தலைப்பு: அன்பே ஆரமுதே
நூலாசிரியர்: தி. ஜானகிராமன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம், 2019.
குறியீட்டு எண்: Tamil JAN
அனைத்து உரிமைகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை.
'அன்பே ஆரமுதே' என்ற இந்தக் கதை, கல்கியில் தொடராக 1960களில் வெளிவந்தது. கதையின் நாயகனான அனந்தசாமி திருமணத்திற்கு ஒருநாள்முன் துறவறம் மேற்கொள்கிறார்.
முப்பது ஆண்டுகாலம் சந்நியாசியாக அலைந்தபின், தனக்கு நிச்சயித்த பெண்ணைச் சந்திக்கிறார். அவளும் மானசீகமாக அவரையே காதலித்து வாழ்கிறாள்.
பெண் பார்க்கும் படலம் சுற்றம் சூழ நிகழ்கிறது. சில நொடிகள் மட்டுமே மாப்பிள்ளையின் முகம் கண்டு, காதல் வயப்பட்டு, அவரையே நினைத்து வாழ்நாள் முழுவதையும் அவருக்கே அர்ப்பணிக்கும் ருக்குமணியின் மனஉறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது! இறைவனை எண்ணி இல்லற வாழ்க்கையைத் துறந்த அனந்தசாமி துறவியா, அல்லது அவரையே நினைத்து வாழ்நாளைக் கழித்த ருக்குமணி துறவியா என்ற கேள்வி எழுகின்றது.
முப்பது ஆண்டுகாலம் இவர்கள் வாழ்வில் நடந்த உளவியல் சார்ந்த சம்பவங்களை ஆசிரியர் தமக்கே உரிய நடையில் சொல்லி வாசகர்களைக் கதாபாத்திரத்தோடு கதாபாத்திரமாக மாற்றிப் பயணம் செய்ய வைத்திருப்பது சிறப்பு.
இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg

