ஊருக்கு ஓரத்திலே
ஒத்தையாய் நிக்குதடி
ஒசந்து நிக்கும் ஆலமரம்
ஆலமரக் கிளைகளிலே
வானத்து விண்மீன்கள்
வந்திறங்கி வந்ததுபோல்
காட்சி தந்து கண் சிமிட்டும்
ஓராயிரம் மின்மினிப் பூச்சிகள்
ஒளி கூட்டி நின்றாலும் - என்
அத்தானைக் காணலையே
இந்த அத்தமகள் நெஞ்சினிலே
வெளிச்சம் இன்னும்சேரலையே!
- கோ. கணபதி

