கண்குளிர செவிமலரும்
கண்டுணர நிலையுயரும்
நன்குணர நற்காலும்
நலமருளும் அருவுருவும்
வளர்பிறையாய் ஒளிபெருகும்
வண்ணமிகு அணுக்களாலே
அளப்பரிய ஆற்றலையே
அனுதினமும் உள்வாங்கி
நீரின்று உப்பெடுக்க
நித்தியமும் கரைவாயே
பிரிகின்ற அணுக்களிலே
புதைக்கின்ற ஞானத்தை
நிலத்தினிலே சத்தெடுத்து
நிலைத்திடவே வேரூன்று
உலகமுமே உய்வுறவே
உற்றதுணை புரிந்தோங்கு!
- இராம நாச்சியப்பன்