- மோகனபிரியா தனசேகரன்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தார்.
கட்டத்தில் சாய்ந்தனர், காதலில் மாய்ந்தனர்,
வீரம்தொ லைத்தநல் ஆடவர் தாம்.
பணியும் கல்வியும் செல்வமும் பெற்றதனாலே
ஆணுக்கு சமம் நாமெனகூறியார்ப் பரித்தார்;
குலத்தொழில் காலத்தும் கூடிபணி யாற்றியதும்
தெய்வங்களாக்கிப் போற்றிப்பணிந்த தையேன் மறந்தார்.
காதலைக் காசுக்கும் வீரத்தை வஞ்சியர்க்கும்
கூறுகட்டித் தொலைத்து நிற்கும் ஆடவர்கள்
பேதமை உணர்வோடு பேச்சற்ற நிலையோடு
பேராண்மை வேண்டு மீணக்குரல் கேட்கிறதா?
பாரதியே, நீ பாக்கியசாலி?
காசுசேர்க்காமல் கவிதை பாடிவிட்டாய்;
மாசுபடாமலுன் மனைகாத்துக் கொண்டார்;
நீவடித்த புதுமைப் பெண்களின்று
சமுதாய சமன்பாட்டை போட்டிகளாக்கி
அடிமைத்தளைகளை அணுகுண்டால் துளைத்து
வேள்விகளை கேள்விகளாக்கி பூரிக்கின்றார்?
கண்ணைவிற்று சித்திரம் பார்க்கும்
அவர்தம் விந்தை புதுமை
இஃதென்ன வென்று கேட்டுச்சொல்வீர்?!

