குறட்டை ஒலி

குறட்டை ஒலி

7 mins read
ac3a38fd-2968-44bd-99b0-6f4d656e4fd4
"பெரு­மூச்சு விட்­டுக் கை கால்­களை நீட்­டி­னேன். ஏப்ப ஒலி வந்த அதே திசை­யி­லி­ருந்து குறட்டை ஒலி வந்து கொண்­டி­ருந்­தது." படம்: பிக்ஸாபே -

சிறுகதை

டாக்டர் மு.வரதராசன்

நாங்­கள் மேல் மாடி­யில் குடி­யி­ருந்­தோம். கீழே வட­ப­கு­தி­யில் ஒரு குடும்­ப­மும், தென்­ப­கு­தி­யில் ஒரு குடும்­ப­மும் இருந்­தன. தென்­ப­கு­தி­யார் வறு­மை­யால் வாடி இளைத்­த­வர்­கள். கண­வன், மனைவி, ஆறு குழந்­தை­கள், ஒரு பாட்டி, ஒரு நாய் என்று பெரு­கிய குடும்­பம் அது. வட பகு­தி­யார் செல்­வம் செழித்­துக் கொழுத்­த­வர்­கள். திரு­ம­ண­மாகி இரு­பது ஆண்­டு­கள் ஆகி­யும் குழந்தை இல்­லா­மல் ஏங்­கு­கின்­ற­வர்­கள். அவர்­க­ளின் கூடத்­தி­லும் அறை­க­ளி­லும் நிறை­யப் படங்­கள் உண்டு. ஓர் அல­மாரி நிறை­யக் குழந்­தைப் பொம்­மை­களும், நாய்ப் பொம்­மை­களும் உண்டு. உயி­ரு­டன் இயங்­கி­ய­வர்­கள் எலி, எறும்பு முத­லி­யவை தவிர, அந்­தக் கண­வன் மனைவி இரு­வர்­தான். ஆனால், அவர்­கள் இருந்த பகுதி தூய்­மை­யாக, ஒழுங்­காக இருந்­தது.

பொருள்­கள் வைத்­தவை வைத்­த­ப­டியே இருந்­தன. அவர்­க­ளின் தும்­மல், இரு­மல், ஏப்­பம், கொட்­டாவி தவிர, வேறு எந்த ஒலி­யும் கேட்­ப­தில்லை. தென்­பகு­திக் குடும்­பமோ ஆர­வா­ரம் மிகுந்­தது. குழந்­தை­கள் எந்­நே­ர­மும் ஒன்றை ஒன்று அடித்­துக்­கொண்டு அமர்க்­க­ளம் செய்­யும்.

தாய்க்­கும் தந்­தைக்­கும் குழந்­தை­க­ளின் வழக்­கைக் கேட்டு தண்­டிக்­கும்­வேலை நிறைய இருந்­தது.

போலிசு ­நி­லை­யம், நீதி­மன்­றம், சிறைக்­கூ­டம் எல்­லாம் அங்கு இருந்­தன. அந்­தக் கிழவி எந்­நே­ர­மும் சளைக்­கா­மல் இரு­மிக்கொண்­டி­ருந்­தாள்.

இரு­மல் ஓய்ந்த நேரத்­தில் பாக்கு உலக்­கை­யால் வெற்­றி­லைப் பாக்கை நறுக்கி, 'லொட்­லொட்' என்று குத்திக் கொண்­டி­ருந்­தாள். அது­வும் ஓய்ந்த நேரத்­தில் வரு­வார் போவார் இடத்­தில் மரு­மகளைப் பற்றி வசை­பா­டிக்­கொண்­டி­ருந்­தாள்.

இடை­யி­டையே, கிழ­வி­யின் வாழ்க்­கைக்கு அமைந்த தாளம்­போல், அவர்­கள் வளர்க்­கும் நாய் தெரு வழியே போவோ­ரைப் பார்த்து, உறு­மிக் கொண்­டும் குலைத்­துக் கொண்­டும் இருக்­கும்.

சில வேளை­களில் மேலே இருந்து நான் எட்­டிப் பார்ப்­பது உண்டு. அவர்­க­ளின் கூடத்­தில் கண்ட பொருள்­கள் கண்­ட­படி சித­றிக் கிடக்­கும். வட பகு­தி­யா­ரின் கூடத்தை எட்­டிப் பார்க்­க­லாம் என்­றால், பார்ப்­ப­தற்கு அங்கே ஒன்­றும் இருக்­காது.

இவர்­க­ளின் அமர்க்­க­ள­மும் அலங்­கோ­ல­மும் அவர்­க­ளுக்­குப் பிடிப்­ப­தில்லை. எந்­தக் குடும்­ப­மா­வது வேறு வீட்­டில் இடம் பார்த்­துக்­கொண்டு அகல்­வார்­களா என்­றால், அது­வும் இல்லை.

இரு சாரா­ரும் மனப்­பொ­ருத்­தம் இல்­லா­மல் தனித்­த­னியே வாழ்ந்து வந்­தார்­கள். ஆனால், அவர்­க­ளால் எங்­க­ளுக்கு எந்­தக் குறை­யும் இல்லை.

தனியே மேல் மாடி­யில் இருந்த­ப­டி­யால், நாட­கம் பார்ப்­ப­து­போல் கீழே நடந்­த­வற்றை வேடிக்­கை­யா­கக் கவ­னித்­துக்­கொண்டு வந்­தோம்.

ஏழை­யின் மனைவி நிறைந்த கர்ப்­ப­வ­தி­யாக இருந்­தாள். அவர் வீட்டு நாயும் அப்­ப­டித்­தான் இருந்­தது. ஒரு­நாள் இரவு அவள் ஏழா­வது குழந்­தையை ஈன்­றெ­டுத்­தாள். அந்­தக் குழந்­தை­யின் புத்­தம் புதிய குரலை மேலே இருந்­த­படியே கேட்­ட­போது எனக்கு ஒரு புத்­து­ணர்ச்சி உண்­டா­னது.

இந்த உல­கத்­தில் புதி­ய­வர் ஒரு­வர் அறி­ஞரோ, கலை­ஞரோ, அர­சி­யல்­வா­தியோ, தொழி­லா­ளியோ புதி­தாக வந்து சேர்ந்­த­தாக எண்­ணி­னேன். அவ­ரு­டைய முதல் குர­லைக் கேட்­கும் பேறு எனக்­குக் கிடைத்­ததே என்று மகிழ்ந்­தேன்.

அடிக்­கடி அந்­தக் குர­லைக் கேட்­ப­தில் விருப்­பம் இருந்­தது. ஆனால், குழந்­தையை ஏன் இப்­படி அழ­வி­டு­கின்­றார்­களோ என்ற வருத்­த­மும் இருந்­தது.

செல்­வ­ரின் மனைவி அதன் குர­லைப் பற்றி என்ன எண்­ணி­னாளோ, தெரி­ய­வில்லை. நம்­வீட்டில் அழத்­தெ­ரி­யாத குழந்­தைப் பொம்மை இருக்­கிறது.

இப்­ப­டிப்­பட்ட உயி­ருள்ள குழந்தை இல்­லையே என்று ஏங்­கிப் பொறா­மைப்­பட்­டாளோ, அல்­லது, உள்ள கூச்­சல் போதா­தென்று இது­வும் வந்து சேர்ந்­ததே என்று வெறுப்பு அடைந்­தாளோ, என்­னவோ!

சில நாள்­களில் அந்த நாய் ஐந்து குட்­டி­களை ஈன்­றது. மேலே இருந்து ஆவ­லோடு எட்­டிப் பார்த்­தேன். இரண்டு குட்­டி­கள் வெண்­ணி­ற­மாய்ச் சின்ன கரும்­பட்­டை­க­ளோடு இருந்­தன. மற்ற மூன்­றும் தாய்­போ­லவே செந்­நி­ற­மாய் இருந்­தன. அந்த வெள்­ளைக் குட்­டி­களில் ஒன்றை எடுத்து வளர்க்­க­லாமா என்ற ஆசை தோன்­றி­யது.

இன்­னும் கொஞ்­சம் வள­ரட்­டும், பிறகு எடுத்து வளர்க்­க­லாம் என்று அமை­தி­யா­னேன்.

அடுத்த மூன்­றாம் நாள் காலை­யில் வெளியே சென்ற அந்­தத் தாய்­நாய் நெடு­நே­ரம் ஆகி­யும் திரும்பி வர­வில்லை. அந்த ஐந்து குட்­டி­களும் 'கய்ங் கய்ங்' என்று ஓயா­மல் கத்­திக் கொண்­டி­ருந்­தன.

"என்­ன­டி­யம்மா இந்­தக் குட்­டி­யெல்­லாம் இப்­ப­டிக் கத்­துதே. கவ­னிக்­கக் கூடாதா. பாவம்?" என்­றாள் கிழவி.

"அந்த நாய் காலை­யிலே போனது இன்­னும் வர­வில்லை அத்தை. பால் இல்­லா­மல் குட்டி எல்­லாம் கத்­துது" என்­றாள் மரு­மகள்.

"ஏதா­வது பாலா­வது கஞ்­சி­யா­வது வார்க்­கக் கூடாதா?" என்­றாள் கிழவி.

"பாலுக்கு நாம் எங்கே போவது? கஞ்சி வார்த்­தால் செத்­துப் போகுமே" என்­றாள் மரு­மகள்.

இதைக் கேட்­டுக்­கொண்­டி­ருந்த என் மனம், "இப்­ப­டி­யும் உல­கம் இருக்க வேண்­டுமா?" என்று வருந்­தி­யது.

பிற்­ப­க­லில் குட்­டி­க­ளின் 'கய்ங்' ஒலி வர வரப் பெரு­கி­யது. பெரிய பிள்­ளை­கள் இரு­வ­ருக்­கும் சொல்லி நாயைத் தேடிக்­கொண்டு வரும்­படி அனுப்­பி­னாள் மரு­ம­கள்.

அவர்­கள் இங்­கும் அங்­கும் தேடி­விட்டு 'இல்லை' என்று திரும்­பி­னார்­கள்.

மாலை­யில் கண­வர் வந்­த­வுடன், "பெரிய கண்(ண)றாவி­யாக இருக்­கிறது. எங்­கே­யா­வது பார்த்­துப் பிடித்­துக்கொண்டு வாங்க. இளங் குட்­டி­கள் இர­வெல்­லாம் கத்­துமே" என்­றாள் மனைவி. கண­வர் தம் சட்­டை­யைக் கழற்­றா­த­ப­டியே குட்­டி­க­ளைப் பார்த்­துக்­கொண்டு வாச­லில் நின்­றார். "தாய்க்கு இல்­லாத அன்பா? எங்­கே­யா­வது இருந்­தால் எப்­போதோ வந்­தி­ருக்­குமே. முனி­சி­பா­லிட்­டி­யார் பிடித்­துக்­கொண்டு போயி­ருப்­பார்­கள். பொழு­தும் போச்சே" என்று சொல்­லிக்­கொண்டே வெளியே நடந்­தார்.

விளக்கு வைக்­கும் நேரத்­தில் செல்­வர் மனைவி மேலே வந்­தாள். என் மனை­வி­யோடு ஏதோ குறை சொல்­லத் தொடங்­கி­னாள். நான் பக்­கத்து அறை­யி­ல் இ­ருந்து கேட்­டுக்கொண்­டி­ருந்­தேன்.

"லைசென்ஸ் பணம் கட்ட முடி­யா­த­வர்­கள் நாய் ஏன் வளர்க்க வேண்­டும்? நாங்­கள் அவர்­க­ளோடு பேசு­வதே இல்லை. நீங்­க­ளா­வது கொஞ்­சம் சொல்­லுங்­கள். இர­வெல்­லாம் தூக்­கம் இல்­லா­மல் போய்விடுமே. எடுத்­துத் தொலை­வில் கொண்­டு­போய் விட்­டு­விட்­டால், வழி­யில் போகி­ற­வர்­க­ள் ஆளுக்கு ஒன்று எடுத்­துக்­கொண்டு போய்­வி­டு­வார்­கள். நீங்­கள் வந்து சொல்­லிப்­பா­ருங்­கள்" என்­றாள்.

அவள் கீழே இறங்­கிய சிறிது நேரத்­தில் என் மனைவி தென் பகு­தி­யா­ரி­டம் சென்று பேசிக்­கொண்­டி­ருந்­தாள். திரும்பி வந்­த­தும், "என்ன செய்தி?" என்று கேட்­டேன்.

"மூன்று நாள் குட்­டி­கள்; வெளியே விட்­டால் செத்­துப்­போகும். யாரா­வது எடுத்­துக்­கொண்டு போனா­லும் வளர்க்க முடி­யாது. இராப்­பொ­ழுது எப்­ப­டி­யா­வது கழிந்­து­விட்­டால், நாளை முனி­சி­பா­லிட்­டிக்­குப் பணம் கட்டி, நாயை மீட்­டுக் கொண்­டு­வந்து காப்­பாற்­ற­லாம்" என்­றார்­க­ளாம்.

"இதை வட பகு­தி­யா­ரி­டம் சொன்­னாயா?" என்­றேன்.

"சொன்­னேன். கதவு, சன்­னல் எல்­லா­வற்­றை­யும் சாத்­தி­விட்­டுக் குட்­டி­க­ளின் ஒலி கேட்­கா­த­படி செய்­து­விட்­டுத் தூங்­குங்­கள் என்று சொன்­னேன்" என்­றாள்.

இரவு ஒன்­பது மணிக்­கு­மேல் ஆயிற்று. வீட்­டுச் சிறு­வர்­க­ளின் ஒலி­யெல்­லாம் அடங்­கி­ன­ப­டி­யால் குட்­டி­க­ளின் ஒலி, தொடர்ந்து பாட்­டுப்­போல் கேட்­டது.

வடபகு­தி­யார் குங்­கு­மப்­பூ­வும் சர்க்­க­ரை­யும் கலந்து சுண்­டக் காய்ச்­சின பாலை வயி­றா­ரப் பருகி­விட்­டுக் கத­வைச் சாத்­திக்­கொண்­டார்­கள்.

தென்­ப­கு­தித் தலைவி, குட்­டி­களின் அருகே உட்­கார்ந்து இரக்­கத்­தோடு பார்த்து, அவற்றை மெல்­லத் தட­விக்­கொண்­டி­ருந்­தாள். அவ­ளு­டைய கண­வர், இளங் குழந்­தை­யைக் கையில் வைத்­துக்­கொண்டு, இங்­கும் அங்­கும் நடந்து கொண்­டி­ருந்­தார். இளங் குழந்தை அழத் தொடங்­கி­யது.

"குழந்­தைக்­குப் பால் கொடு" என்று மனை­வியை வற்­பு­றுத்­தி­னார். அவள் அரை மனத்­து­டன் எழுந்து குழந்­தை­யு­டன் உள்ளே சென்­றாள்.

பகல் முழு­தும் உழைத்த ஏழைத் தொழி­லாளி ஆகை­யால், அவ­ருக்கு மேன்­மேலும் கொட்­டாவி வந்­தது. சிறிது நேரம் நின்று குட்­டி­க­ளைப் பார்த்­து­விட்டு அவ­ரும் உள்ளே சென்­றார்.

இனி எல்­லோ­ரும் உறங்­கி­விடு­வார்­கள் என்று எண்ணி நானும் படுக்­கச் சென்­றேன். ஆனால் உறக்­கம் வர­வில்லை. உல­க­மெல்­லாம் நாய்க்­குட்டி மய­மாக இருப்­ப­தா­கத் தோன்­றி­யது.

அந்­தக் 'கய்ங் கய்ங்' ஒலி தவிர வேறு ஒன்­றும் கேட்­க­வில்லை. ஒரே முறை மட்­டும் வட பகு­தி­யார் ஏப்­பம் விட்ட ஒலி கேட்­டது. காற்று வேண்­டும் என்று ஓரிரு சன்­னல் திறந்து வைத்­தி­ருப்­பார்­கள் என்று எண்­ணி­னேன்.

குட்­டி­க­ளின் ஒலி பொறுக்க முடி­யாத எல்­லைக்­குச் சென்­றது. திடீ­ரென்று ஒவ்­வொரு சுர­மா­கக் குறைந்து வரு­வதை உணர்ந்­தேன்.

என்ன கார­ணமோ, குட்­டி­களும் ஒவ்­வொன்­றா­கத் தூங்­கத் தொடங்­கு­கின்­ற­னவோ என்று எண்­ணி­னேன்.

சிறிது நேரத்­தில் அவற்­றின் ஒலி பாதி அள­விற்­குக் குறைந்­து­விட்­டது. ஏதோ கார­ணம் இருக்க வேண்­டும் என்று எண்ணி, பார்க்­க­லாம் என்று எழுந்­தேன்.

மேற்கு நடை­யில் நின்று சாய்ந்து பார்த்­தேன். கீழே கிழக்கு நடைப்­பு­றத்­தில் சின்ன மண்­ணெண்­ணெய் விளக்­கின் ஒளி தெரிந்­தது.

அந்த ஏழை­யின் மனைவி குட்­டி­க­ளின் பக்­கத்­தில் உட்­கார்ந்­தி­ருந்­தாள்.

என்ன செய்­கி­றாள், பார்க்­க­லாம் என்று அமை­தி­யாக நின்­றேன். நான் நிற்­பது தெரி­யா­த­படி ஒரு தூணின் பக்­க­மாக மறைந்து நின்­றேன். அவள் இடக் கையில் ஒரு கொட்­டாங்­கச்சி இருந்­தது. அதில் கொஞ்­சம் பால்­போல் இருந்­தது. வலக் கையில் பஞ்­சு­போல் ஏதோ வைத்­தி­ருந்­தாள். அதைக் கொட்­டாங்­கச்­சி­யில் தோய்த்­துத் தோய்த்து ஒவ்­வொரு குட்­டி­யின் வாயி­லும் வைத்­தாள். குட்­டி­கள் அதைச் சுவைத்து அமை­தி­யா­வ­தைக் கண்­டேன். சிறிது நேரத்­தில் முக்­கால் பகுதி ஒலி அடங்­கி­விட்­டது. ஒரு குட்டி மட்­டும் கத்­திக்­கொண்டே இருந்­தது. அவள் கொட்­டாங்­கச்­சி­யைக் கீழே வைத்­து­விட்­டாள்.

வலக் கையில் இருந்த பஞ்சு போன்ற துணி­யைத் தன் மார்பு அருகே கொண்­டு­போய், தன் பாலால் அதை நனைத்து, அந்த ஒரு குட்­டி­யின் வாயில் வைத்­தாள். மூன்று முறை அவ்­வாறு செய்த பிறகு அதன் ஒலி­யும் அடங்­கி­யது. குட்­டி­கள் மூலைக்கு ஒன்­றா­கப் படுத்­துக்­கி­டந்­தன. அந்த இளங் குழந்­தை­யின் தாய், சிறு விளக்கை எடுத்­துக்­கொண்டு எழுந்து நடந்­தாள்.

விளக்­கொ­ளி­யில் அவ­ளு­டைய முகம், மலர்ந்த செந்­தா­ம­ரை­போல், மகிழ்ச்­சி­யோடு விளங்­கி­ய­தைக் கண்­டேன். என் படுக்­கைக்கு வந்து படுத்­தேன். ஏதோ சுமை இறங்­கி­ய­து­போன்ற உணர்ச்சி என் மனத்­தில் இருந்­தது.

பெரு­மூச்சு விட்­டுக் கை கால்­களை நீட்­டி­னேன். ஏப்ப ஒலி வந்த அதே திசை­யி­லி­ருந்து குறட்டை ஒலி வந்து கொண்­டி­ருந்­தது.