி, இந்­தக் கதை­யெல்­லாம் இங்க வுடாத. நான் பதி­னைஞ்சி வய­சுல காது குத்தி கடுக்­கண் போட்­டுக்­கிட்­ட­வன். நாங்க போலி­சுக்­குப் போவு­றது போவு­ற­து­தான்.

"ஏதோ இவன் சொன்­னான்னு உன்னை வரச் சொன்­னோம். இன்­னும் கொஞ்ச நேரத்­துல போலிசு வரும். அவுங்­க­கிட்ட உங்க அண்­ண­னப் பத்­திய கதை­யச் சொல்லு. இப்ப உன்­னோட போன் நம்­பர குடுத்­துட்டு எடத்த காலி பண்ணு." 

"ப்ளீஸ்... அப்­ப­டில்­லாம் செஞ்­சி­டா­தீங்க. அவர் அப்­பி­ராணி. உள்­ள­படி அப்­ப­டிச் செய்­யுற மனு­சன் கிடை­யாது. என்னை நம்­புங்க." 

பெரிய கடை ஒன்­றில் பிராண்­டட் கைக்­க­டி­கா­ரத்­தைத் திரு­டிய ஒரு­வர் பிடி­பட்ட செய்தி கொஞ்ச நாளுக்கு முன் செய்­தி­யில் வெளி­யா­கி­யி­ருந்­தது. அந்த ஆளுக்கு மூன்­றாண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்ட செய்­தியை படித்­த­போது ராசண்­ணன், "மரங்­க­ளையே கண்­கா­ணிக்­குற சிங்­கப்­பூ­ரில் மனு­சங்­கள கண்­டுக்­காம இருப்­பாங்­களா?

"இவ­னுக்­குக் கிடைச்ச தண்­ட­னை­யைப் பாரு. இது அவன் குடும்­பத்­துக்கு எப்­பேர்­பட்ட அவ­மா­னம்?" என அறி­மு­க­மில்லா ஒரு குடும்­பத்­துக்­காக வருத்­தப்­பட்­டார்.

அவர் நிச்­ச­ய­மாக இந்­தத் தப்பை செய்­தி­ருக்க வாய்ப்­பே­யில்­லை­யென இவர்­க­ளி­டம் சொன்­னால் எடு­ப­ட­வில்­லையே என்ற வேதனை என்­னைக் கவ்­வி­யது.

என் பேச்சை நம்­பி­னாரோ அண்­ண­னின் கண்­ணீ­ரைப் புரிந்­து­கொண்­டாரோ அந்­தக் கடைக்­கார அம்­மணி, "சரி சரி... உங்க கம்­பெனி போன் நம்­ப­ரை­யும், வொர்க் பர்­மிட் நம்­ப­ரை­யும்  எழு­திக் குடுத்­துட்டு கெளம்­புங்க," என்­றார்.

அவர்­க­ளுக்கு கைகூப்பி நன்றி சொன்ன அண்­ணன், வாலட்­டி­லி­ருந்து ஐம்­பது வெள்­ளியை எடுத்­துக் கொடுத்­தார். மீதி சில்­ல­றையை அந்த அம்­மணி எடுத்­துக் கொடுக்­கும் வேளை­யில், "எல்­லா­ரும் என்­னைப்­போ­லப் பெரிய மனசு பண்ண மாட்­டாங்க.

"பொழைக்க வந்த எடத்­துல கை சுத்­தமா இருக்­க­ணும்," என்று சொல்­லிய வேளை­யிலா அங்கே சிவா வர­வேண்­டும்? இவன் எப்­படி இங்கே வந்­தான்? சரி­யான ஓட்டை வாய­னாச்சே என நான் பதைக்க, சுற்­றி­யி­ருந்­த­வர்­கள் மூலம் நடந்­ததை அறிந்­து­கொண்­டான். 

"சிவா, அண்­ண­னுக்கு ஏதோ பிரச்­சி­னை­யி­ருக்கு, அதை நம்­ம­கிட்ட சொல்­லாம என்­னவோ குழப்­பத்­து­லயே இருக்­காரு. இங்கு நடந்­ததை நீ யாரி­ட­மும் மூச்­சு­வி­டாதே" என எச்­ச­ரித்­தேன்.

நான் குளித்­து­விட்டு வந்­த­போது, "காய்­க­றிக் கடை­யில ராசு திரு­டிட்­டா­ராமே..." என மற்­ற­வர்­கள் விசா­ரித்­த­னர்.

"இதை எப்­படி மறைக்க முடி­யும்?" என்­ப­தைப்­போல சிவா என்­னைப் பார்த்­தான். எனக்கு ராசண்­ண­னின் முகத்­தைப் பார்க்­கவே சங்­க­ட­மாக இருந்­தது.

இந்­தச் சம்­ப­வம் நடந்து இரண்டு நாளா­கி­யும் அவர் தூக்­கம் தொலைந்தே காணப்­பட்­டார்.

சாப்­பாடு என்­பது உடன் தங்­கி­யி­ருக்­கும் மற்­ற­வர்­க­ளின் வற்­பு­றுத்­த­லால் கொஞ்­சம் உள்ளே போனது.

தன்­னைச் சாப்­பி­டச் சொல்­லி­விட்டு முது­குக்­குப் பின் சிரிக்­கி­றார்­களோ என்ற சந்­தே­கம் அவ­ருக்கு இருந்­து­கொண்டே இருந்­தது.

"வேலை­யா­வது மண்­ணா­வது... எல்­லாத்­தை­யும் விட்­டுட்டு ஓடிட்டா என்­னன்னு தோணுது," என்று புலம்­பிய அவ­ரைத் தேற்­றி­னேன். அன்று வேலை முடிந்து எல்­லா­ரும் கிளம்­பிக்­கொண்­டி­ருந்­தோம். லாரியை எடுக்­கப் போகும்­போது ராசண்­ணனை மட்­டும் காண­வில்லை.

"எங்க போச்சி இந்த முப்­பத்­தி­ரெண்டு வெள்ளி?" என்று சிவா கிண்­ட­லா­கக் கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­போது அவர் வந்­து­விட்­டார்.

மறு­நாள் விடு­முறை என்­ப­தால் நட வேண்­டிய செடி­கள் வெயி­லில் காய வேண்­டா­மென்று நிழ­லைத் தேடி வைத்­து­விட்டு வந்­தி­ருக்­கி­றார். அன்று அறைக்­குத் திரும்­பும்­வரை யாருமே வாயைத் திறக்­க­வில்லை.

"எந்­தப் பொறுக்­கியோ செஞ்ச தப்­புக்கு நீ ஏங்­கண்ணு சாவ­ணும். அப்­பா­வுக்கு உன்ன தெரி­யும்டா... கம்­பெ­னி­யில லீவு கேட்­டி­ருக்­கேன். நாலஞ்சி நாள்ல வந்­து­டு­வேன். அது­வ­ரைக்­கும் நீ காலே­ஜுக்­குப் போவாம வீட்­லயே இரும்மா," என போனில் ராசண்­ணன் ரக­சி­ய­மாக பேசிக்­கொண்­டி­ருந்த வார்த்­தை­கள் எதேச்­சை­யாக என் காதில் விழுந்­தன. பிள்­ளை­க­ளின் ஞாப­க­மாக இருப்­ப­தால் இந்­தி­யா­வுக்­குப் போய்­விட்டு வர இருப்­ப­தாக எங்­க­ளி­டம் சொன்­னார். 

*

வெவ்­வேறு பகு­தி­யி­லி­ருந்து கொண்டு வந்த புதர் தவ­ளை­களை பூம­லை­யி­லுள்ள ஊசி­யி­லைக்­காட்­டுப் பகு­தி­யில்­வி­டும் வேலை­யைச் செய்­து­கொண்­டி­ருந்­தோம்.

அந்­தக் கால சிங்­கப்­பூ­ரில் இரவு நேரத்­தில் கேட்­கும் தவ­ளை­யின் சத்­தத்தை மக்­க­ளுக்கு நினை­வூட்ட 'உயி­ரின மீட்­புச் செயல் திட்­டம்' என்­னும் பெய­ரில் இது ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. "இந்­தத் தவ­ளையா பொறந்­தி­ருக்­க­லாமோ?" என்று சிவா சொல்ல எல்­லா­ரும் சிரித்­த­போ­தும் ராசண்­ண­னின் முகம் மட்­டும் வாடியே இருந்­தது. 

குறுந்­த­க­வல் வந்த ஒலி­யைக் கேட்டு போனை எடுத்­தேன்.

என் நண்­பர்­கள் குழு­வில் 'கல்­லூ­ரிக்­குச் செல்­லும் பெண்­ணின் களி­யாட்­டம்' என்­னும் தலைப்­பில் ஒரு­வன் வீடியோ ஒன்றை அனுப்­பி­யி­ருந்­தான். மேற்­பார்­வை­யா­ள­ரின் கண்­கள் என்னை நோட்­ட­மிட போனை பாக்­கெட்­டில் வைத்­து­விட்­டேன். எப்­படா மணி பன்­னி­ரண்டு ஆகு­மென அந்த வீடி­யோவை எண்ணி மனம் சுழன்­றது. சாப்­பாட்­டுப் பையை எடுத்­துக்­கொண்டு நிழலை நோக்கி எல்­லா­ரும் செல்ல, நான் தள்­ளிப் போனேன்.

'இந்­தப் பொண்ண எங்­கியோ பாத்­தி­ருக்­கேனே!' மூணா­வது முறை அந்த வீடி­யோ­வைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது, "அட... பலான வீடி­யோ­வைப் பாக்­கத்­தான் அவ்ளோ அவ­ச­ரமா கெளம்­பிப் போனியா?" என்று என் பின்­னா­லி­ருந்து எட்­டிப் பார்த்த சிவா கேட்­டான். சட்­டென கைக­ளைப் பின்­னால் இழுத்­துக்­கொண்­டேன். என் கையி­லி­ருந்த போனை பிடுங்­கு­வா­னென நான் கொஞ்­ச­மும் எதிர்­பார்க்­க­வில்லை.

"டேய்... இது ராசண்­ண­னோட பொண்­ணுடா," என்­றான். 'அது உண்­மை­யாக இருக்­கக்­கூ­டாது என நினைத்து அவ­ரது வாட்­சப் ப்ரோ­ஃபைல் பக்­கத்தை எடுத்­தேன். 'உன் சந்­தே­கம் தீர்ந்­ததா?' சிவா என்­னி­டம் பார்­வை­யால் கேட்­டான். 

அந்த வீடி­யோவை உடனே டிலிட் செய்­யச்­சொல்லி அதைப் போட்ட நண்­ப­னுக்­குப் போன­டித்­தேன். அதற்­குள், "இது போட்டோ ஷாப் செஞ்ச வீடியோ," என்று வேறொ­ரு­வ­னி­ட­மி­ருந்து இன்­னொரு குறுந்­த­க­வல் வந்­தது.

வீடியோ 'டிலிட்' ஆன­பி­ற­கு­தான் என்­னால் நிம்­ம­தி­யாக மூச்­சு­விட முடிந்­தது.

"ஆமாம், இந்த சிவா எங்கே?"

எம்­ஆர்­டி­யில் கார்டை அடித்­து­விட்டு வெளியே வந்­த­பி­ற­கு­தான் நான் தவ­றான நிறுத்­தத்­தில் இறங்­கி­யி­ருந்­தது புரிந்­தது.

*

"நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு திடீ­ரென இந்­தி­யா­வுக்­குப் புறப்­பட்­டுப் போன ராசண்­ணனை இன்­று­தான் பார்த்­தேன்.

"காத­லிக்க மறுத்­தாள் என எந்­தப் படு­பா­வியோ செய்த அப்­ப­டி­யொரு காரி­யத்­தால் ராசண்­ணன் அவ­ரது மகளை இழந்து தவிக்க நேரிட்­டது.

"என்­னி­டம் ஒரு நல்ல நண்­ப­னா­க­வும் அண்­ண­னா­க­வும் அர­வ­ணைத்து அன்­பு­காட்­டிய ராசண்­ணா­வுக்கு நண்­ப­னா­கவோ தம்­பி­யா­கவோ எந்­த­வ­கை­யி­லும் உதவ முடி­யா­மல் போன வேதனை இன்றைக்­கும் என்னை வாட்­டு­கிறது."

***

(சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம், 2021 முத்­த­மிழ் விழாவை ஒட்டி நடத்­திய சிறு­க­தைப் போட்டி பொதுப்­பி­ரி­வில் ஊக்கப் பரிசு பெற்ற கதை)