மீனாட்சி

மீனாட்சி

9 mins read
e1970a07-d77e-48d2-85e5-5d800171cedf
-

சிறுகதை

ஷோபா குமரேசன்

வெளியே மழை வெளுத்து வாங்­கிக் கொண்­டி­ருக்க, சாள­ரத்­தின் வழியே நான் வேடிக்­கை பார்த்­த­படி இருந்­தேன். முகி­லா­னது கதிவரனுக்கு வழி­வி­டா­மல் தன் பங்­கிற்கு அடம்­பி­டிக்க, காலை மணி எட்டை நெருங்­கி­யும் சிங்­கையே கறுப்­புப் போர்­வைக்­குள் மூழ்­கி­யி­ருந்­தது.

எப்­போ­தும் பர­ப­ரப்­பாக இயங்­கும் சாலை விடு­முறை எடுத்­ததுபோல் வெறிச்­சோ­டிக் கிடக்க, வீட்­டிற்­குள் திரும்பி நோட்­ட­மிட்­டேன். ஆம், கடந்த ஒரு வார­மாக என் வீட்­டின் நிலை­மைகூட இப்­ப­டித்­தான் வெறு­மை­யாக உள்­ளது.

அதி­லும் முக்­கி­ய­மாக, மழலை மாறாத என் மக­னின் முகத்­தில் குடி­கொண்­டி­ருந்த அந்த வசீ­க­ர­மான புன்­ன­கை­யா­னது, வித்தை காட்­டும் கோமா­ளி­யின் கையில் அகப்­பட்­ட­தைப் போல மாய­மாய் மறைந்­துபோனது.

"ஏம்மா என்­கிட்ட பழ­கு­ற­வங்க எல்­லாம் என்னை விட்­டுட்டு சீக்­கி­ரமே பிரிஞ்­சு போயி­டு­றாங்க?" என்று மகன் இன்று காலை­யில் பள்­ளிக்­குப் போகும் போது அப்­பா­வி­யாய் கேட்ட கேள்­விக்கு என்­னால் பதி­ல­ளிக்க முடி­ய­வில்லை.

யோசித்­த­வாறே மக­னின் அறைக்­குள் நுழைந்த என் பார்வை அங்கு சுவரை அலங்­க­ரித்­துக் கொண்­டி­ருந்த புகைப்­ப­டத்­தில் நிலைத்­தது. அந்த புகைப்­ப­டம் என் மக­னைப் பொறுத்தவரை­யில் ஓர் அரிய புதை­யல் என­லாம். அதில் என் மகன் தெத்­துப்­பல் தெரிய சிரித்­த­படி மீனாட்­சியை இறுக அணைத்­தி­ருந்­தான்.

மெல்ல அரு­கில் சென்ற நான் மீனாட்­சியை ஆசை­யு­டன் வருட, என் உடல் சிலிர்த்து கண்­களில் கண்­ணீர் முட்­டிக்கொண்டு வந்­தது. அதற்கு மேல் அங்கு நிற்க சக்­தி­யற்று வெளி­யே­றிய என் நினை­வில் அந்த எதிர்வீட்டு மாது ஒரு கணம் வந்து போனார்.

'நல்­லா­தான் பழ­கு­னாங்க.. நம்­ப­கிட்­டையே நேர­டியா நடந்­ததை விசா­ரிச்­சி­ருக்­க­லாம்... ஏன் இப்­படி செஞ்­சாங்க?" என சிறிது நாள்­களுக்கு முன்பே வீட்டைக் காலி செய்து விட்­டுப்போன அந்த மாதுவை உள்­ளுக்­குள் மனம் வசை­பா­டி­யது.

மீனாட்சி எங்­கள் வீட்­டில் இருந்­தது என்­னவோ மூன்று மாத காலம்­தான். விதி­மு­றைப்­படி மீனாட்­சியைத் தொடர்ந்து வீட்­டில் வைத்து வளர்க்க அனு­மதி இல்­லைன்னு தெரிந்து நாங்­களே அதை என்ன செய்­ற­துன்னு யோச­னை­யில இருக்­கும் போது­தான் இப்­படி நடந்­து­டுச்சி.. ஆமாம், யார் இந்த மீனாட்சி?

ஏதோ நினை­வு­கள் தாக்க என் எண்ண அலை­க­ளுக்கு முட்­டுக்­கட்டை போட முயன்று தோற்­றுப்­போனேன்.

*

ஒரு முறை மேல­தி­காரி வீட்­டிற்­குச் சென்று திரும்­பிய என் கண­வர் தீவிர சிந்­த­னை­யில் மூழ்­கி­யிருந்­தார். நான் அவரை கல­க­லப்­பாக்க முயற்சி செய்து, "என்­னங்க, கொரோ­னாவை எப்­படி அடி­யோடு ஒழிச்­சுக் கட்­ற­துன்னு யோசிக்­கி­றீங்­களா?" என்­றேன்.

கேட்ட அவர் ஒரு­வித குழப்­பத்­தோடு என்­னைப் பார்க்க, அய்­யய்யோ, நேரம் காலம் தெரி­யா­மல் வாயைக் கொடுத்­திட்­டோமோ, என்ன பிரச்­சினைன்னு தெரி­ய­லையே? என சற்றே பதற்­ற­மா­னேன்.

"ம்ம்.. என்ன கேட்ட? சரியா கவ­னிக்­கலை" என்று என்­ன­வ­ரி­ட­மி­ருந்து பதில் வந்­தது. எப்­போ­துமே அவர் அப்­ப­டித்­தான். முதன்­முறை நான் பேசும்­போது காது கொடுத்து கேட்க மாட்­டார். ஆனால் அன்று அதுவே எனக்கு சாத­க­மா­கிப் போக, நல்­ல­தாப் போச்சு, வழக்­கம் போல நம்ப பேசு­றதை காதுல வாங்­கலை என அமை­தி­ய­டைந்த நான்,

"இல்ல, என்­னாச்சு வந்­த­து­லேர்ந்து ஒரே யோச­னையா இருக்­கீங்­க­ளேன்னு?" என்று ஆரம்­பித்­தேன்.

"இன்­னக்கி மேல­தி­கா­ரி­யோட வீட்­டுக்­குப் போயி­ருந்­தேம்மா. பெரிய பங்­களா வீடு. அங்க சில கோழி­கள் திரிஞ்­சிக்­கிட்டு இருந்­துச்சி... எப்­ப­டின்னு விசா­ரிச்­சேன். அவரு வீட்­லேயே செயற்கை முறை­யில குஞ்சு பொரிக்­கும் தானி­யங்கி முட்டை இன்­கியூபேட்­டரை வாங்கி வச்­சி­ருக்­காரு.."

"என்­னது? வீட்ல கோழியா? இது­வரை கேள்­விப்­பட்­டதே இல்­லையே, ஒருவேளை பங்­களா வீட்ல வளர்க்­க­லாமோ?" என்­றேன் சந்­தே­கத்­து­டன்.

"அது என்­னவோ, எனக்கு விவ­ரம் தெரி­யலை. அந்த இன்­கியூ­பேட்­டர்ல முட்­டைய வச்சா 21 நாள்ல குஞ்சு பொரிக்­கு­மாம், என்­கிட்ட கூட அது எப்­படி வேலை செய்­யும்னு காமிச்­சாரு."

"ரொம்ப வித்­தி­யா­ச­மான ஆளா இருப்­பாரு போல­ருக்கே," என்று ஆச்­சர்­யம் தாளா­மல் கேட்­டேன்.

"இதுல பாரு, இன்­னொரு சுவா­ரசி­யம் என்­னன்னா, கம்­பெ­னி­யிலேந்து யார் விடுப்பு எடுத்­துட்டு ஊருக்­குப் போனா­லும் அங்­கே­யிருந்து கோழி முட்­டையை எடுத்­துட்டு வரச்­சொல்லி அதை குஞ்சு பொரிக்க வச்சு வளர்த்து இறைச்­சிக்­கா­கப் பயன்­ப­டுத்­து­வா­ராம்"

"நீங்க சொல்­ற­தைப் பாத்தா உங்க மேல­தி­காரி எல்லா நாட்­டோட கோழி­யை­யும் ருசி பாத்­தி­ருப்­பா­ருன்னு நினைக்­கி­றேன். வேற என்­னங்க சொன்­னாரு?"

"ம்ம்... நம்ப எப்ப இந்­தி­யா­வுக்­குப் போறோம்னு கேட்­டாரு," என்று கூறிய கண­வர் என்­னைப் பார்க்க அதற்குமேல் கேட்­ப­தற்கு ஒன்­று­மில்­லா­மல் வாய­டைத்­துப் போனேன்.

மேல­தி­காரி கேட்­டுக்கொண்­ட­தற்கு இணங்க நாங்­கள் அடுத்த விடு­மு­றை­யில் இந்­தியா சென்­ற­போது பத்து முட்­டை­களை சேக­ரித்து ஒரு டப்­பா­வி­னுள் தவிட்­டை­யும் வைக்­கோ­லை­யும் அடைத்து ஒன்­றோ­டொன்று உர­சா­த­படி வைத்து பத்­தி­ர­மாக எடுத்து வந்து மேல­தி­கா­ரி­யி­டம் ஒப்­ப­டைத்­தோம்.

இது முடிந்து ஒரு­மாத காலம் கழிந்­தது. அன்று பள்­ளி­யி­லி­ருந்து திரும்­பிய என் மக­னின் முகம் மிக­வும் சோர்­வா­கக் காணப்­பட்­டது. அவ­னு­டைய தலையை ஆசை­யு­டன் கோதி­ய­ப­டியே,

"என் செல்­லத்­துக்கு என்­னாச்சு?" என்­றேன். நான் கேட்­டது­தான் தாம­தம் அவன் கண்­க­லங்க என்­னி­டம், "அம்மா என் தோழி மீனாட்சி இருக்­கால்ல, அவுங்க குடும்­பத்­தோட ஆஸ்­தி­ரே­லி­யா­விற்கு இடம்­பெ­யர்ந்து போறாங்­க­ளாம். இனிமே பள்­ளிக்கு வர­மாட்டா" என்­றான்

"அம்மா என் பிறந்­த­நா­ளுக்கு மீனாட்சி பரிசு கொடுத்தா... நல்­ல­வே­ளைம்மா இன்­னக்கி கணித வகுப்பு புரி­யலை.. ஆசி­ரி­யருக்கிட்ட மாட்­டி­யி­ருப்­பேன்.. அப்­பு­றம் மீனாட்சி சொல்­லிக் கொடுத்­துட்டா."

இப்­படி கொஞ்ச நாளா­கவே என் மக­னின் நாவில் சர­ள­மாக மீனாட்­சி­யின் பெயர் தாண்­ட­வ­மா­டிக் கொண்­டி­ருந்­தது.

இப்­போது அவ­னின் பிஞ்சு மனம் தோழி­யின் பிரி­வைத் தாங்­கா­மல் தவித்­தது. என்ன சொல்லி எப்­படி புரிய வைக்­கிறது இவ­னுக்கு?

நான் சிந்­திக்க அதற்­குள் அவனோ அதே வருத்­தத்­து­டனே உறங்­கி­யும் போனான்.

அன்று மாலை வேலை முடிந்து வீட்­டிற்கு வந்த என் கண­வ­ரின் கையி­லி­ருத்த சிறிய அட்­டைப்­பெட்டி என் கவ­னத்தை ஈர்த்­தது.

"என்­னங்க இது? உள்ளே எனக்கு ஏதும் பரி­சுப்­பொ­ருள் இருக்கா என்ன?" என கையை நீட்­டிய நான் உள்­ளி­ருந்து ஏதோ லேசான சத்­தம் கேட்க, சட்­டென நீட்­டிய கையைப் பின்­வாங்­கி­னேன்.

என் கண­வர் அட்­டைப்­பெட்­டி­யைப் பிரிக்க உள்ளே எட்­டிப் பார்த்த என் கண்­கள் வியப்­பில் விரிந்­தன. அட்­டைப் பெட்­டிக்­குள் ஓர் அழ­கான வெள்ளை நிற கோழிக்­குஞ்சு ஓர் ஓரத்­தில் முடங்­கிக் கிடந்­தது.

"அட! எப்­ப­டிங்க இது? ஆர்­வத்­தில் வார்த்­தை­கள் தெறித்­தன.

"நம்ப ஊர்­லேந்து முட்டை எடுத்­துட்டு வந்து மேல­தி­கா­ரி­கிட்ட கொடுத்­தோம்ல அதுல சில பொரிஞ்­சி­டுச்­சாம். அதுல ஒண்ணு என்­கிட்ட கொடுத்­தாரு"

"அது­சரி, இதை இங்க எப்­படி வச்­சிக்­கிறது? நாம வளர்க்க முடி­யாதே? அதோட நம்ப மக­னைப் பத்தி தெரி­யாதா? அவன் கண்­ணுல பட்­டுட்டா அவ்­வ­ள­வு­தான், முதல்ல போய் உங்க மேல­தி­கா­ரி­கிட்­டையே கொடுத்­துட்டு வந்­து­டுங்க" என அவ­ச­ர­மாக நான் கூற, அதற்­குள் எங்­க­ளின் பேச்­சுக் குரல் கேட்டு உறக்­கம் கலைந்த என் மகன் கண்­ணைக் கசக்­கிக் கொண்டே அங்கு வந்­தான்.

'அய்­யய்யோ, சொல்லி வாயை மூடலை, அதுக்­குள்ள வந்­துட்­டானே?' எனக்கு அடி­வ­யிற்­றில் புளி­யைக் கரைக்க ஆரம்­பித்­தது.

அந்த அட்­டைப் பெட்­டிக்­குள் அழ­கிய கோழிக்­குஞ்­சைப் பார்த்­த­வு­டன் அவ­னின் வாடி­யி­ருந்த முகம் பர­வ­ச­மாக மாறி­ய­து­டன், "அம்மா இதை நாம மீனாட்­சின்னு அழைக்­க­லாமா?" என அவன் ஆசை­யு­டன் மெல்ல அதை தட­வி­ய­வா­றே கேட்­டான்.

மக­னின் இந்த செய்கை எனக்கு சற்றே பயத்­தைத் தர உள்­ளுக்­குள் தூக்­கி­வா­ரிப் போட்­டது.

"சரி விடு, ஒரு வாரம் அவன் வச்­சிக்­கட்­டும். பிறகு என்ன செய்­யி­ற­துன்னு பார்ப்­போம்," என கண­வர் கூறி­னா­லும், என் மனம் சமா­தா­னம் அடைய மறுத்­தது. 'இதைப் பிரி­யும்போது என்ன கலாட்டா பண்­ணு­வானோ?' எனக் கவ­லை­யடைந்த எனக்கு அந்த கோழிக்­குஞ்­சைக் கொண்டு வந்த கண­வர் மீது ஒட்டுமொத்­த கோப­மும் திரும்­பி­யது.

வாழ்க்­கை­யில் நாம் நினைப்­பது எல்­லாம் அப்­ப­டியே நடந்­து­வி­டுமா என்ன?

ஒரு வாரம் மட்­டுமே மீனாட்­சியை வைத்­துக்கொள்­ள­லாம் என்ற என் கண­வ­ரின் வார்த்தை என் மக­னி­டம் எடு­ப­டா­மல் கடற்­கரை மண­லில் எழு­திய எழுத்­துப் போல் மறைந்­து போன­து­தான் மிச்­சம்.

வாரங்­கள் மாதங்­க­ளாக உருண்­டோட, என் மக­னோடு சேர்ந்து மீனாட்­சி­யும் வளர்ந்­தது. விரை­வில் மீனாட்சி எங்­கள் குடும்­பத்­தின் அங்­கத்­தி­ன­ராக, நான் சல­வைத் துணிக்­காக பயன்படுத்தி கூடை அதன் வீடாக மாறி­யது.

என் மகன் மீனாட்­சி­யு­டன் எடுத்­துக்கொண்ட வித­வி­த­மான புகைப்­ப­டங்­கள் கட­வுச்­சீட்டு இல்­லா­மல் உல­கி­லுள்ள உற­வி­னர் வீட்­டிற்­கெல்­லாம் புல­னத்­தில் பறந்­தன.

பள்­ளிக்­குப் போகும் நேரம் தவிர மற்ற நேரங்­களில் என் மகன் மீனாட்­சி­யு­டனே பொழு­தைக் கழிக்­கத் தொடங்­கி­னான். அவ­னி­டம் மெது­வாக ஒரு நாள், "மீனாட்­சியை நம்ப வீட்ல தொடர்ந்து வளர்க்க முடி­யா­துடா கண்ணு, நான் வேணும்னா உனக்கு மீன் தொட்டி வாங்­கித் தர்­றேன். நாம மீனை வளர்க்­க­லாம்..." என ஆரம்­பித்­தேன். அப்­போது நடந்­த­து­தான் அதி­ச­யம், நான் சொன்­னது மீனாட்­சிக்குப் புரிந்­ததோ என்­னவோ, என் மக­னின் காலையே அது 'பக்..பக்...' என மெல்­லிய சத்­தத்தை எழுப்­பிக்கொண்டு சுற்றிவர, எனக்கோ தலை­யைச் சுற்­றத் தொடங்­கி­யது. அவன் மேற்­கொண்டு என்­னி­டம், "ஏம்மா நம்ப மீனாட்­சியை வளர்க்­கக் கூடாது? ஊருக்­குப் போனப்ப தாத்தா வீட்ல கூட இருந்­துச்சே?" என புரி­யா­மல் எதிர்க் கேள்வி கேட்­டான். போச்சு, இப்­பவே ஆரம்­பிச்­சிட்­டானே.. இதுக்கு சீக்­கி­ரமா முடிவு எடுத்­தா­க­ணும் என எண்­ணிய நான் கண­வ­ரி­டம், "ஏங்க சமீ­பத்­துல ஒரு செய்தி கண்­ணுல பட்­டுச்சி.

இப்போ ஆங்­காங்கே சில கோழி­கள் திரி­யி­ற­தா­க­வும் அதுக்­குன்னு சில அமைப்­பு­கள் கோழி­களை அதனை புக­லி­டத்­தில் விட உதவி வரு­துன்னு கேள்­விப்­பட்­டேன்.

சீக்­கி­ரமா அந்த விவ­ரத்தை கேளுங்க. நாம அங்க கூட ஒப்­ப­டைச்­சி­ட­லாமே?" என்­றேன்.

"சரிம்மா விசா­ரிக்­கி­றேன், நானே நம்ப மகன்ட்ட பக்­கு­வ­மாப் பேசி புரிய வைக்­கி­றேன்," என்று கண­வர் நம்­பிக்­கை கொடுத்­தார்.

அன்று முத­லில் என் கண­வ­ருக்­கும் மக­னுக்­கும் இடை­யில் பேச்­சு­வார்த்தை எழுந்து பிறகு வாக்­கு­வா­த­மாக முற்றி இறு­தி­யில் கோழிச்­சண்­டை­யில் முடிந்­தது.

மகன் எதற்­கும் ஒத்துவரா­மல் அழுது அடம்­பி­டிக்க, செய்­வ­த­றி­யாது விழித்­தார் என் கண­வர்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க, அடுத்த நாள் மேலும் அதிர்ச்­சி­யூட்­டும் வித­மாக ஒரு சம்­ப­வம் அரங்­கே­றி­யது. அன்று காலை அரசாங்க அதி­காரி ஒரு­வர் எங்­கள் வீட்­டிற்கு வந்­தார்.

அவர் என்­னி­டம், "உங்க வீட்­டுல ஏதா­வது பறவை வளர்க்­கு­றீங்­களா?" எனக் கேட்­டார். அவ­ரின் கண்­கள் என் வீட்­டுக் கூடத்தை அலச, நான் பதி­ல­ளிப்­ப­தற்­குள் மீனாட்­சியே தன்னை அறி­மு­கப்­படுத்­திக்­கொள்­வ­து போல் அவ­ரெதிரே வந்து நின்­றது.

"உங்க வீட்­லேந்து அடிக்­கடி ஏதோ சத்­தம் வரு­வ­தாக புகார் வந்­தி­ருக்கு" என்று அவர் திரும்­ப­வும் கூற, தவறு எங்­கள் மேல் இருப்­ப­தால் அவ­ரி­டம் மன்­னிப்­புக் கேட்டு நடந்­ததை விளக்­க­மா­கக் கூறி­னேன்.

பிறகு அவரே கோழி­களுக்­கான அமைப்­பு­களைத் தொடர்­புகொள்ள உதவி எண்­க­ளைக் கொடுத்­தார். நானும் அவ­ரி­டம் சீக்­கி­ரமே தகுந்த நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­தேன்.

என் வீட்­டில் அப்­போது நடந்­ததை எல்­லாம் அந்த எதிர்­வீட்டு மாது பார்த்­துக்கொண்டே இருந்­தார்.

எப்­போ­தும் அவர் முகத்­தில் இருக்­கும் புன்­னகை அன்­றைக்கு ஏனோ காணா­மல் போயி­ருக்க. எனக்­கும் புகார் கொடுத்­தது யாராக இருக்­கும் என ஓர­ளவு யூகிக்க முடிந்­தது.

அடுத்த சில தினங்­களில் வேலை­களைத் துரி­த­மாக்கி மக­னுக்கு ஓர­ளவு புரியவைத்து, மீனாட்­சியை அதற்­கான அமைப்­பி­டத்­தில் ஒப்­ப­டைத்­தோம்.

இது நடந்து முடிந்து என்ன கார­ணத்­தி­னாலோ என்­னவோ போன வாரம் அந்த எதிர் வீட்டு மாது­வும் வீட்டைக் காலி செய்து விட்­டுப் போய்விட்­டார்.

மீனாட்சி எங்­கள் வீட்­டில் இருந்­தது மூன்று மாத­மாக இருந்­தா­லும், அது போன­வு­டன் வீடே அமை­தியை விழுங்­கிக்கொண்டு வெறிச்­சோ­டிக் கிடந்­தது.

ஏதோ ஒரு வெற்­றி­டம் என் மக­னோடு சேர்த்து என்­னை­யும் ஆட்­கொண்­டது. மீனாட்­சியைக் கவிழ்த்து வைத்த அந்த சல­வைக் கூடை வீட்­டின் மூலை­யில் கேட்­பா­ரற்றுக் கிடந்­தது.

*

அப்­போது அடித்த கடி­கா­ரச் சத்­தத்­தில் நினை­வு­க­ளி­லி­ருந்து மீண்ட நான், மணி­யைப் பார்க்க அது நண்­ப­கல் ஒன்­றைக் காட்­டி­யது.

'பள்­ளிக்­குச் சென்று மகனை அழைக்­க­ணுமே, தாம­த­மா­யி­டுச்சே?' என ஓட்­ட­மும் நடை­யு­மாக பள்­ளிக்கு விரைந்­தேன். அங்கு எனக்­காக காத்­தி­ருந்த மகனை அழைத்­துக்­கொண்டு வீடு திரும்ப, என்­னு­டன் எது­வுமே பேசா­மல் அமை­தி­யாக வந்துகொண்­டி­ருந்­தான்.

முன்­பெல்­லாம் பள்­ளி­யில் நடந்­ததை என்­னி­டம் ஒன்­று­வி­டா­மல் சொல்­லிக்கொண்டே வரும் அவன் கடந்த ஒரு வார­மா­கவே இப்­ப­டித்­தான் இருக்­கி­றான்.

சற்று நேரத்­தில் இரு­வ­ரும் குடி­யி­ருப்பை அடைந்­தோம். மின்­தூக்­கி­யின் உத­வி­யோடு எங்­கள் தளத்தை அடைய அப்­போது பூட்­டி­யி­ருந்த எதிர் வீட்­டில் யாரோ புதி­தாக குடி­வந்­தி­ருப்­பது புலப்­பட்­டது.

நாங்­கள் அந்த வீட்­டைக் கடக்க, எங்­க­ளைக் கண்­ட­தும் உள்­ளே­யிருந்து ஒரு சிறுமி குடு­கு­டு­வென ஓடி வந்­தாள்.

எங்­க­ளைப் பார்த்து புன்­ன­கைத்­த­வள் என் மக­னி­டம் கைநீட்டி, "ஹாய்...ஐ அம் மீனாட்சி" என்­றாள்.