தெருவெல்லாம் வண்ணமிகு தோரணங்கள்
தெரிகிறதே தொன்மைமிகு பண்பாட்டில்!
தெருக்களிலே மனங்கவரும் ஆட்டங்கள்
தெவிட்டாத ஆசியத்தின் வெளிப்பாடு!
இருவாரப் பெருவிழா நாடெங்கும்
இணைத்திடுதே குடும்பங்கள் ஒன்றாக
இருக்கின்ற பந்தத்தை இறுக்கமாக
இதயங்கள் மலர்கின்ற புத்தாண்டு!
சீனமக்கள் கொண்டாடும் முயலாண்டை
சேர்ந்துநாம் வரவேற்போம் ஒன்றிணைந்தே!
- சீர்காழி உ செல்வராஜு

