செங்கதிரோன் துணை கொண்டு!
செங்கரும்பின் சுவை கண்டு!
புதுப்பானை பொங்கலிட்டு.. பால்
பொங்கும்போது குலவையிட்டு
பொங்கலோ பொங்கல் என்று
பொங்கும் மகிழ்ச்சியுடன்
முழக்கமிட்டு..!
உழவர் திருநாளாம்..
உழைக்கும் மக்களின் பெருநாளாம்...
தைப்பொங்கல் திருநாளை
தரணியில் மகிழ்ச்சியுடன்
கொண்டாடுவோம்!
- தென்மாப்பட்டு அ.ராஜா