தலைப்பு: மணல் நதி
நூலாசிரியர்: பாலகுமாரன்
பதிப்பாளர்: சென்னை : விசா பப்ளிகேஷன்ஸ், 2013.
குறியீட்டு எண்: Y Tamil BAL
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
மணல் நதி புகழ்பெற்ற நாவலாசிரியர் பால
குமாரன் எழுதிய இரு சிறுகதைகளை உள்ளடக்கிய நூல்.
வாழ்க்கை என்ற மணல் நதியில் நீரால் மகிழ்ச்சியும் வெப்பத்தால் துக்கமும் கலந்து இருப்பதை ஒப்பிட்டுச் சொல்கிறது முதல் கதை. பேருந்தில் காசி, கயா, அலகாபாத் ஊர்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா செல்லும் ஐந்து கதாபாத்திரங்களின் ஊடே உரையாடலாய் விரிகிறது கதை. பித்ருக்களுக்குச் செய்யும் சிரார்த்தம் பற்றி ஆன்மீகத் தத்துவ விளக்கங்களுடன் சீனிவாசன் என்ற கதாபாத்திரம் விவரிக்கிறார். ஒவ்வொரு சடங்கும் முறையான ஓர் அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதிலிருந்து மாறுபட வேண்டிய சூழ்நிலைகளில் மாற்று வழியும் உள்ளது. உதாரணமாக கணவன், மனைவி சேர்ந்து செய்யும் சடங்கில் யாராவது ஒருவர் வர முடியாவிட்டால் ஒரு கைப்பிடி புல் கட்டு அதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.
தன்னை எவ்வளவுதான் துன்புறுத்தினாலும் இறந்த கணவனின் ஆத்மா சாந்தி அடைய காரியங்கள் செய்யும் ஒரு மனைவி. ஏழேழு ஜென்மங்களுக்கு இவரே கணவன் ஆக வேண்டும் என்று முடிக்காணிக்கை அளிக்கும் இன்னொரு மனைவி. இதுபோன்ற முரண்பட்ட பாத்திரங்களின் சங்கமத்தில் உருவான கதை மணல் நதி.
அடுத்த கதை "நேற்று வரை ஏமாற்றினாள்". கணேசன், நீலா, சந்துரு என்ற முக்கோணக் கதாபாத்திரங்களின் உறவில் ஏற்படும் சிக்கலும் அந்தச் சிக்கலை எதார்த்த நடைமுறைகளில் தீர்க்கும் மன்னி என்ற கதாபாத்திரமும் கதையை எடுத்துச் செல்கின்றன. கணவன் மனைவி அன்னோன்யம், கல்யாணத்துக்கு முன்னிருக்கும் நட்பு, காதல் பற்றிய வெளிப்படைத்தன்மை, அதனால் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவை கதையின் மையக் கருத்துகள்.
நூலாசிரியர் தியான நிலையில் தனக்கே உரிய பாணியில் கதைகளை வித்தியாசமாக முடித்திருப்பது இன்னும் சிறப்பு.
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg