கி. சுப்பிரமணியம்
கம்பனைத் தாண்டிக் கவியில்லை என்றோர்க்கு
சிம்மமென ஏடெடுத்த செம்மல் - இம்மையில்
பாரதி போன்றதொரு பாட்டுப் புலவன்போல்
பாரினில் கண்டதில்லை பின்
கற்றோர் புகழக் கவிதை இயற்றாது
மற்றோரும் போற்றி மகிழ்ந்திட - வற்றா
எளிய நடையினில் எல்லோரும் பாடிக்
களிப்புறச் செய்த கவி
முண்டாசு கட்டி முழக்கமிட்டுப் பாடுவான்
கண்களில் தீப்பொறிகள் கக்கிட - எண்ணில்
புவியில் எழுச்சிமிக்க இன்பத் தமிழில்
கவிபாட இன்னொருவன் காட்டு

