சிகரம் தொட்ட சிங்கை வாழி!

சிகரம் தொட்ட சிங்கை வாழி!

1 mins read

அறமும் பொருளும் ஆண்டுதோறும்

அரசில் நிலைக்க மாற்றம் நேரும்

வரவும் செலவும் இருந்தும் கூட

வளமை குறையா வளரும் நாடு

இரவும் பகலும் உழைப்பை நம்பி

என்றும் இருக்கும் நாடு தம்பி

திறமை கொண்டோர் திருவும் சேர்ந்தே

திகழ்வார் வாழ்வில் செழிப்பாய் இங்கே

பரவும் பிணிகள் பறந்து போக

பற்றிய சிரமம் பலவாய் ஆக

பிறந்த நாளில் மகிழும் தாயே

பெருமை சேர ஒளிர்வாய் நீயே

சிறந்து உலகில் விளங்கும் நாடு

சிகரம் தொட்டு மாலை சூடு

சிரமேற் பணிந்து; உயர மேலே

சிங்கை என்றும் இனிதாய் வாழி!

- இராம நாச்சியப்பன்