தலைப்பு: ஆரண்ய காண்டம்
நூலாசிரியர்: கொ.மா.கோதண்டம்
பதிப்பாளர்: சென்னை, தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 2015.
குறியீட்டு எண்: Tamil KOT
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
20ஆம் நூற்றாண்டின் குறிஞ்சிக் கபிலர் என்று போற்றப்படும் நூலாசிரியரின் "காட்டுக்குள்ளே இசை விழா" என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
பதினொரு சிறுகதைகளும் ஆரண்ய காண்டம் என்ற நெடுங்கதையும் கொண்ட இந்நூல் இந்தியக் குடியரசுத் தலைவர் விருதுபெற்ற நூலாகும்.
எளிய மக்களுடன் நேரிடையாக தொடர்புகொண்ட எழுத்தாளர் என்பதை அவரின் ஒவ்வொரு கதை மூலமும் நன்கு உணர முடிகிறது.
மண் வாசனையைப்போல இவரின் கதைகளில் எழில் கொஞ்சும் மலைகளின் அழகு கொஞ்சுகிறது.
"ஓ... அந்த உயர்ந்த மலைகளின் அடர்ந்த காடுகளுக்குள்ளே!" என்கிற கதையில் வனாந்திரத்தில் புதைந்து கிடக்கும் மரஞ்செடிகளையும் மிருகங்களின் நடமாட்டத்தையும் நன்கு விவரித்து நம்மையும் பத்திரமாக அடர்ந்த காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்.
'தட்டுப்பலா' என்கிற விஷச்செடியைப்பற்றி அரிதான தகவலையும் தந்திருக்கிறார்.
ஆனால், கதையில் துயரத்தையும் நெஞ்சைப் பிழியும் முடிவையும் தந்து உள்ளார்.
'நைட் வாட்ச்மேன்' கதையில் மனிதனுக்குத் தேவை தூக்கம் என்பதை உணர்த்தியுள்ளார்.
'வாழ்க்கைச் சுமை', 'ஒரு வாய்க் கஞ்சி' கதைகளில் வாழ்க்கைப் போராட்டங்களை உருக்கமாகப் படைத்திருக்கிறார். பெண் மனதின் அற்புதத்தை அறியாதவர்களுக்கு 'ஓ...இவளிடமும்' கதையில் விடை கிடைக்கும்.
மேலும், 'புகழுக்குப் பின்னே...', 'கல்யாணச் சாப்பாடு', 'வைரமோதிரம் எங்கே?' போன்ற அருமையான சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg
-தேசிய நூலக வாரிய நூல் அறிமுகக் குழு

