அன்பான கொரோ னாவே
நின்று நிலையாக நிலமெல்லாம்
குடும்ப விருத்தி யுடன்
குழந்தை குட்டி பெற்றெடுத்து
நலமாக நீ வாழ
நலமிழந்த மக்க ளெல்லாம்
உலகெலாம் உயிர் கொடுத்து
உனை வளர்த்த நாடுகளை
அரசின் அறிவுரையை
செவிமடுக்கா
அறிவுசார் பெரு மக்கள்
எனக்குத் தெரியு மென்று
எள்ளி நடமாடி டுவார்
பாகு பாடு இல்லாமல்
பதம் பார்த்த பெருநோயே
எத்தகைய மருந் துக்கும்
எதிர் மறையாய் வாழுமுனை
மருந்தொன்றை நாம் கண்டால்
நோயொன்றை புதுப் பெயரில்
புலம்பெயர்ந்து போகு முனை
போகுமிடம் நாம் அறியோம்
வரம் வாங்கி வந்ததுபோல்
வந்தமர்ந்து விருந்தின ராய்
தரம் தாழ்ந்து மக்கள்தனை
தலைமுறையை மறக்க வைத்து
கொடை கொடுக்கும் வள்ளல்போல்
கொடுமை செய்த
கொரோனாவே
தடை விதிக்கும் அரசுகளை
தாரை ஊதி வாழ்த்தவேண்டும்
தொற்றுவதும் பற்று வதும்
முற்றுவதும் முடக்கு வதும்
கற்ற றிந்த பெரியவரை
கல்லறைக்குள் அடக்கு வதும்
களப்பணி செய்த வரை
காலனுக்கு கொடுத்து விட்டு
கலங்கி நிற்கும் பெற்றவரை
கைகூப்பி வணங் கிடுவோம்!