- நெப்போலியன்
அவன்: அடி அத்த மவளே சொல்லு
மச்சான் பொங்க சந்தைக்குப் போறேன்...
வடி வொத்த நிலவே சொல்லு
மச்சான் பொங்க சந்தைக்குப் போறேன்...
அவள்: எங்கத்த மவனே நில்லு
நானும் பொங்க சந்தைக்கு வாரேன்...
தங்க சொத்து முகமே நில்லு
நானும் பொங்க சந்தைக்கு வாரேன்...
அவன்: கருத்தவளே உனக்கு கரும்பு வாங்கி வரவா
உங் கருப்பு மொகமும் மினுக்க மஞ்சக் கெழங்கு
வாங்கி வரவா...
பொங்க வைக்கப் பானை ஒன்ணு புதுசு வாங்கி வரவா
உந் தங்க முகத்துக்கேத்த ஸ்டிக்கர் பொட்டு வாங்கி வரவா...
அவள்: வண்டி கட்டிப் போற வர நேரம் ரொம்ப ஆவும்
சண்டிக்காள ஓட்டிப்போற தூர சாயங்கால நேரம்...
சந்தைக்குள்ள நிறையா நம்ம சாதி சனப் பொண்ணு
மொந்தைக்குள்ள கள்ளாய் உம் மேனி மேல கண்ணு...
அவன்: மதுரப் பக்க மல்லி நான் மடிச்சு வாங்கி வரவா
உன் அங்கமெல்லாம் கமக்க கட்டி சோப்பு வாங்கி வரவா...
சீனிச் சேவு போண்டா செலட்டூர் சீட வாங்கி வரவா
உங் கூந்தலள்ளி முடிக்க முசிறி சீப்பு வாங்கி வரவா...
அவள்: அச்சமுள்ள சாமம் அட அய்யனாரு வீரம்
பத்திரமா நீயும் பரிசப் பாலம் கடக்க வேணும்...
அடுப்புக்குள்ள நெருப்பா அல்லல் படும் மனசு
இடுப்பு முடிச்சக் காசு நீயும் இறுக்கிப் பாத்து ஓட்டு...
அவன்: பச்ச மஞ்ச சேல நல்லாப் பாத்து வாங்கி வரவா
அதுக்கேத்த செகப்பு ரவுக்க நானுந் தேடி வாங்கி வரவா...
காது கழுத்துக் கொள்ள கலரு கம்மல் வாங்கி வரவா
உங்கையிரண்டும் சிரிக்க கண்ணாடி வளையல் வாங்கி வரவா...
அவள்: வயலுக்குள்ள கதிரு நல்லா வளர்ந்துதானே கெடக்கு
உம் மனசு போலப் பரந்து நல்லா நெறஞ்சுதானே இருக்கு...
வருசம் பூரா உழைச்சு நீயும் வசதியாக ஆன
எம் புருசனாக நீயும் எந்தப் பொங்கல் வரப் போறே...

