வலி

வலி

4 mins read

சிறுகதை

உமா சங்கர் நாராயணன்

"ஏங்க என்­னை­யும் விமான நிலை­யத்­துக்குக் கூட்­டிட்டுப் போங்­க­ளேன்?" சிணுங்­க­லாகக் கேட்­டாள் ரஞ்­சனி.

"போடி, எங்­கப்­பா­வும் அம்­மா­வும் முதன்­மு­றையா வராங்க. அவங்க விமான நிலை­யத்­துல இருந்து வெளியே வரும்­போது பிர­மிப்பா சிங்­கப்­பூரை பார்ப்­பதை படம் பிடிக்­க­ணும். வீட்­டுக்கு வரும்­போதே அவங்­க­ளுக்கு ஒவ்­ேவார் இடத்­தைப் பற்­றி­யும் கதை சொல்­ல­ணும். நீ வந்தா கிண்­ட­லாய் சிரிப்­பாய்," என்று சொல்­லி­விட்டு குழந்­தை­யாய் கிளம்­பிச்­சென்­றான் ராக­வன்.

இந்­தி­யா­வில் கிரா­மத்­தில் இவ­னது பெற்­றோர், வீட்­டில் வளர்க்கும் ஆடு, மாடெல்லாம் விட்­டு­விட்டு வர­மு­டி­யா­தென இத்­தனை ஆண்டு­களில் ஒரு­மு­றை­கூட சிங்­கப்பூருக்கு வந்­த­தில்லை.

இவ­னது அம்மா அடிக்­கடி விளை­யாட்­டாய் "ராக­வன் குழந்­தை­யாய் இருக்­கும்­போது பாலு ஒழுங்­காவே குடிக்கமாட்­டான். பால் கட்­டிய மார்பு வலி­யோடு இவ­னுக்கு பிஸ்­கட்டு மசிச்சி ஊட்­டு­வேன். ஆனா, இவன் சிங்­கப்­பூ­ரில் இருக்­கானே தவிர ஒரு­முறைகூட என்னை கூப்­பி­டலை," என்று அடிக்கடி குறைபட்­டுக்­கொள்­வாள்.

இதோ இந்த கொரோனா காலத்­தில் ஒரு­வரை ஒரு­வர் நேரில் பார்த்­துக்­கொள்ள முடி­யா­மல் தவித்­து­விட்­ட­னர்.

வாய்ப்புக் கிடைத்­த­வு­டன் சிங்­கப்­பூ­ருக்கு இரண்டு வாரங்­க­ளா­வது வரு­வ­தாக வாக்கு கொடுத்­தி­ருந்­த­னர். அதன்­படி இதோ இன்று வரு­கி­றார்­கள்.

விமா­னம் தரை இறங்­கி­விட்ட தக­வ­லை­யும், எந்த நடை­மே­டை­யில் பய­ணப்­ பை­கள் வரு­மெ­னும் விவ­ரத்­தை­யும் பார்த்­த­வு­டன் ராக­வன் வேக­மாக அதன் எதி­ரில் கண்­ணாடி தடுப்­பிற்குப் பக்­க­மாய் நின்­று­கொண்­டான்.

கூட்­டம் கூட்­ட­மாய் பய­ணி­கள் வந்­த­னர். இவ­னது கண்­கள் ஆசை ஆசை­யாய் பெற்­றோரை தேடி­யது. அதோ மெது­வாக தள்­ளாடி நடந்­த­படி அம்மா வரு­வதைப் பார்த்­தான். அவ­ளுக்­குப் பின்னே அதை­விட மெது­வாக அப்பா வந்­தார். இவனை பார்த்­த­தும் அம்மா கண்­களில் தாரை தாரை­யாய் கண்­ணீர்­விட்­ட­படி கட்­டிப்­பி­டித்து அழு­தாள்.

"ஏண்டி? அதான் ரெண்டு வரு­ஷத்­துக்­கப்­பு­றம் பார்த்­துட்­டல. இப்ப எதுக்கு அழு­துட்டு? டேய் போட்­டோ­லாம் எடுக்­காதே அவ அழுது அசிங்­கமா இருக்கா. வீட்­டுக்கு போலாமா?" அப்பா அவ­ச­ரப்­ப­டுத்­தி­னார்.

டாக்­சி­யில் வீட்­டுக்கு வரும்­போது வழி­யெங்­கும் சிங்­கப்­பூர் புரா­ணம் பாடி­னான் ராக­வன். அம்மா வாயைப் பிளந்­த­வாறே கேட்டுக்கொண்டே வந்­தாள். அப்பா குறட்டை விட்டுத் தூங்கிவிட்டார்.

அவர்­கள் இங்கு இருக்­கப்­போவதே சில நாள்­கள்தான் என்­ப­தால் ராக­வன், ஒவ்­வொரு நாளைக்கும் எங்கெங்கு செல்ல வேண்டும் என அட்­ட­வணையே போட்­டி­ருந்­தான்.

செந்­தோசா, மெரினா பே, விலங்­கி­யல் பூங்கா, பொட்­டா­னிக்­கல் கார்­டன் என்று அனைத்து இடங்­க­ளுக்­கும் பெற்­றோரை கூட்டிச் சென்று அங்கு அவர்­கள் மகி­ழும் தரு­ணங்­களை புகைப்­படம் எடுத்து வீட்­டில் ப்ரேம் போட்டு மாட்­டு­வது அவ­னது திட்­டம்.

"ஏண்டி. அவனே ரெண்டு வரு­ஷமா உன் சமை­யல் சாப்­பி­டாம இருக்­கான். உனக்கு ஊரைச் சுற்­றிப் பார்க்­க­ணுமா? ஒரு 3 நாளு அவ­னுக்கு வாய்க்கு ருசியா சமைச்­சுப் போடு," அப்பா அதட்­ட­லாய் அம்­மா­வி­டம் சொன்­ன­வு­டன் அம்மா மரு­ம­க­ளோடு சமை­ய­லில் இறங்­கி­னாள்.

மூன்று நாள் கழித்து "என்­னங்க இன்­னிக்கு சிங்­கத்து வாயி­லி­ருந்து தண்ணி வரும்ல. அந்த இடத்­துக்கு நம்மை கூட்­டிட்டு போறா­னாம். சீக்­கி­ரம் கிளம்­புங்க," என்று அம்மா தன்னை அலங்­க­ரித்­த­வாறே கிளம்­பி­னாள்.

"டேய் இதுதான் சிங்­கமா? ஏண்டி அதான் பார்த்­துட்­டல. வா வீட்­டுக்­குப் போலாம்." அப்பா மற்­ற­வரை எதிர்­பார்க்­கா­மல் தள்­ளாடி நடந்­த­படி சொன்­னார்.

மறுநாள் காலையே ராக­வன் "அப்பா இன்­னிக்கு கார்­டன்ஸ் பைதிபே போறோம். உங்­க­ளுக்கு சக்­கர நாற்­காலி அங்கு எடுத்து கஷ்­ட­மில்­லாம என் அன்பை காமிக்­கு­றேன்" என்று கூட்­டிச்­சென்­றான்

"டேய் அன்பை நாலு சுவ­ருக்குள்ள காட்­ட­லாம். காசோட அருமை புரி­யாம கரி­யாக்­கிட்­டி­ருக்­காதே," என்று அவர் சொன்­னது அவ­னுக்கு வலித்­தது.

வண்ண வண்ணப் பூக்­களை நுழைவாயிலில் பார்த்­த­வு­டன் அம்மா "அப்­பா­வோட சக்­கர நாற்­கா­லியை வேகமா தள்­ளுடா. பாக்­கு­ற­துக்கு நிறைய இருக்­கும்­போல," பட்­டாம்­பூச்­சி­யாய் பறந்­தாள்.

"டேய். எல்­லோ­ரு­டைய பையை­யும் எங்­கிட்ட கொடுங்க. சக்­கர நாற்­கா­லியை அங்கே நிழ­லில் ஓர­மாய் நிறுத்து. நான் பத்­தி­ர­மாய் பார்த்­துக்­கு­றேன். நீ உங்­கம்­மாவை கூட்­டிப்­போய் காமி. நான் பாக்­காத பூவா இங்க இருக்­கப்­போகுது" என்று வெறு­மை­யாக சொன்­னார் அப்பா.

அப்­ப­டியே அவரை விட்­டு­விட்டு அரக்­கப்­ப­ரக்க பூக்­க­ளை­யும் செடி­களை­யும் பார்த்­து­விட்டு திரும்­பும்­போது அப்பா சுக­மாய் சக்­கர நாற்­கா­லி­யில் தூங்­கிக்­கொண்­டி­ருந்­தார்.

கடை­சி­யாக அவர்­கள் ஊருக்குச் செல்­லும் நாள் வந்­தது. தனது அனைத்­துக் கன­வு­களும் நிறை­வே­றாத விரக்­தி­யில் அவர்­களை விமான நிலை­யத்­தில் வழி­ய­னுப்பச் சென்­றான் ராக­வன்.

அம்மா ஆசை அடங்­கா­த­வ­ளாக அங்­கி­ருந்த சிங்கப்பூர் வரைப­டங்­களை எடுக்­கச்­சென்­றாள். அப்­போது அவன் கையை மெது­வாகப் பிடித்து இழுத்­தார் அப்பா.

"டேய் ராகவா. அப்­பா­விற்கு உடம்பு முன்ன போல இல்லை. அதி­கமா மூச்சு வாங்­குது. நடந்தா நெஞ்சு வலிக்­குது. அவ ஆசைப்­பட்­டா­ளேனு வந்­தேன். உனக்கு கஷ்­டம் கொடுத்­தி­ருந்தா மன்­னிச்­சுக்க," கண்­களில் கண்­ணீரை அடக்­கி­ய­வாறு மெது­வாக சொன்­னார்.

சில நிமி­டங்­கள் கழித்து கண்­ணாடித் தடுப்பை தாண்டி மெது­வாக அசைந்து சென்ற பெற்­றோ­ருக்கு வேக­மாய் கைய­சைத்து டாட்டா சொன்­னான் ராக­வன்.

திரும்பித் திரும்பிப் பார்த்­த­வாறே அப்பா இவனைத் தேடி­ய­போதுதான் ராக­வன் உணர்ந்­தான் பால் கட்­டிய அம்­மா­வின் மார்பு வலி­யைப் போலவே கண்­ணீ­ரை­யும் அன்­பை­யும் வெளியே காட்­டா­மல் வாழும் அப்­பா­வின் வலி­யும் என்­பதை.