நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்

1 mins read
a6595fd9-f906-4508-867c-adfb209704ee
-

தலைப்பு: அன்பே ஆர­முதே

நூலா­சி­ரி­யர்: தி. ஜான­கி­ரா­மன்

பதிப்­பா­ளர்: காலச்­சு­வடு பதிப்­ப­கம், 2019.

குறி­யீட்டு எண்: Tamil JAN

அனைத்து உரி­மை­களும் காப்­பு­ரி­மைக்கு உட்­பட்­டவை.

'அன்பே ஆர­முதே' என்ற இந்­தக் கதை, கல்­கி­யில் தொட­ராக 1960களில் வெளி­வந்தது. கதை­யின் நாய­க­னான அனந்­த­சாமி திரு­ம­ணத்­திற்கு ஒருநாள்முன் துற­வ­றம் மேற்­கொள்­கி­றார்.

முப்பது ஆண்டுகாலம் சந்­நி­யாசி­யாக அலைந்­த­பின், தனக்கு நிச்­ச­யித்த பெண்­ணைச் சந்­திக்­கி­றார். அவ­ளும் மான­சீ­க­மாக அவ­ரையே காத­லித்து வாழ்­கி­றாள்.

பெண் பார்க்­கும் பட­லம் சுற்­றம் சூழ நிகழ்­கிறது. சில நொடி­கள் மட்­டுமே மாப்­பிள்­ளை­யின் முகம் கண்டு, காதல் வயப்­பட்டு, அவ­ரையே நினைத்து வாழ்­நாள் முழு­வதை­யும் அவ­ருக்கே அர்ப்­ப­ணிக்­கும் ருக்கு­ம­ணி­யின் மனஉறுதி மெய்­சிலிர்க்க வைக்­கிறது! இறை­வனை எண்ணி இல்­லற வாழ்க்­கை­யைத் துறந்த அனந்­த­சாமி துற­வியா, அல்­லது அவ­ரையே நினைத்து வாழ்­நா­ளைக் கழித்த ருக்­கு­மணி துற­வியா என்ற கேள்வி எழு­கின்றது.

முப்பது ஆண்­டு­கா­லம் இவர்­கள் வாழ்­வில் நடந்த உள­வி­யல் சார்ந்த சம்­ப­வங்­களை ஆசி­ரி­யர் தமக்கே உரிய நடையில் சொல்லி வாச­கர்­களைக் கதா­பாத்­தி­ரத்­தோடு கதா­பாத்­தி­ர­மாக மாற்றிப் பய­ணம் செய்ய வைத்­தி­ருப்­பது சிறப்பு.

இந்த நூல் கிடைக்கும் நூலகங்களின் விவரங்களைப் பெற: http://catalogue.nlb.gov.sg