- கி.சுப்பிரமணியம்
கதிரவன் மேற்குக் கடலினில் மூழ்க
எதிலும் இருளதின் ஏற்றம் - மதியும்
கயிற்றை அரவமாய் கண்களில் காட்டி
மயக்கும் அறிவை விரைந்து
இருட்டினில் தீபத்தை ஏற்றிடும் போது
குருட்டை விலக்கிடும் கொஞ்சம் - பரவும்
ஒளியில் கயிறென உண்மை புகட்டி
தெளிவுறும் சிந்தையும் சற்று
மெய்யும் இதுபோல் மறைந்து கிடந்திடும்
பொய்யுரையின் சேற்றில் புதையுண்டு - வாய்மை
இருட்டினில் வாய்பேசா ஊமையாய் தூங்கி
ஒருநாள் விழித்தெழும் ஒப்பு

