உழைப்பு வெற்றியைப் பகிர்ந்தளிக்கிறது
உண்டாகும் களைப்போ
உற்சாகத்தைப் படரவிடுகிறது
பேச்சைக் குறைக்கின்ற உழைப்பு
பெரியதொரு சிந்தனையாகி
பெருமையுடன் சாதிக்கிறது
கருவியாகி உருவாகி நின்று
காரணமாய் நடத்திச் செல்லும்
கைகளுக்கு கௌரவம் சேர்க்கிறது
உழைப்புக்கு இத்தனை சிறப்பாவென
புருவத்தை உயர்த்தும் சிந்தனை
உழைத்தவன் உயர்ந்தானா என
கேட்க வேண்டாமா?
உலகத்தில் நிலைத்தானா என
உரக்கக் குரல் கொடுக்க வேண்டாமா?
-சித. அருணாசலம்

