வேண்டும்... வேண்டாம்...

வேண்டும்... வேண்டாம்...

1 mins read

இராம நாச்சியப்பன்

மாயை தீண்டா மதியும் வேண்டும்

மனமும் நிறைய மகிழ்வு வேண்டும்

தாயைப் போற்றித் துதிக்க வேண்டும்

தந்தை சொல்லை மதிக்க வேண்டும்

காயைப் போன்றோர் கனிய வேண்டும்

காலம் கடந்த ஞானம் வேண்டும்

நோயைத் தொலைத்த நிம்மதி வேண்டும்

நொடியில் வாழப் பழக வேண்டும்

அசைவம் உண்ணும் ஆசை வேண்டாம்

அன்பை அழிக்கும் ஆணவம் வேண்டாம்

இசையில் நனைய அஞ்ச வேண்டாம்

இன்னல் நல்கும் ஏச்சொல் வேண்டாம்

விசையில் இயக்கம் வீணுற வேண்டாம்

விரும்பா தவரை வெறுக்க வேண்டாம்

திசைகள் மாறிப் போக வேண்டாம்

தனிமைப் பட்டால் தவிப்பும் வேண்டாம்