அஞ்ஞானம் அகன்றால் அது தோன்றும்
அறிவைக் கடந்து பயணித்தால் அது தோன்றும்
தோற்றுத் தோற்றுக் கலங்கும்
போதும் அது தோன்றும்
மன வேதனையின் உச்சத்தில்
அது முன்வந்து தோன்றும்
எப்படிப் போகலாம் என்று
கலங்கும்போதும் அது தோன்றும்
பிணிதரும் பீதியிலும் வலிதரும் மீதியிலும்
அது முன்னின்று தோன்றும்
மயிரிழையில் உயிர்பிழைத்தால்
அது அழையா விருந்தாளியாய்த் தோன்றும்
துயரின் பிடியில் துவளும்
போது அது விளக்காய்த் தோன்றும்
செய்தவற்றை மெய்யாய் உணரும்
தருணம் அது தோன்றும்
பிறர் செய்யும் தவற்றை மனதார
மன்னிக்கும்போதும் அது தோன்றும்
பிரதிபலனில்லா அன்பை பிறருக்குத்
தந்தால் அது மனதில் தோன்றும்
தோன்றா இறைவன் கருணை
உள்ளத்தில் தோன்ற அனைத்தும் தோன்றும் தோன்றும்
ஒழுக்கம் தவறாது ஒழுகினால்
உன் வாழ்வில் தோன்றும் அனைத்தும் துலங்கும்
- இராம நாச்சியப்பன்

