சிவரா­ம­கி­ருஷ்­ணன்

சிவரா­ம­கி­ருஷ்­ணன்

7 mins read
9054a0d7-a49a-4a4f-a3b2-1be93e4a2b62
-

சிறுகதை

செ ப பன்னீர்செல்வம்

என்­னது? சிவ­ரா­மன் மீனா­வைத் திரு­ம­ணம் செய்­யப் போவ­தில்­லையா? ஏன் அவன் அந்த முடி­வுக்கு வந்­தான்? சிவ­கா­மி­யம்­மா­ளுக்கு ஒரே குழப்­ப­மாக இருந்­தது.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வந்த தொலைப்­பே­சிச் செய்தி அந்த வய­தான அம்­மா­ளைக் குழப்­பத்­தில் ஆழ்த்­தி­யது.

உற்­றார் உற­வி­னர் ஒன்­று­கூடி எடுத்த முடிவை இப்­ப­டியா மாற்­று­வது? சிவா ஏன் அப்­ப­டி­யொரு முடி­வுக்கு வந்­தான்?

மீனாவை சிவ­ரா­ம­னும், மைதி­லியை மூர்த்­தி­யும் திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தாக மூத்­த­வர்­கள் செய்த முடிவை சிவ­ரா­மன் ஏன் மாற்­றி­னான்?

சிவ­காமி அம்­மாள் அப்­போது வீட்­டி­லி­ருந்த சொந்­தக்­கா­ரர்­க­ளி­டம் மீண்­டும் மீண்­டும் கேட்­டார்.

அந்த நேரம் பார்த்து, வாச­லில் கார் ஒன்று வந்து நின்­றது. இரண்டு பேர் அதி­லி­ருந்து இறங்­கி­னார்­கள்.

"அம்மா, வணக்­கம். என் பெயர் சர­வ­ணப் பெரு­மாள், நான் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வந்­தி­ருக்­கின்­றேன். சிவ­ரா­மன் உங்­க­ளைப் பார்த்­து­விட்டு வரச் சொன்­னார்."

"அப்­ப­டியா வாருங்­கள், இப்­படி உட்­கா­ருங்­கள்," என்று வந்­த­வர்­களை அம­ரச் சொன்­னார், சிவ­காமி அம்­மாள். இருப்­பி­னும் அவ­ரின் குர­லில் மகிழ்ச்சி தொனிக்­க­வில்லை.

"சிவ­ரா­மன் ஏதும் சொன்­னானா தம்பி?" அவ­ரின் குர­லில் ஏதோ ஏக்­கம் தொனித்­தது.

"கூடிய விரை­வில், உங்­க­ளை­யும் தன் தங்­கை­யை­யும் சிங்­கப்­பூ­ருக்கு அழைத்­துக்­கொள்ள ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறச்­சொன்­னார் அம்மா."

"அப்­ப­டியா, என்­னப்பா சொல்­லு­றீ­ங்க?

"ஆமாம்மா, அவர் சொன்­ன­த­தான் சொல்­லு­றேன், நீங்க இரண்டு­பே­ரும் பாஸ்­போர்ட்டை எடுத்து வச்­சிக்­கிங்க."

இதற்­கி­டையே, சர­வ­ணப் பெரு­மாள் தம்­ப­தி­க­ளுக்கு தேநீ­ரும் வடை­யும் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

"சாப்­பி­டுங்க," என்று கூறி­ய­வாறு, மைதிலி அவர்­க­ளுக்கு பரி­மா­றி­னாள்.

சிவ­காமி அம்­மா­ளுக்கு அதற்­குள் ஏதேதோ சிந்­த­னை­கள், "தம்பி நீங்க சிங்­கப்­பூ­ருக்­குப் போயி எத்­தனை வரு­ஷ­மாச்­சுது?"

"நான் போயி பத்து வரு­ஷ­மா­ச்­சு­தம்மா, அங்கே இருக்­கிற என் மாமா மக­ளைத்­தான் திரு­ம­ணம் செய்­துள்­ளேன்," என்று தன் மனை­வியை அவ­ருக்கு அறி­முகம் செய்­து­வைத்­தார்.

"அப்­ப­டியா?"

ஒரு விஷ­யம் சொல்­ல­லாமா?

"என்­னம்மா? சொல்­லுங்க"

"நம்ம சிவ­ரா­ம­னுக்கு இங்­கே­தான் கலி­யா­ணம் செய்ய முடிவு செய்­தி­ருந்­தோம். என்­கிட்­டக்­கூட சொல்­லாம, திடீர்னு அந்த இடம் வேண்­டா­முன்னு சிவா எங்க அக்கா வீட்­டுக்­குப் போன் செய்­தா­னாம். எனக்கு ஒரே குழப்­பமா இருக்­கு­தப்பா?"

சிவ­கா­மி­யம்­மாள், தம்­மு­டைய மனக்­கு­றையை வெளிப்­ப­டுத்­தி­னார்.

"பெரி­ய­வங்க எல்­லாம் சேர்ந்து முடி­வெ­டுத்­திட்டு திடீர்னு அதை நிறுத்­தினா மத்­த­வங்க என்ன சொல்­லு­வாங்க, அது மட்­டு­மல்­லாம, தங்­கச்சி மைதி­லி­யோட திரு­ம­ணத்­தை­யும் நிறுத்­தச் சொல்லி­யி­ருக்­கி­றா­னாம். எனக்கு ஒரே குழப்­பமா இருக்­குப்பா. என்­கிட்ட பேசாம இப்­ப­டி­யெல்­லாம் அவன் முடி­வெ­டுக்­க­லாமா?

"நல்லவேளை, கலி­யாண பத்­தி­ரி­கை­களை இன்­னும் அச்­ச­டிக்­கல." - சிவ­காமி அம்­மாள் வேத­னை­யு­ட­னும் குழப்­பத்­து­ட­னும் பேசி­னார்.

"அம்மா, நீங்க இப்­ப­டி­யெல்­லாம் கவ­லைப்­ப­டக்­கூ­டாது. சிவ­ரா­மன் சின்­னப்­பிள்ளை இல்லை. நல்ல அறி­வாளி. எது செய்­தா­லும் அதற்கு ஒரு நல்ல கார­ணம் இல்­லாம செய்ய மாட்­டார்னு எனக்­குத் தெரி­யும்.

"நீங்க மனசை போட்­டுக் குழப்­பிக்­காம, சிங்­கப்­பூர்ப் பய­ணத்­துக்­கான ஏற்­பா­டு­க­ளைக் கவ­னிங்­கம்மா," என்று அந்த அம்­மா­ளுக்­குப் பல­வ­கை­யி­லும் ஆறு­த­லைக் கூறி­விட்டு, "அப்ப, நாங்க புறப்­ப­டு­றோம், எல்­லாம் நல்­ல­ப­டி­யா­கவே நடக்­கும். "நாங்க வரட்­டுமா?" என்­ற­வாறு சர­வ­ணப் பெரு­மாள் தம்­ப­தி­கள் புறப்­பட்­ட­னர்.

"சரிப்பா, சிங்­கப்­பூர் போன­தும் என் மனக்­க­வலை பற்றி சிவா­வுக்கு எடுத்­துச் சொல்­லுங்க. "முடிந்தா எனக்­குப் போன் செய்­யச் சொல்­லுங்க," என்­றார் சிவ­காமி அம்­மாள்.

சிவ­ரா­ம­னின் ஏற்­பாட்­டில் ஒரு சில வாரங்­களில் தாயா­ருக்­கும் தங்­கைக்­கும் பாஸ்­போர்ட் வந்து சேர்ந்­தது.

மைதி­லி­யின் மின் அஞ்­ச­லில் விமான டிக்­கட்­டு­களும் வந்­தன.

திருச்­சி­யி­லி­ருந்து சிங்­கப்­பூர் புறப்­படும் அந்த நாளும் வந்­தது. சிங்­கப்­பூர்ச் சாங்கி அனைத்­துலக விமான நிலை­யத்­தில் தாயும் தங்­கை­யும் வந்து இறங்­கி­ய­தைக் கண்­ட­தும் சிவ­ரா­ம­னுக்­குச் சொல்ல முடி­யாத மகிழ்ச்சி.

"வாங்­கம்மா, வா மைதிலி" இவர்­தான் ராம­நா­தன், அது அவ­ரின் சகோ­தரி சாரதா!

அவர்­க­ளின் அப்பா கிருஷ்­ணய்­யா­வும் அம்மா வைதே­கி­யும் நமக்­காக வீட்­டில் காத்­தி­ருக்­கி­றார்­கள்."

சிவ­ரா­ம­னின் தாய­ரும் தங்­கை­யும் ஊரி­லி­ருந்து வரு­கி­றார்­கள் என்­ற­தும் அவ­னு­டைய நண்­பர்­களும் அவ­னு­டைய சமூக நிலைய சகாக்­களும் விமான நிலை­யத்­தில் குழு­மி­யி­ருந்­த­னர்.

சிவ­காமி அம்­மா­ளுக்­குச் சொல்­ல­மு­டி­யாத வியப்பு. நம்ம பிள்­ளைக்கு சிங்­கப்­பூ­ரில் இவ்­வ­ளவு தோழர்­களா என்று அவர் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார்.

மைதி­லி­யும் தன் அண்­ண­னுக்கு இங்கு இவ்­வ­ளவு செல்­வாக்கா என்று எண்ணி மகிழ்ந்­தாள்.

சிவ­ரா­மன், ஒவ்­வொ­ரு­வ­ராக தனக்கு வேண்­டி­ய­வர்­களை அம்­மா­வுக்­கும் தங்­கைக்­கும் அறி­மு­கம் செய்­து­வைத்­தான். அவர்­களும் சற்­றும் தயங்­கா­மல் அனை­வ­ருக்­கும் வணக்­கம் கூறி­னர்.

சிவ­ரா­மன் சிங்­கப்­பூர் குடி­மகன் ஆன­வு­டன் உட்­லண்ஸ் பகு­தி­யில் ராம­நா­த­னின் வீட்­டுக்­க­ரு­கி­லேயே, வாடகை வீட்டை அமைத்­துக்­கொண்­டார்.

அன்று கிருஷ்­ணய்­யா­வும் அவர் மனைவி வைதே­கி­யும் ராம­நா­த­னு­டன் சிவ­ரா­ம­னைக் காண வந்­தி­ருந்­தார்­கள்.

எல்­லா­ரும் மகிழ்ச்­சி­யோடு இருந்­தார்­கள். சிவ­கா­மி­யம்­மாள் மட்­டும் ஏதோ கவலை படர்ந்த முகத்­து­டன் இருந்­தார்.

அந்த நேரம் பார்த்து அவர்­களின் குடும்ப நண்­பர் சர­வ­ணப் பெரு­மாள் தம் குடும்­பத்­தோடு அங்கு வந்து சேர்ந்­தார்.

சிவ­ரா­ம­னின் வீடு நான்கு அறை வீடு என்­ப­தால், அங்கு அனை­வ­ருக்­கும் இடம் தாரா­ள­மாக அமைந்­தி­ருந்­தது. அவ­ரைப் பார்த்­த­தும் சிவ­காமி அம்­மா­ளின் சோகம் மெது­வாக மறைந்­தது.

"தம்பி சிங்­கப்­பூர் வந்­த­தும், சிவ­ரா­மனை எனக்­குப் போன் செய்ய சொன்­னேன் சொல்ல மறந்­திட்­டீங்­களா?"

"ஆங்... சொன்­னேன் அம்மா, ஆனா எல்­லா­ரை­யும் நேரில் பார்க்­கப் போற­தாலே எல்­லாத்­தை­யும் இங்­கேயே பேசிக்­க­லா­முன்னு சிவா சொல்­லிட்­டாரு."

"அம்மா, ஊர் கல்­யா­ணங்­களை நான்­தான் நிறுத்­தச் சொன்­னேன். எல்­லாத்­துக்­குமே கார­ணம் இருக்கு."

"வாங்க, இங்கே உட்­கார்ந்து பேசு­வோம்," என்று மைதி­லி­யை­யும் அழைத்­துக்­கொண்டு உள்ளே போனான் சிவ­ரா­மன்.

"அது­தான் ஏன்பா?" அம்மா கேட்­டது ஒரு மாதி­ரி­யாக இருந்­தா­லும், சிவ­ரா­மன் மலர்ந்த முகத்­து­டன் தாயைப் பார்த்­துப்­பே­சி­னான்.

"அம்மா, நெருக்­க­மான இரத்த தொடர்­புள்ள கல்­யா­ணங்­களை நான் ஆத­ரிக்கமாட்­டேன்மா, அது பிறக்­கப் போற குழந்­தை­க­ளைப் பாதிக்­கு­முன்னு ஆய்­வா­ளர்­கள் கூறி­யி­ருக்­கி­றாங்க."

"என்­னப்பா நீ, நானும் உங்க அப்­பா­வும் நெருங்­கின சொந்­தம்­தானே..? நீங்க என்ன நல்­ல­விதமா பிறக்­கி­லையா?

"அம்மா, அதற்கு இன்­னொரு கார­ண­மும் உண்டு."

"அப்­ப­டியா , என்­னப்பா அது?"

"அம்மா, மீனா­வின் விருப்­பத்­தைக் கேட்­கா­மல் அவ­ளு­டைய அப்­பா­வும் அம்­மா­வும்தான் நம்­ம­கிட்ட பேசி­யி­ருக்­காங்க, உண்­மை­யிலே மீனா­வுக்கு இந்­தக் கல்­யா­ணத்­திலே விருப்­பமே இல்­லை­யாம்."

"என்­னப்பா, அப்­படி சொல்­லுற? அவ என் அண்­ணன் மகள், உன் தாய்மா­மன் மகள் தெரி­யு­மில்லை?"

"இருக்­க­லாம் அம்மா, ஆனா, அவ அவ­ளு­டைய வேலை­யி­டத்­தில் கேச­வன் என்­ப­வரை விரும்­பு­வ­தா­க­வும் அந்­தக் காதலை நிறை­வேற்றி வைக்­கும்­ப­டி­யும் எனக்­குக் கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றாள். இதோ பாருங்க கடி­தத்தை," என்­ற­வாறு, தனக்கு வந்த கடி­தத்தை அம்­மா­வி­டம் நீட்­டி­னான் சிவ­ரா­மன்.

மகன் கொடுத்த கடி­தத்தை வெகு வேக­மா­கப் படித்து முடித்­தார் சிவ­காமி அம்­மாள்.

மீனாவை தம் மரு­ம­க­ளாக்­கிக் கொள்ள வேண்­டு­மென்று அவர் பெரி­தும் கனவு கண்டு வந்­தார்.

கடி­தத்­தைப் படித்து முடித்­த­தும் அவர் கன்­னங்­களில் கண்­ணீர் வழிந்­தோ­டி­யது. அவ­ளால் எதை­யும் நம்­ப­மு­டி­ய­வில்லை.

மகன் சிவ­ரா­மன் மீது இப்­போ­து­தான் அவ­ருக்கு ஆழ­மான நம்­பிக்கை பிறந்­தி­ருந்­தது.

"இன்­னொ­ரு­வர் மீது இத்­தனை அன்பு வைத்­தி­ருக்­கும் ஒரு பெண்ணை எப்­ப­டி­யம்மா நாம் பிரிக்க முடி­யும்?" சிவ­ரா­மன் கேட்ட கேள்வி சிவ­காமி அம்­மா­ளுக்கு நியா­ய­மா­கவே பட்­டது.

"அது சரி­யப்பா, தங்­கச்சி மைதி­லிக்­குப் பார்த்த மாப்­பிள்­ளையை எதற்­காக வேண்­டா­முன்னு சொன்னே, அவன் நல்ல பையன்­தானே?"

அம்மா, உங்­க­ளுக்கு அவ­னைப்­பத்தி சரியா தெரி­யலை. அவன் இது­வரை ஏங்­கிட்ட பல லட்­சங்­க­ளைக் கட­னாக வாங்­கிட்­டான்.

"ஏதோ தொழில் செய்­யப் போறதா சொல்லி சொல்லி எந்­தத் தொழி­லை­யும் முறை­யாத் தொடங்­கல, சரியா செய்­யலை."

"அந்­தப் பைய­னைப் பற்­றிப் பல இடத்­திலே கேட்­டுப் பார்த்­தேன், அவன்­கிட்ட பல கெட்ட பழக்­கங்­கள் இருப்­பதா பல­ரும் வேத­னை­யோட சொன்­னாங்க. இப்­பவே இப்­ப­டின்னா, கல்­யா­ணம் ஆனா எப்­ப­டியோ?"

சிவ­கா­மி­யம்­மா­ளுக்­கு, தன் மகன் இவ்­வ­ளவு விஷ­யங்­க­ளைத் தெரிந்து வைத்­தி­ருப்­பது மேலும் மேலும் வியப்பை ஊட்­டி­யது. அவ­ரின் கண்­கள் கண்­ணீர் சொரிந்­தன.

"அம்மா, இனி­மேல் எந்­தக் கவ­லை­யும் வேண்­டாம். இனி­மேல் ஆக­வேண்­டிய அடுத்­த­டுத்த நிகழ்ச்­சி­களை நாம் கவ­னிப்­ப­து­தான் நல்­லது."

"என்­னப்பா, சொல்­லுறே?"

"ஆமாம்மா, மைதி­லிக்கு சிங்­கப்­பூ­ரி­லேயே திரு­ம­ணத்­தைப் பதிவு செய்­திட்டு. நம்ம ஊரிலே, போயி, குல­தெய்வ கோயி­லிலே முறையா கலி­யா­ணத்தை செய்­தி­ட­லாம்," என்­றான் சிவ­ரா­மன்.

"ஆமாம்மா, ஜாத­க­மெல்­லாம் பார்த்­தாச்சு, மைதி­லிக்கு இந்த இரா­ம­நா­தனை கண­வ­னாக்­கி­ட­லா­முன்னு நாங்க நினைத்­தோம். நீங்க சம்­ம­திச்சா மற்ற ஏற்­பா­டு­களைச் செய்­தி­ட­லாம்."

"அது சரி சிவ­ராமா, உனக்கு கல்­யா­ணம்?"

"பெண் பார்க்க வேண்­டாமா?" - சிவ­கா­மி­யம்­மாள் சற்று வேக­மா­கவே கேட்­டார்.

"இதோ சாரதாதான்மா, ஜாத­கம் பார்த்­தாச்சு பொருத்­த­மெல்­லாம் பார்த்­தாச்சு. ஏம்மா, இந்­தப் பெண்ணை உங்­க­ளுக்­குப் பிடித்­தி­ருக்­குதா?" சிவ­ரா­மனை அன்­பு­டன் பார்த்­தார் அம்மா.

"எப்­ப­டிப்பா பிடிக்­காம போகும்? சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­தும், ஒரு சில­ரைப்­போல தாயா­ரை­யும் தங்­கச்­சி­யை­யும் மறந்­திட்­டி­யோன்னு நினைச்­சிட்­டேன்."

"நான் எப்­ப­டிம்மா என் கட­மையை மறக்க முடி­யும்?" என்­றான் சிவ­ரா­மன்.

"ஆனா, எனக்கு ஒரே ஒரு சந்­தே­கம்­தான்பா."

"என்­னம்மா?" என்று வாஞ்­சை­யோடு கேட்­டான் சிவ­ரா­மன்.

"ஆனா, இவுங்க எல்­லாம் நம்ம வகை­ய­றா­தா­னான்னு தெரி­ய­லையே அப்பா."

"என்­னம்மா நீங்க, ஒன்­று­பட்ட மனசு உள்ள எல்­லா­ரும் நம்ம வகை­ய­றாத்­தா­னேம்மா," என்று சிவா கூறி­ய­தும், அந்­தத் தாயார் சற்று அமை­தி­யா­னார்.

"சரி எல்­லாமே நல்­ல­ப­டியா முடி­வா­யி­டுச்சி, இன்­னைக்கு நல்ல நாளா இருக்­கி­ற­தாலே, பக்­கத்­திலே உள்ள சிவ கிருஷ்­ணர் ஆல­யத்­தில் வழி­பாடு செய்­திட்டு, திரு­மண உறு­திப் ­பத்­தி­ரத்தை எழு­தி­கிட்டு பதி­வுத் திரு­மண நாளை­யும் முடிவு செய்­தால் என்ன?" சர­வண பெரு­மாள்­தான் கேட்­டார். அங்­கி­ருந்த எல்­லா­ரு­டைய முகத்­தி­லும் மகிழ்ச்­சி­யின் சாயல் அழ­கு­பட கோல­மிட்­டி­ருந்­தது. அதற்­குள் கிருஷ்­ணய்யா வீட்­டுப் பணிப்­பெண் அனை­வ­ருக்­கும் சிற்­றுண்டி பரி­மா­றத் தொடங்­கி­னார்.