உற்றுழி

உற்றுழி

9 mins read

சிறுகதை

பிரதீபா

அன்று பௌர்­ணமி. வெள்­ளிப் பந்­தாக ஒளிர்ந்த நிலவின் ஒளி நில­வு­லகை ஒளிர்­வித்­துக் கொண்­டி­ருக்­கக் கபி­லா­வின் மனமோ அந்த வானம்­போல இருண்டு கிடந்­தது, பூங்­கா­வின் ஓரத்­தில் கிடந்த இருக்­கை­யில் சோகச் சித்­தி­ரம்­போல் அமர்ந்­தி­ருந்த அவ­ளின் கண்­கள்­மட்­டும் நிலவை வெறித்­துப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தன.

இவ­ளின் நிலைக்கு முற்­றி­லும் மாறு­பட்டு அன்று பூங்­கா­வின் சூழலோ மகிழ்ச்சி அலை­யில் பரவிக்கிடந்­தது.

வீசிய மெல்­லிய பூங்­காற்று தாலாட்டுப் பாட இயற்­கை­யின் அமு­தைப் பரு­கி­ய­படி மெதுநடை செல்­வோர் மெல்ல நடைபோட்­டுக் கொண்­டி­ருந்­த­னர்.

சற்று வயது முதிர்ந்த பெரி­ய­வர்­கள் கை, கால்­களை அசைத்­துச் சீனப் பாரம்­ப­ரிய உடற்­ப­யிற்சிக் கலை­யான 'தைச்­சியை', செய்துகொண்­டி­ருந்­தார்­கள்.

விளை­யாட்­டுத் திட­லில் சிறு­வர்­கள் இவ்­வு­ல­கத்து இன்­பத்­தை­யெல்­லாம் ஒட்டுமொத்­த­மாக அனு­ப­வித்துவிட்ட மகிழ்ச்­சி­யில் சத்­தம் போட்டு விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தார்­கள்.

சிறு­வர்­க­ளின் மகிழ்ச்சி ஒலி­யும், அவர்­க­ளின் கள்ளங்கப­ட­மற்ற சிரிப்­பும் காதில் விழும் போதெல்­லாம் இனம்புரி­யாத வேத­னை­யில் அவள் தத்­த­ளித்­தாள். அவ­ளின் எண்­ண­மெல்­லாம், கவி­னைச் சுற்­றியே வட்­ட­மிட்­டுக் கொண்­டி­ருந்­தது.

அவ­னி­டம் அப்­ப­டிக் கேட்­டி­ருக்­கக்­கூ­டாது. ஏற்­கெ­னவே மனச்­சஞ்­ச­லத்­தில் இருப்­ப­வ­னி­டம் கொஞ்­சம் நிதா­ன­மாக யோசித்­துப் பேசி­யி­ருக்க வேண்­டும். பாவம்! பிள்­ளை­யின் முகம் துவண்­டு­போய், கண்­களில் கண்­ணீர் திரண்டு விட்­டது.

நான்கு மாதங்­க­ளுக்கு முன்பு வரை, இந்­தப் பிள்­ளை­கள் போன்று எவ்­வ­ளவு மகிழ்ச்­சி­யா­கத் துள்­ளித் திரிந்­து­கொண்­டி­ருந்­தான்.

கன்­னத்­தில் குழி விழ, அவன் சிரிக்­கும் சிரிப்பை நாள் முழுக்­கப் பார்த்­துக்­கொண்­டே­யி­ருக்­க­லாம்.

உல­கமே அப்பா என்று நினைத்­துக்­கொண்­டி­ருந்­த­வ­னுக்கு, அவ­ரின் எதிர்­பா­ராத மர­ணம் அந்­தப் பிஞ்சு மனதை அப்­ப­டியே புரட்­டிப் போட்­டு­விட்­டது.

முன்­பெல்­லாம் வாய் ஓயா­மல் பேசிக் கொண்­டி­ருந்­த­வன், இப்­பொழு­தெல்­லாம் பேசு­வ­தையே மறந்­த­வன்­போல் அமை­தி­யாகிவிட்­டான்.

இதோ! இந்­தப் பௌர்­ணமி நில­வைப் பார்த்­தால் போதும் அவ­னு­டைய மகிழ்ச்­சிக்கு அளவே இருக்­காது. ஒரே குஷி­யாகி விடு­வான்.

"அப்பா! அதில பாருங்க முயல் தெரி­யுது. அம்மா! இப்போ பாருங்க யானை தெரி­யுது," என்று நில­வில் தோன்­றும் காட்­சிக்­கெல்­லாம் தன் மன­தில் தோன்­றும் உரு­வங்­க­ளைக் கொடுத்­துத் துளைத்­தெ­டுத்து விடு­வான்.

அவள் கண­வன் இளங்­கோவோ இன்­னும் ஒரு­படி மேலே போய்க், கபிம்மா! என்ன இருந்­தா­லும் அந்த வெண்­ணி­ல­வோட அழகு உன்னை விட கம்­மி­தான் என்று கூறி, அவள் கன்­னம் சிவக்க வைத்­தி­ருப்­பான்.

இளங்­கோவை நினைத்த மாத்­தி­ரத்­தில் நெஞ்­சுக்­கு­ழிக்­குள் துக்­கம் நீருற்­றாய்ப் பீறிட மனத்­தில் சொல்­ல­வொண்ணா வேதனை அழுத்­தி­யது.

கண்­களில் கண்­ணீர் திரை­யிட தன்னை இப்­ப­டித் தனியே தவிக்­க­விட்­டுச்சென்ற தன் கண­வனை எண்ணி ஒரு­பக்­கம் கோப­மும் இய­லா­மை­யும் பொங்க, மறு­பக்­கம் அவன்பால் கொண்ட அன்­பும் பாச­மும் அதற்கு அணை­யிட்­டது.

எத்­தனை மகிழ்­வான தரு­ணங்­கள்.

எத்­தனை இனி­மை­யான பொழு­து­கள்.

அத்­த­னைக்­கும் இந்த வெண்­ணி­லவே சாட்சி.

அவ­ளின் கண்­கள், மேகங்­களுக்கு இடையே நகர்ந்து செல்­லும் வெண்­ணி­லவைப் பார்த்­த­படி இருக்க, மனமோ பழைய நினைவு­களின் ஊடே மெல்­லப் பய­ணிக்­கத் தொடங்­கி­யது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டப்­படிப்பை முடித்த பிறகு, வேலைக்­காக முயற்சி செய்­து­கொண்­டி­ருந்த சம­யத்­தில், பிர­ப­ல­மான கட்­டு­மான நிறு­வ­னத்­தில் செயலாளராக அவ­ளுக்கு வேலை கிடைத்­தது.

அதே நிறு­வ­னத்­தில், தலைமை பொறி­யா­ள­ராக வேலை செய்து வந்­தான் இளங்கோ.

ஆரம்­பக் காலங்­களில், பணி­கார­ண­மாக இரு­வ­ரும் அவ்வப்போது சந்­தித்து உரை­யா­டிக் கொள்­வ­துண்டு. அத்­து­டன் அவ­னு­டன் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் சிலர் அவ­னின் குணத்­தைப் பாராட்டிக் கூறு­வ­தைக் கேட்­டி­ருக்­கி­றாள்.

அவ்­வ­ளவுதான். மற்­ற­படி அவ­னைப் பற்­றிப் பெரி­தாக ஒன்­றும் அப்­பொ­ழுது அவள் அறிந்­தி­ருக்­க­வில்லை.

ஒவ்­வோர் ஆண்டும் அவ­ளு­டைய தாத்­தா­வின் நினைவு நாளன்று முதி­யோர் இல்­லத்­திற்­குச் சென்று அங்­குள்­ள­வர்­க­ளுக்கு உணவு வழங்கிவிட்டு வரு­வது அவ­ளின் குடும்ப வழக்­கம்.

அந்த ஆண்டு முதி­யோர் இல்­லத்­திற்கு உணவு வழங்கச் சென்ற இடத்­தில் அங்­கு உள்­ள­வர்­க­ளுக்­குத் தேவை­யான உத­வி­க­ளைச் செய்துகொண்­டி­ருந்த இளங்­கோ­வைப் பார்த்­த­தும் அவ­ளுக்கு ஆச்­ச­ரி­யம் தாள­வில்லை. அதை அவ­னி­டம் கேட்­டும் விட்­டாள்.

"இதுல ஆச்­ச­ரி­யப்­ப­டு­ற­துக்கு ஒண்­ணும் இல்லை கபிலா. இங்க இருக்­கிற பெரி­ய­வர்­கள் எல்­லாம் வசதி வாய்ப்­பற்றவர்களும் பிள்­ளை­களால் கைவி­டப்­பட்­ட­வங்களும்தான்.

இவங்­க­ளுக்கு இந்­தக் காப்­ப­கமே, தேவை­யான உணவு, உடை போன்ற வச­தி­களை எல்­லாம் செய்து கொடுக்­குது. இருந்­தா­லும், அதை­யெல்­லாம் தாண்டி இவங்­க­ளுக்­குத் தேவை­யா­னது பரி­வும், கனி­வான பேச்சு மட்­டும்­தான். இந்த வய­தான காலத்­துல இவங்க அத மட்­டும்­தான் எதிர்­பார்க்­கு­றாங்க.

ஓய்வு நேரத்­துல வந்து என்­னால முடிந்த உத­வி­க­ளைச் செஞ்­சுட்டு இவங்ககூட நேரத்தை செல­வ­ழிப்­பேன். பள்­ளி­நாட்­களில், புறப்­பா­டப் நட­வ­டிக்­கை­யின் பொருட்­டுத் தொடங்­கிய இந்­தப் பழக்­கம் பின்­னர் என்­னு­டைய பெற்­றோர் கொடுத்த ஊக்­கத்­தால் இப்­ப­வும் தொடர்ந்து செஞ்­சி­கிட்டு வர்­றேன்.

நான் மட்­டு­மல்ல என்­னைப் போன்று பலர் இதில ஈடு­பட்டு வர்­றாங்க. அது மட்­டு­மல்­லாம, உங்­க­ளைப் போன்ற சில நல்ல உள்­ளங்­களும் அவ்­வ­போது வந்து உத­விக்­க­ரம் நீட்­டு­றாங்க. ஆகை­யால, இது என்­னு­டைய தனிப்­பட்ட முயற்­சி­யல்ல. இது ஒரு கூட்டு முயற்சி," என்­ற­வ­னைப் பிர­மிப்பு அக­லா­மல் பார்த்­தாள்.

விடு­முறை கிடைத்­தால் சினிமா, கடைத்­தொ­குதி என்று ஊர் சுற்­றும் இளை­யர்­க­ளுக்கு இடையே, மிக உயர்ந்த பத­வி­யில் இருந்­தா­லும் அன்­பாய், அடக்­க­மாய் மற்­ற­வர்­க­ளுக்கு உத­வும் அவ­னின் குணத்தைக் கண்டு வியந்து போனாள். அதன் பிறகு, அவ­ளும் நேரம் கிடைக்­கும் போதெல்லாம் அவ­னு­டன் காப்­ப­கத்­துக்­குச் செல்ல ஆரம்­பித்­தாள்.

இதன் பிறகு, இரு­வ­ருக்­கும் இடை­யே­யான நட்பு மெல்ல மெல்­லக் காத­லாக மாறியது.

பெற்­றோ­ரின் சம்­ம­தம் பெற்று இல்­லற வாழ்­வில் அடி­யெ­டுத்து வைத்­த­னர்.

அவர்­க­ளின் இன்ப வாழ்­வின் அடை­யா­ள­மாய்க் கவின் பிறந்­தான்.

வாழ்க்­கை­யின் ஓட்­டத்­தில், கிட்­டத்­தட்ட பத்து ஆண்­டு­கள் போன வேகம் தெரி­ய­வில்லை.

இந்த நிலை­யில், எந்­தக் குணத்­தைக் கண்டு அவள் காதல் கொண்­டாளோ, எந்­தக் குணம் அவர்­கள் வாழ்வை இணைத்­ததோ, அந்­தக் குணமே ஒரு நாள் அவ­னுக்கு யம­னா­கிப் போன செய்­தி­யைக் கேட்டு நொறுங்­கிப் போனாள்.

கட்­டு­மா­னத் தளத்­தில் நடந்த விபத்­தில், சக ஊழி­ய­ரைக் காப்­பாற்றப் போய், அதே இடத்­தில் அவன் பலி­யான செய்­தி­யைக் கேட்­டுத் துடித்­துப் போனாள். அழு­தாள்; புரண்­டாள். அவன் நினை­வு­களில் சிக்­கித் தவித்த அவள் மனம் அவ­னில்லா நிலையை ஒப்­புக்­கொள்ள மறுத்­தது.

இளங்­கோ­வின் எதிர்­பா­ராத இந்த மர­ணம் அவளை மட்­டு­மல்ல கவி­னை­யும் வெகு­வா­கப் பாதித்து விட்­டது.

எட்டு வயது என்­பது இழப்பை உண­ரக்கூடிய வயதா?

சொல்­ல­வும் முடி­யா­மல், மெல்­ல­வும் முடி­யா­மல் தவிக்­கும் அந்த இளங்­கு­ருத்­தின் வேத­னை­யைத் தேற்­று­வ­தற்கு வழி தெரி­யாது திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கி­றாள்.

தகப்­ப­னைத் தேடும் தளி­ரின் உள்­ளம் புரிந்­தும், அத­னைத் ஆற்­றும் வழி அறி­யாது தவித்­துக்­கொண்­டி­ருக்­கி­றாள்.

இளங்­கோவை இழந்த வேதனை ஒரு­பு­றம் என்­றால், தந்­தை­யின் இழப்­பைத் தாங்­கா­மல் தவிக்­கும் கவி­னின் நிலைமை மறு­பு­றம் என்று துய­ரத்­தின் விளிம்­பில் நின்று தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருக்­கி­றாள்.

இரவு நேரங்­களில், தூக்­கத்­தில் எழுந்­து­கொண்டு அப்பா! அப்பா! என்று அல­றும் நேரத்­தில், அவ­னைச் சமா­ளிப்­ப­தற்­குள் அவ­ளுக்­குப் போதும்போதும் என்­றாகி விடும்.

வீட்­டில் மட்­டு­மல்ல பள்­ளி­யி­லும் அதே நிலை­யில்­தான் இருந்­தான். யாரு­ட­னும் அதி­கம் பேசா­மல், படிப்­பில் கவ­ன­மின்றி எப்­பொ­ழு­தும் சோக­மாக இருந்­தான்.

கவி­னின் சூழ்­நி­லை­யைப் புரிந்துகொண்டு ஆசி­ரி­யர்­களும் அவ­னுக்கு வேண்­டிய ஆலோ­ச­னை­க­ளைக் கொடுத்து,

அவ­னைப் பழைய நிலைக்­குக் கொண்டுவர, தேவை­யான உத­வி­களைச் செய்து வந்­தார்­கள்.

காலம் செல்­லச் செல்­லக் காயங்­கள் ஆறும், அது­வரை சற்­றுப் பொறு­மை­யா­கத்­தான் இருக்க வேண்­டும், என்று தன் வேத­னையை வெளிக்­காட்­டாது அவ­னைப் பழைய கவி­னாக மாற்­றப் படா­த­பாடு பட்­டு­கொண்­டி­ருக்­கி­றாள்.

இந்­நி­லை­யில், இன்று காலை­யில் கவி­னின் பள்ளி ஆசி­ரி­ய­ரி­ட­மி­ருந்து அவ­ளுக்­குத் தொலைபேசி அழைப்பு வந்­தது.

"நாளை முடிந்­தால் பள்­ளிக்கு வாருங்­கள், உங்­க­ளி­டம் கவி­னைப் பற்­றிப் பேச வேண்­டும்," என்­ற­தும் பதறிவிட்­டாள்.

"கவி­னுக்கு என்­னாச்சு? ஏதா­வது பிரச்­ச­னையா?" என்று பட­படப்­பு­டன் கேட்­டாள். அதற்கு அவர், "பதட்­டப்­ப­டா­தீங்க! அப்­ப­டி­யெல்­லாம் ஒண்­ணு­மில்ல. நாளைக்கு நீங்க பள்­ளிக்கு வாங்க. விரி­வாப் பேச­லாம்," என்று கூறித் தொலைபேசியை வைத்துவிட்­டார்.

அதன் பிறகு, அவர் எதற்­காக வரச் சொல்­லி­யி­ருப்­பார் என்ற சிந்­த­னை­யி­லேயே இருந்­த­தால், அவ­ளுக்கு எந்த வேலை­யும் ஓட­வில்லை.

மாலை­யில் வீட்­டிற்கு வந்­த­வுடன், "கவின் இன்­னைக்கு பள்­ளி­யில ஏதா­வது நடந்­ததா? நீ ஏதா­வது செய்­தாயா?" என்று இத­மா­கக் கேட்­டாள்.

"நான் ஒன்­னும் செய்­ய­லம்மா" என்று மெல்­லிய குர­லில் பதி­ல­ளித்­தான்.

"கவின், நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வர­னும்­கிறதுதான் அப்­பா­வோட ஆசை. நீ இப்­படி இருந்­தால் அப்­பா­வின் ஆசையை எப்­படி நிறை­வேற்ற முடி­யும்," என்று அவள் சொன்­ன­து­தான் தாம­தம் அவன் கண்­கள் கலங்கிவிட்­டன. அதைப் பார்த்­த­தும் அவள் நெஞ்­சம் பத­றி­யது.

தேவை­யில்­லா­மல் இளங்­கோ­வின் ஞாப­கத்­தைத் தூண்டிவிட்­டோமோ என்று தவித்­துப் போனாள்.

பின்­னர் அவ­னைச் சாமா­த­னப்­படுத்­தித் தூங்கவைத்த பிறகு, பூங்­கா­விற்கு வந்­த­வ­ளுக்கு நிலவு பழைய கதை­களை நினை­வு­றுத்த, எது­வாக இருந்­தா­லும் நாளை ஆசி­ரி­ய­ரி­டம் பேசிய பிறகு முடி­வெ­டுத்­துக் கொள்­ள­லாம் என்ற தனக்­குத் தானே சமா­தா­னம் செய்து கொண்டு வீட்­டிற்­குக் கிளம்­பி­னாள்.

மறு­நாள் காலை­யில், கவி­னைப் பள்­ளி­யில் விட்­டு­விட்டு, ஆசி­ரி­ய­ருக்­கா­கக் காத்­தி­ருந்­தாள்.

சிறிது நேரத்­தில், "காலை வணக்­கம் கவின் அம்மா, எப்­படி இருக்­கீங்க?" என்று கேட்­டுக் கொண்டே கவி­னின் வகுப்­பா­சி­ரி­யர் காவ்யா அவளை நோக்கி வந்தார்.

"நான் நல்­லா­யி­ருக்­கேன் ஆசி­ரியை. என்­னாச்சு? கவின் ஏதா­வது பண்­ணி­னானா? அவன் வகுப்­ப­றை­யில் எப்­படி இருக்­கான்? அவன் படிப்­புல ஏதா­வது முன்­னேற்­றம் இருக்கா?" என்று பட­படவென்று கேள்­வி­களை அடுக்­கிக்கொண்டே போனாள்.

"நீங்க ஏன் இவ்­வ­ளவு பட­படப்பா இருக்­கீங்க? கொஞ்­சம் அமை­தியா இருங்க. வாங்க, வகுப்­ப­றைக்­குப் போய்ப் பேச­லாம்," என்று அவளை அழைத்துச் சென்றார்.

வகுப்­ப­றைக்­குள் காலை வைத்­த­தும்­தான் தாம­தம், ஒரே கர­வொலி சத்­தம். "வாழ்த்­து­கள் கவின்! வாழ்த்­து­கள் கவின் அம்மா!" என்று பிள்­ளை­க­ளின் குரல் சங்கீதம்போல் ஒலித்­தது.

அவ­ளுக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை. கவி­னைப் பற்றி ஏதோ சொல்­லப் போகி­றார் என்று நினைத்­துக்கொண்டு வந்­தால் இங்கே பிள்­ளை­க­ளின் வாழ்த்­தொலி கேட்­கி­றதே? என்று திகைத்­துப் போய் நின்­ற­வ­ளி­டம், "என்ன கவின் அம்மா, அப்­ப­டியே திகைச்சுப் போய் நின்­னுட்­டீங்க. இதோ! இந்­தப் பாராட்­டைக் கேக்­கு­ற­துக்­கா­கத் தான் உங்­களை வரச் சொன்­னேன். கவின்­கிட்ட நான் எவ்­வ­ளவோ பேசி­யும், அவ­னோட நட­வ­டிக்­கை­யில் பெரிய அள­வுல மாற்­றம் இல்லை. எந்த ஆர்­வ­மும் இல்­லாம, மற்ற மாண­வர்­க­ளு­டன் ஒட்­டாம தனி­யா­தான் இருந்­தான். அந்­தச் சம­யத்­தில, அவன் பக்­கத்­துல உட்­கார்ந்து இருந்த பைய­னுக்கு எதிர்­பா­ராதவிதமா கால் உடைஞ்சு, கட்டு போட்­டுக்­கிட்டு வந்­தான்.

அந்­தப் பையனை வகுப்­ப­றைக்கு வெளியே கூட்­டிட்­டுப் போறது, உண­வ­கத்­துக்கு அழைச்­சுக்­கிட்­டுப் போய் உணவு வாங்­கிக் கொடுக்­கு­றது என்று அவ­னுக்­குத் தேவை­யான எல்லா உத­வி­க­ளை­யும் இவ­னாவே போய்ச் செய்ய ஆரம்­பிச்­சான்.

அப்­ப­டிச் செய்­யும்போது அவன் முகத்­துல ஒரு சின்­ன சந்­தோ­ஷம் தெரிஞ்­சத நான் பார்த்­தேன்.

அப்­போ­தான் எனக்கு அவ­னோட குணம் பிடிப்­பட்­டது. மற்­ற­வர்­க­ளுக்­குத் தேவை­யான சின்­னச் சின்ன உத­வி­க­ளைச் செய்­யக் கூடிய அவ­னு­டைய ஆர்­வம் எனக்­குப் புரிஞ்­சது".

"இப்போ, அந்­தப் பைய­னோட கால் சரி­யா­கிப் பழைய நிலை­மைக்­குத் திரும்ப வந்­துட்­டான். இந்த ஒரு மாதகாலமா, அவ­னுக்கு வேண்­டிய எல்லா உத­வி­க­ளை­யும் கவின்தான் செய்­தான். அவன் செய்த உத­விய பாராட்­டும் விதமா தான் இந்த வாழ்த்­தும், கர­வொ­லி­யும். இந்­தப் பாராட்டை அவ­னுக்­காக மட்­டும் செய்­யல. படிப்­புல, விளை­யாட்­டுல, புறப்­பாட நட­வ­டிக்­கைல, பண்­பான செயல்­க­ள்­னால என்று பல நிலை­க­ளில சிறப்பா செய்­யுற பிள்­ளை­க­ளோட பெற்­றோர்­களை அழைச்சு பாராட்­டுத் தெரி­விப்­பது என்­னு­டைய பழக்­கம்."

"இந்த மாதி­ரிப் பெற்­றோர்­க­ளைக் கூப்­பிட்டு அந்­தப் பிள்­ளை­க­ளைப் பாராட்­டும்­போது, அவர்­க­ளுக்­கும் ஊக்­கம் கொடுத்த மாதிரி இருக்­கும். இதைப் பார்க்­கும் மற்ற பிள்­ளை­களும், இதே போலச் செய்து பாராட்­டைப் பெறவேண்­டும் என்ற உந்­து­தல் வரும். ஏன்னா, சின்­னச் சின்­னக் கை­தட்­டல்­களும் பாராட்­டு­களும் தான் நம்மை அடுத்த நிலைக்கு இட்­டுச் செல்­லுது.

"அந்த அள­வில், கவி­னோட இந்­தக் குணம் நிச்­ச­யமா பாராட்­டிற்­கு­ரிய ஒன்று. இந்­தக் காலத்­தில் வள­ரும் தலை­மு­றை­யி­ன­ருக்­குக் இத்­த­கைய மனி­த­நே­யப் பண்­பைத்­தான் அதி­கம் வளர்க்­க­ணும். அந்­தப் பண்பு கவி­னி­டம் அதி­க­மா­கவே இருக்கு. இந்­தப் பண்பே அவ­னைப் பழைய கவி­னாக மாத்­து­ற­தோட அவன் வாழ்வை நிச்­ச­ய­மாக உயர்த்­தும். அதற்கு என்­னா­லான முயற்­சி­க­ளைத் தொடர்ந்து செய்­வேன் கவ­லைப்­ப­டா­தீங்க," என்று கூறிய ஆசி­ரி­யர் காவ்யா மறு­ப­டி­யும் மாண­வர்­க­ளைக் கர­வொலி எழுப்­பும் படி பணித்­தார்.

அதைக் கேட்­ட­தும், கபி­லா­வின் கண்­க­ளி­லி­ருந்து கண்­ணீர் பெருக, கைகள் அவ­ளை­ய­றி­யா­மல் தட்­டிக்­கொண்டே இருக்க கவி­னைப் பார்த்­தாள்.

அவன் முகம் பௌர்­ணமி நில­வாக ஒளிர்ந்­தது.

*