இரு­ளும் ஒளி­யும்

இரு­ளும் ஒளி­யும்

7 mins read
b0cb0898-4190-411b-8b77-60d689ea70d5
-

சிறுகதை

கணேஷ்பாபு

"இலக்­கி­ய­வா­தி­யக் கொண்­டா­ட­ணும் நண்பா.. இதக்கூட இந்த சமூ­கத்­துக்­குச் சொல்­லிக்­கொடுக்­க­ணுமா? ஒவ்­வொன்­னை­யும் எத்­த­ன காலத்­துக்கு சொல்­லிக்­கொ­டுத்­துக்­குட்டே இருக்­கு­றது", என்­றான் வண்­டி­யோட்டி.

"நாம­தான் புலம்­பிக்­கிட்டே இருக்­கு­றோம். வேற ஒருத்­த­ருக்­கும் இதப் பத்­தின அக்­க­றையே இல்லை. தமிழ்­நாட்­டு­ல­தான் அப்­படி இருக்­காங்­கன்னா இங்­க­யுமா?" என்­றான் முன்­னி­ருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்­த­வன்.

ஆள­ர­வ­மற்ற சாலை­யில் அந்­த கார் வேக­மா­கச் சென்று கொண்­டி­ருந்­தது. சாலை­யின் இரு பக்­க­மும் புதர் மண்­டிய காடு­கள். சாலை­யோ­ர­மாக இருந்த செடி­க­ளின் பெரிய இலை­கள் மண் நிறத்­தில் இருந்­தன. கடந்து சென்ற வாக­னங்­கள் தெறிக்க விட்­டுச் சென்ற சேற்­றுத் துளி­கள் அவ்­வி­லை­களில் இருந்து சொட்­டிக்­கொண்­டி­ருந்­தன.

வாக­னச் சத்­தம் தவிர்த்து அந்­தப் பிராந்­தி­யத்­தில் எந்த அர­வ­மும் இல்லை. முழுக்க இரு­ளி­லும் நிசப்­தத்­தி­லும் புதைந்­தி­ருந்த அந்­தச் சாலை எந்­த­வொரு திடச் சித்­தத்­தை­யும் சற்றே அசைத்­துப் பார்க்­கும் அமா­னுஷ்ய சாயலை வரித்­தி­ருந்­தது.

வண்­டி­யோட்டி சத்­த­மாக ஏப்­பம் விட்­டான்.

"கரு­மம், மட்­ட­மான ஐட்­டத்த ஊத்­திக் கொடுத்­து­ருக்­கா­னுவ," என்­றான் உட­னி­ருந்­த­வன்.

வண்­டி­யோட்டி, "ஆமாம், நண்பா, இதுக்­குத்­தான் இந்த "சிந்­த­னை­யா­ளர் வட்­டம்," கூட்­டற எந்­தக் கூட்­டத்­துக்­கும் நான் வர்­ற­தே­யில்லை. இந்த தடவ விருது குடுக்­கு­றாங்­கன்­னு­தான் வந்­தது. இல்­லைன்னா எனக்கு இங்க என்ன வேல," என்­றான் சாலை­யைப் பார்த்­த­படி.

"இலக்­கி­யம்னா என்­னன்னே தெரி­யாத பசங்க. உங்­க­ளை­யும் என்­னை­யும் மாதிரி ஆட்­கள அப்­பப்போ கூப்­பிட்டு விருது குடுத்து எங்­க­ளுக்­கும் இலக்­கி­யம் தெரி­யும்ன்னு காட்­டிக்­கி­றா­னுங்க," என்­றான் உட­னி­ருந்­த­வன்.

வண்­டி­யோட்டி தன்­முன்­னி­ருந்த கண்­ணா­டி­யைப் பார்த்­த­படி, "என்ன நண்பா, ரொம்ப அமை­தியா வந்­துட்­டி­ருக்­கீங்க. வண்டி ஏறு­னத்­தி­லி­ருந்து மௌனமா வந்­திட்­டி­ருக்­கீங்க," என்­றான்.

அது­வரை அமை­தி­யாய் இருந்த பின்­னி­ருக்­கைக்­கா­ரன் வண்­டி­யோட்­டி­யைப் பார்த்­துப் புன்­ன­கைத்­தான். தன் இருப்­பைக் காட்­டிக்­கொள்­ளக் கூடாது என்ற பிரக்­ஞை­யு­டன் இருந்­த­வ­னுக்கு இந்த உரை­யா­ட­லில் தன்னை எவ்­வி­தம் பொருத்­திக்கொள்­வது எனத் தெரி­ய­வில்லை. தீவிர இலக்­கிய வாச­கன் அவன். அவ­னுக்கு இது போன்ற மேனா­மி­னுக்­கி­க­ளோடு பழக்­க­மில்லை. ஒவ்­வொரு மனி­த­னுக்­கும் வாழ்­நாளில் கெட்ட நேரம் என்­பது ஒன்று வரும். அதி­லி­ருந்து எவ­ரும் தப்­ப­மு­டி­யாது. அதைப் போன்ற கெட்ட நேரத்­தில் அவன் அன்று மாலை மாட்­டிக்­கொண்­டான். அரு­கில் இ­ருக்­கும் நக­ரத்­தில் இருந்து இந்த ஊருக்கு நண்­ப­னைப் பார்க்க வந்­தி­ருந்­தான். அவ­னோடு சேர்ந்து ஓர் அசட்டு தைரி­யத்­தில் அந்த இலக்­கி­யக் கூட்­டத்­துக்கு வந்­தி­ருந்­தான். வந்­த­பின்­தான் தெரிந்­தது. அது வெறும் "கூட்­டம்"தான். இலக்­கி­யத்­திற்­கும் அந்­தக் கூட்­டத்­துக்­கும் தொடர்­பில்லை. கூட்­டத்­தின் முடி­வில் நண்­ப­னுக்கு வேறு ஒரு அவ­சர வேலை வந்­து­விட்­ட­தால், இவர்­க­ளின் காரில் இவனை ஏற்றி­விட்­டு­விட்­டான். இன்­னும் ஒரு மணி நேரம் மட்­டும் வாயை மூடிக்­கொண்­டி­ருந்­து­விட்­டால் போதும், ஊருக்­குச் சென்றுவிட­லாம் என்று நினைத்­தி­ருந்­த­வனை இந்த மொண்­ணை­கள் தங்­கள் உரை­யா­ட­லுக்­குள் வலிய இழுக்­கி­றார்­களே என்று கவ­லைப்­பட்­டான். ஏதா­வது சொல்ல வேண்­டுமே என்­ப­தால், " எனக்கு எது­வும் சொல்­லத் தோண­லீங்க நண்பா," என்­றான்.

முன்­னி­ருக்­கை­யா­ளன், "சும்மா பேசுங்க நண்பா, நாங்க ரெண்டு பேரும் பிர­ப­ல­மான எழுத்­தா­ள­ருங்­க­தான். ஆனா­லும், எளிய மக்­கள்ட்ட இறங்கி வந்து பழ­கு­வோம்," என்­றார்.

பின்­னி­ருக்­கை­யா­ள­னுக்கு இதைக் கேட்­ட­தும் கோபம் வந்­து­விட்­டது. சரி­தான், இன்­றைய பொழுது சுப­மா­கத்­தான் முடி­யப்­போ­கிறது என்று நினைத்­துக் கொண்டு "நான் பிர­ப­ல­மான எழுத்­தா­ள­ருங்­க­ளப் படிக்­கி­ற­தில்­லீங்க. சம­கால எழுத்­தா­ளர்­கள்ல நான் வில்­லா­ழி­யான், கொற்­ற­வன் மாதிரி எழுத்­தா­ள­ருங்­ள­தான் படிப்­பேன்," அவர்­க­ளின் பெயரை ஒரு­வித கர்­வத்­து­டன் உச்­ச­ரித்­தான்.

"சரி­தான்.. நீங்க தீவிர இலக்­கி­யக் கும்­பலா? பத்து பேருக்­குள்ள படிச்­சுக்­கு­வெய்ங்க, பத்து பேருக்கு எழு­து­வீங்க. கேட்டா தீவிர இலக்­கி­யம்னு சொல்­வீங்க," நக்­க­லா­கச் சொன்­னான் வண்­டி­யோட்டி.

"அவங்க சாகு­ற­து­கூட பத்து பேருக்­குத்­தான் தெரி­யும்" என்று சிரித்­தான் அரு­கி­லி­ருந்­த­வன்.

"ஆனா, செத்த பிறகு அவங்­க­ளோடு பேரக் காலம் எடுத்­துக்­கும் நண்பா. இன்­னும் நூறு வரு­சம் கழிச்சு உங்க பேர­யெல்­லாம் காலம் மறந்­து­ரும். அவங்க அப்­ப­வும் பசு­மையா வாசிக்­கப்­ப­டு­வாங்க," என்­றான் பின்­னி­ருக்­கை­யா­ளன்.

"செத்த பிறகு எவன் எப்­ப­டிப்­போனா என்ன நண்பா, வாழும்­போ­து­தானே நாலு பேரு நம்­மள கவ­னிக்­க­னும். ஈதல் இசை­பட வாழ்­தல்ன்­னு­தானே வள்­ளு­வரு சொல்­லி­யி­ருக்­காரு.. வாழும்­போது நம்­மள வாசிக்­கா­த­வன் செத்த பிறகு வாசிச்சா என்ன வாசிக்­க­லன்னா என்ன," என்­றான் முன்­னி­ருக்­கை­யா­ளன்.

"ஈதல் இசை­பட வாழ்­தல்ன்னு வள்­ளு­வர் சரி­யாத்­தான் சொல்­லி­யி­ருக்­காரு, அத ஏன் நீங்க ஒரு குறு­கிய காலத்­துக்­குள்ள அடைக்­கி­றீங்க. இசை­பட வாழ்­தல்ங்­க­றது, தான் ரத்­த­மும் சதை­யுமா உடம்­புக்­குள்ள வாழ்ற கால­மில்ல. அது அடுத்து வரும் பல தலை­மு­றை­க­ளோட காலத்­துக்­கும் பொருந்­தும்," என்­றான் பின்­னி­ருக்­கை­யா­ளன். இரு­ளில் அவன் முகத்தை மற்ற இரு­வ­ரால் தெளி­வா­கப் பார்க்க முடி­ய­வில்லை. ஆனால், இரு­ளை­யும் மீறி அவன் குரல் மட்­டும் கூர்­மை­யாக ஒலித்­தது.

"இந்­தத் தீவிர இலக்­கி­யக் கும்­பலே இப்­ப­டித்­தான் நண்பா. வழக்­க­மான அர்த்­தத்­துக்கு மாறா புதுசா ஏதா­வது ஒரு அர்த்­தத்­தக் கண்­டு­பி­டிச்சு சொல்­லிக்­கிட்­டி­ருப்­பாங்க. இவ­ரோட பேசு­றது நேர விர­யம்," என்­றான் முன்­னி­ருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்­த­வன்.

"அப்டி விட்ற முடி­யாது நண்பா, அவ­ருக்­கும் நாம இலக்­கி­யத்த விளங்க வைக்­க­ணும்," என்று சொன்ன வண்­டி­யோட்டி பின்­னி­ருக்­கை­யா­ள­னைப் பார்த்து, "நண்­பரே, இப்­பப் பாத்­தீங்­கன்னா, நானெல்­லாம் ஒரு கவித எழுதி ஃபேஸ்புக்ல போட்­டேன்னா, எத்­தன லைக் வரும்னு தெரி­யுங்­களா, உங்­க­ளால அத யோசிக்­கவே முடி­யாது. குறைஞ்­சது ரெண்­டா­யி­ரம் லைக் வரும். போன மாசம், காதல் தோல்­வி­யக் குறிச்சு ஒரு கவிதை எழு­தி­னேன். அந்த நெடுங்­க­வித இப்­படி முடி­யும், "போனால் போடி.. நான் இனி அழ­மாட்­டேன், தோல்வி எனக்­கென்­றால் அழ­லாம். ஆனால், தோற்­றது காத­லடி. நான் ஏன் அழ­வேண்­டும்". இந்த வரிய வாசிச்சு எத்­தன இளை­ஞர்­கள் என்­னப் பாராட்­டு­னாங்க தெரி­யுமா. ஒரு ரெண்டு நாள் என் ஃபோன ஆஃப் பண்ணி வச்­சுட்­டேன். வாட்ஸ்ப் ஸ்டேட்­ட­ஸுல இந்த வரிய வச்­சி­ருந்த ஒரு நூறு பேரை­யா­வது எனக்­குத் தெரி­யும்," என்­றான் வண்­டி­யோட்டி.

"அதுக்­குத்­தான் கூப்­பிட்டு விருது குடுக்­கு­றான்", நீங்க என்­ன­டான்னா, ஒரு கவிதை எழு­த­றீங்க. அது ஒருத்­த­னுக்­கும் புரி­ய­ற­தில்ல. பத்­துப் பேருக்­குப் புரிஞ்சா அதி­கம். அந்­தப் பத்து பேரும் அத பத்து வித­மாப் புரிஞ்­சுக்­கு­றான். கேட்டா, படி­மம், தொன்­மம்ன்னு ஏதா­வது கலைச்­சொல்­லப் போடு­றது. ஏண்டா உங்­க­ளை­யும் ஏமாத்­திக்­கிட்டு, உங்­க­ளச் சுத்­தி­யுள்­ள­வ­னை­யும் ஏமாத்­தி­கிட்டு இருக்­கீங்க. காலம் தாண்டி நிப்­போம்னு வேற பேசு­றீங்க. எங்­க­ள­யெல்­லாம் பாத்தா உங்­க­ளுக்கு நக்­கலா இருக்கா?" என்று இரைந்­தான் முன்­னி­ருக்­கை­யா­ளன்.

"நக்­கல்­லாம் இல்ல நண்பா, உங்­க­ளப்­பாத்தா பரி­தா­பமா இருக்கு," என்­றான் பின்­னி­ருக்­கை­யா­ளன். "ஒருத்­த­ரும் படிக்­க­லன்­னா­லும் இலக்­கி­யம் வாழும் நண்பா. தஸ்­தா­யெவ்ஸ்­கி­யையோ, எமிலி பிராண்­டையோ அவங்க வாழ்ந்த காலத்­துல எத்­த­னப் பேரு படிச்­சாங்க. புது­மைப்­பித்­த­னையோ, மௌனி­யையோ எத்­த­ன பேரு படிச்­சாங்க. இன்­னிக்­கும் அவங்க நிக்­கி­றாங்­கல்ல, அவங்க காலத்­துல எழு­துன எத்­த­னையோ பொது வாசிப்பு எழுத்­தா­ள­ருங்க என்ன ஆனாங்க. ராக்­கெட் வெடி மாதிரி சொற்ப நேரத்­தில் மின்னி மறைஞ்­சுட்­டாங்க. இலக்­கி­யம் ராக்­கெட் வெடி­யில்ல நண்பா, அது மலை­மேல ஏத்­தப்­பட்­டி­ருக்­கிற தீபம். அது மின்­னாது. ஆனா­லும், ஒவ்­வொரு தலை­மு­றை­யி­ல­யும் அந்த ஒளி­யத் தேடி எவ­னா­வது ஒருத்­தன் வந்­து­கிட்­டுத்­தான் இருப்­பான்," என்­றான்.

"நீங்க சொல்ற ஆளுங்­கெல்­லாம் புரி­யாத மாதி­ரியே எழு­த­ற­வங்க நண்பா," என்­றான் வண்­டி­யோட்டி.

பின்­னி­ருக்­கை­யா­ளன், "உங்­க­ளுக்­குப் புரி­ய­லன்னு சொல்­லுங்க நண்பா, எதுக்கு எல்­லா­ருக்­குமே புரி­யா­துன்னு நீங்­களே நினைச்­சுக்­கி­றீங்க," என்­றான்.

வண்­டி­யோட்­டிக்­கும் இப்­போது கோபம் பற்­றிக்­கொண்டு வந்­து­விட்­டது.

"எல்­லா­ருக்­கும்­தான் புரி­ய­லய்யா, இந்த நாட்­டுல எத்­த­னையோ பேரு எத்­த­னையோ காலம் எழு­திக்­கிட்டு வர்­றோம். எழுத்­துன்னா புரி­ய­ணும்யா, உம் பக்­கத்­துல ஒருத்­தன் வந்து ஒக்­காந்­துக்­கிட்டு ஏதோ ஒரு பாஷை­யில பேசிக்­கிட்டு, நானும் தமிழ்­தான் பேசு­றேன். உனக்­குத்­தான் புரி­ய­லன்னு சொன்னா, தமிழ் தெரிஞ்ச உனக்கு எப்­படி இருக்­கும், அப்­ப­டித்­தான்யா இருக்­குது நீ சொல்­றது," என்­றான்.

முன்­னி­ருக்­கை­யா­ளன், "இப்­ப­டித்­தான் நண்பா, எதை­யா­வது புரி­யாம எழு­திக்­கிட்டே இருப்­பா­னுங்க. கேட்டா நமக்கு அதப் புரிஞ்­சுக்­குற தகுதி இல்­லைன்­னு­வா­னுங்க". பின்­னால் திரும்பி, "நாங்­களும் இலக்­கி­ய­வா­திங்­க­தான்யா. இல்ல, நான் தெரி­யா­மத்­தான் கேக்­கு­றேன், தமிழ் பேரா­சி­ரி­ய­ருங்­களே நீங்க எழு­த­றது புரி­ய­லன்னு சொல்­றாங்க, சாதா­ரண மக்­க­ளுக்கு அப்­பு­றம் எப்­ப­டிப் புரி­யும்? எங்­க­ளுக்­குக் கிடைக்­கக்­கூ­டிய புக­ழும், கவ­னிப்­பும் உங்­கள மாதிரி ஆட்­க­ளத் தொந்­த­ர­வுக்­குள்­ளாக்­குது. பொறா­மைல என்­னன்­னவோ பேசிக்­கிட்டு திரி­ய­றீங்க," என்­றான்.

சக்­கரை போடாத காபி­யைக் குடித்­தது போல பின்­னி­ருக்­கை­யா­ள­னின் முகம் கசந்து சுருங்­கி­யது. மெல்­லிய குர­லில், "நீங்க எல்­லா­ருக்­கும் புரி­யற மாதி­ரியே எழு­துங்க நண்பா. அதுல எனக்கு எந்­தப் பிரச்­ச­னை­யு­மில்ல. ஆனா, எல்­லோ­ரும் ஏத்­துக்­குற மாதிரி எழு­து­ற­வன் இலக்­கி­ய­வா­தி­யில்ல. கரும்­பத் தின்­னக் கொடுங்க. சக்­கைய ஏன் தின்­னக் கொடுக்­கி­றீங்க," என்­றான்.

இப்­போது முன்­னால் இருந்­த­வர்­கள் இரு­வ­ருக்­கும் வெறி­யே­றி­யது. ஓட்­டு­னன் வண்­டியை நிறுத்­தி­னான், பின்­னால் திரும்­பிப் பார்த்து, "ஒழுங்கு மரி­யா­தையா இறங்­கிப் போயிடு" என்­றான்.

உட­னி­ருந்­த­வன், "நீ போற இடத்­துக்கு வண்­டில போனாலே ஒரு மணி நேரம் ஆகும். வேற வண்­டி­யும் இந்­தப் பக்­கம் வர்ற மாதிரி தெரி­யல. இப்ப நடக்க ஆரம்­பிச்சா, விடி­கா­லைல போயி சேர்ந்­தி­ர­லாம். தஸ்­தா­யெவ்ஸ்­கிய நெனச்­சுக்­கிட்டே போய்ச் சேரு," என்­றான்.

இரு­வ­ரும் உரக்­கச் சிரித்­தார்­கள்.

பின்­னி­ருக்­கை­யா­ளன் இதை எதிர்­பார்த்­தி­ருந்­த­தைப் போல எழுந்து கொண்­டான். இது எப்­போ­தும் இப்­ப­டித்­தானே இருக்­கும் என்­றும் அவ­னுக்­குத் தோன்­றி­யது. ஒன்­றும் சொல்­லா­மல், இறங்கி நடந்­தான். நடந்துகொண்டே இருந்­தான், இரு­ளைத் துணைக்­க­ழைத்­த­படி. இரு­ளில் அவ­னது உரு­வம் சிறு­புள்­ளி­யா­கத் தெரி­வது வரை மற்ற இரு­வ­ரும் பார்த்­துக்­கொண்­டே­யிருந்­தார்­கள்.

சிறிது நேரம் கழித்து, வண்­டி­யைக் கிளப்­பிய ஓட்­டு­னன், "இவ­னோட பேசிப் பேசி, போதை தெளிஞ்­சி­ருச்சு," என்­ற­படி பாக்­கெட்­டில் வைத்­தி­ருந்த சிறிய பாட்­டி­லைத் திறந்­தான்.

உட­னி­ருந்­த­வன், பாட்­டி­லைப் பார்த்­த­படி, "இலக்­கி­ய­வா­தி­யக் கொண்­டா­ட­ணும் நண்பா," என்­றான்.

*