மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகை

9 mins read
51e3c0d8-cbb9-476e-a5e5-8ed8cb9d0043
-

சிறு­கதை

பிரதீபா

"அம்மா! நான் கடந்த ஆறு மாதமா, ஆதி என்கிற பைய­னைக் காத­லிக்­கி­றேன். இந்த வரு­சக் கடைசில, தேர்வு எல்­லாம் முடிஞ்ச பிறகு திரு­ம­ணம் செய்­துக்­க­லாம்ன்னு இருக்­கோம்," என்று நேற்­றி­ரவு பூஜா சொன்­ன­போது சாரதா அதை நம்­ப­வில்லை. ஏதோ, விளை­யாட்­டுக்­கா­கச் சொல்­கி­றாள் என்றே நினைத்­தாள். ஆனால் அவளோ அதை அழுத்­தந்­தி­ருத்­த­மா­கச் சொன்­ன­போதுதான் விஷ­யத்­தின் வீரி­யமே அவ­ளுக்கு உரைத்­தது.

எதிர்­பா­ரா­மல் வந்த அந்த வார்த்தைக் கணை­க­ளால், சட்­டென்று நிலை­கு­லைந்து போனாள் சாரதா. அதன் பிறகு பூஜா கூறிய எது­வும் அவள் காது­களில் ஏற­வில்லை. பிரமை பிடித்த நிலை­யில் இருந்த அவள் எப்­ப­டிப் படுக்­கைக்­குச் சென்­றாள்? எப்­போது உறங்­கி­னாள்? என்­பது எல்­லாம் அவள் நினை­வில் இல்லை. அது­வரை, எங்கோ மூலை­யில் ஒளிந்துகொண்­டி­ருந்த எண்­ணங்­களும், நினை­வு­களும் கண் விழித்­த­பி­றகு மீண்­டும் அவ­ளைத்தாக்க, அதன் வலி தாளா­மல் படுக்­கை­யில் புரண்டுகொண்­டி­ருந்­தாள்.

வேலைக்­குச் செல்ல வேண்­டுமே என்­கிற சிந்­தனை தட்­டி­யெ­ழுப்ப, எழுந்து பார்த்­த­போது, பூஜா­வின் அறைக்­க­த­வின் இடுக்கு வழி­யா­கக் கசிந்த வெளிச்­சம், அவள் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­குக் கிளம்­பத் தயா­ரா­கிக் கொண்­டி­ருப்­பதை அவ­ளுக்கு உணர்த்­தி­யது.

நேற்­றி­ரவு நடந்த களே­ப­ரத்­தில், இரு­வ­ருமே சரி­யா­கச் சாப்­பி­ட­வில்லை. சரி, பூஜா­வுக்கு மைலோ­வைக் கலக்­கிக் கொடுத்து­விட்டு, தானும் ஒரு கப் காப்­பி­யைக் குடித்­தால் தெம்­பாக இருக்­கும் என்று தோன்ற, சமை­ய­ல­றைக்­குச் சென்று பாலைச் சூடு­படுத்­தி­னாள். சிறிது நேரத்­தில் பூஜா, அவள் அறை­யி­லி­ருந்து வெளியே வரும் சத்­தம் கேட்­டது. சமை­ய­ல­றைக்­குள் வந்து அவள் கலக்கி வைத்­தி­ருந்த மைலோவை எடுத்து மௌன­மா­கக் குடித்­தாள். வழக்­க­மாக இவ­ளைக் கட்­டிப்­பிடித்து, முத்­தம் பதித்து, 'காலை வணக்­கம்' சொல்­ப­வள், அன்று எது­வும் செய்­ய­வில்லை. இவள் தான் அவ­ளி­டம், "பூஜா, சாப்­பிட ரொட்டி வச்­சுத்­த­ரட்­டுமா? அல்­லது தோசை ஊத்­தவா?" என்று கேட்­டாள்.

"எனக்கு ஒண்­ணும் வேணாம். நான் கல்­லூ­ரில போய்ச் சாப்­பிட்­டுக்­கி­றேன். நேற்­றி­ரவு, நான் சொன்­ன­தைப் பத்தி யோசிச்சு நல்ல முடிவா சொல்­லுங்க. எனக்கு நேர­மாச்சு நான் வரேன்," என்று பட்­டும் படா­ம­லும் பேசி­விட்­டுப் போகும் மக­ளையே வெறித்­துப் பார்த்­தாள் சாரதா.

தாதி­மைத் தொழி­லிலே எத்­த­னை­யோ­வி­த­மான வேத­னை­க­ளை­யும், வலி­க­ளை­யும் துணிச்­ச­லாக எதிர்­கொண்ட அவளை, `காதல்' என்­னும் ஆயு­த­மேந்தி அடிக்­கா­மல், வலிக்­கா­மல் உயிரை மட்­டும் உருவி எடுத்­து­விட்­டாளே, இந்­தப் பாவிப் பெண்?

எது தன் வாழ்க்­கை­யில் நடந்­ததோ.. எது தன் மக­ளின் வாழ்க்­கை­யில் நடக்­கக்­கூ­டாது என்று நினைத்­தாளோ அது நடந்து விட்­டது.

"இந்­தப் பொம்­பள புள்­ளைங்­க­ளுக்­குக் காதல் வந்­து­டுச்­சுன்னா பெத்து, இத்­தன வரு­சம் கஷ்­ட­பட்டு வளர்த்­த­வங்க சொல்­ற­து­கூட, காதுல ஏற மாட்­டேங்­குது?" என்று பல வரு­டங்­க­ளுக்கு முன், அவள் தாய் கூறிய வார்த்­தை­கள் ஏனோ நினை­வுக்கு வந்து அவள் மனத்தை அரித்­தது.

இனி, நான் என்ன செய்­யப் போகி­றேன்?

எப்­படி, இதை எதிர்­கொள்­ளப் போகி­றேன்? என்ற கேள்­வி­கள் நெஞ்­சைப் பிசைய, சட்­டென்று அவ­ளுக்­குச் சித்­ரா­வின் நினைவு வந்­தது.

கைத்­தொ­லைபே­சியை எடுத்து, "சித்ரா வேலை­யி­டத்­துக்­குக் கொஞ்­சம் சீக்­கி­ரம் வா உன்­னோடு பேசவேண்­டும்," என்ற குறுஞ்­செய்­தியை அனுப்­பி­விட்டு அவள் தயா­ரா­கிப் பேருந்து நிறுத்­தத்­திற்கு வந்­த­போது, அவ­ளைக் காக்க வைக்­கா­மல், அவள் செல்லவேண்­டிய பேருந்­தும் வந்து­சேர்ந்­தது.

பேருந்­தில் ஜன்­ன­லோர இருக்­கை­யிலே அமர்ந்­து­கொண்டு வெளியே தெரி­யும் காட்­சி­க­ளை­யும், மனி­தர்­க­ளை­யும் ர­சித்­துக்­கொண்டே வரு­வது அவ­ளுக்கு மிக­வும் பிடித்­த­மான ஒன்று. சில வேளை­களில் அப்­படி இடம் கிடைக்­காத பட்­சத்­தில், ஏதோ ஒன்றை இழந்­த­தைப் போல் உணர்­வாள். இன்று, அவ­ளு­டைய மகள் வேண்­டு­மா­னால் அவளை ஏமாற்­றி­யி­ருக்­க­லாம், ஆனால் இருக்கை ஏமாற்­ற­வில்லை. இருந்­த­போ­தும், ர­சிக்­கும் மன­நி­லை­யில் அவள் இல்­லா­த­தால் கண்­கள் காட்­சி­யைப் பார்த்­துக்­கொண்டே வந்­தது தவிர, நினைவோ அவற்­றின் பின்னே பய­ணிக்­கத் தொடங்­கி­யது.

அப்­போது, அவள் சிங்­கப்­பூர் பல­துறைத் தொழில் கல்­லூ­ரி­யில் இரண்­டாம் ஆண்­டுக் கணி­தத்­துறை­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­தாள். பொது­வாக அவள் அமைதி­யா­ன­வள்; யாரு­ட­னும் அதி­க­மா­கப் பேச­மாட்­டாள்; பழ­க­மாட்­டாள்.

அந்­தச் சம­யத்­தில் அவள் தோழி­யின் மூலம் அறி­மு­க­மா­ன­வன்­தான் அவள் கண­வன் ரகு.

சிரித்­துச் சிரித்­துப் பேசி மயக்கு­வ­தில், அவ­னுக்கு நிகர் அவன்­தான். எப்­ப­டியோ அவன் விரித்த காதல் வலை­யில் இவள் சிக்­கிக்­கொண்­டாள்.

படிப்­பைப் பாதி­யில் விட்­டு­விட்டு இவள் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளப் போவ­தைத் தெரிந்து அவள் தாயும், அண்­ண­னும் எவ்­வ­ளவோ அவ­ளி­டம் மன்­றா­டி­னார்­கள். காதல் மயக்­கத்­தில் எது­வும் காதில் ஏற­வில்லை.

`எக்­கேடாவது கெட்­டுப் போ' என்று கூறி, அவ­ளைத் தலை­முழுகி விட்­டார்­கள்.

திரு­ம­ணம் முடிந்து, சில மாதங்­க­ளுக்­குப் பிற­கு­தான் அவ­னு­டைய இன்­னொரு முகம் அவ­ளுக்­குத் தெரிந்­தது.

அவன் முன்பு காத­லித்த பெண் அவனை ஏமாற்­றி­விட்டு வேறு ஒரு­வ­னைத் திரு­ம­ணம் செய்­து­கொண்ட கோபத்தை அவ­ளி­டம் காட்ட ஆரம்­பித்­தான்.

கேள்வி கேட்­டால் அடி, உதை தான்.

சாதா­ர­ண­மா­கவே வாயைத் திறந்து அதி­கம் பேசா­த­வள், அதன்பிறகு பேசு­வது என்­ப­தையே மறந்­து­போ­னாள். மறு­ப­டி­யும், அவள் பேச ஆரம்­பித்­ததே பூஜா உண்­டான பிற­கு­தான்.

சுகம், துக்­கம், அழுகை, சிரிப்பு என்று அனைத்­தை­யும் பகிர்ந்­து­கொள்ள அவ­ளுக்­கென்று ஓர் உறவு கிடைத்­தது.

அன்­ற­லர்ந்த மலர்­போ­லச் சிரிக்­கும் பூஜா­வின் சிரிப்­பில் தன் துயரை மறந்­தாள். மாலை வேளை­களில், பூஜா­வைத் தூக்­கிக்­கொண்டு சிறிது நேரம் வெளியே சென்­று­விட்டு வரு­வாள். அவ­ளுக்­கான சுதந்­தி­ரத்­தின், எல்­லைக்­கோடு அது­வரை மட்­டுமே. அப்­ப­டி­யொரு நாள், பூங்­கா­வில் இருந்­த­போது அங்கே வந்­தி­ருந்த சித்­ராவை, தன் காந்­தச் சிரிப்­பால் கவர்ந்­து­விட்­டாள் பூஜா. திரு­ம­ண­மாகி ஐந்து ஆண்­டு­கள் ஆகி­யும், குழந்தை இல்­லாத ஏக்­கத்­தில் இருந்த சித்ரா, பூஜா­வின் சிரிப்­பில் மயங்­கி­ய­தில் ஒன்­றும் வியப்­பில்லை.

இப்­ப­டிப் பூஜாவை வைத்­துத்­தான் அவ­ளுக்­கும், சித்­ரா­வுக்­கும் இடை­யி­லான நட்பு ஆரம்­பித்­தது. இவ­ளின் நிலையை அறிந்த பிறகு சித்­ரா­வின் அன்­பும் பாச­மும் கூடி­யதே தவி­ர குறை­ய­வில்லை.

தன்­னைப் பாதித்­த­வ­ரை­யில் கண­வ­னின் செயல்­க­ளுக்­கெல்­லாம் பொறுமை காத்த சார­தா­வால் குழந்­தை­யின் காலில் அவன் சிக­ரெட்­டால் சூடு வைத்த­போது தாங்­கிக்­கொள்ள இய­ல­வில்லை. கோபம் தலைக்­கேற, பொங்கி வந்த ஆத்­தி­ரத்­தை­யெல்­லாம் ஒன்று திரட்டி, அவ­னு­டைய கன்­னத்­தில் ஓங்கி அறைந்­து­விட்டு, குழந்­தை­யைத் தூக்­கிக் கொண்டு வீட்­டை­விட்டு வெளி­யே­றி­னாள். சித்­ரா­வின் உறு­துணை­யோடு, தனக்­கான ஒரு வேலை­யைத் தேடிக் கொண்­டாள்.

பூஜாவை, நல்­ல­தொரு குழந்­தைக் காப்­ப­கத்­தில் சேர்த்­து­விட்டு வேலைக்­குச் செல்­லத் தொடங்­கி­னாள். இருண்­டு­போன அவள் வாழ்க்­கை­யில் எப்­ப­டி சித்­ரா­வின் அன்­பும் ஆத­ர­வும் வெளிச்­சத்­தைக் கொண்டு வந்­ததோ, அதைப் போல, அன்­பும், பாச­மும் அதி­கம் தேவைப்­ப­டு­கிற, விரும்­பப்­ப­டு­கிற தாதி­யர் துறையை விரும்­பித் தேர்ந்­தெ­டுத்­தாள். வேலை செய்துகொண்டே பகுதி நேர­மாக தாதி­யர் படிப்பை முடித்­தாள்.

பின்­னர் ஒரு பெரிய மருத்­து­வ­ம­னை­யில் தாதி­யாக வேலைக்­குச் சேர்ந்­தாள். அதன்பிறகு படிப்­ப­டி­யாக உயர்ந்து, இன்று புற்­று­நோய் சிகிச்­சைப் பிரி­வில் தலை­மைத் தாதி­யா­கப் பணி­யாற்­று­கி­றாள்.

தெளிந்த நீரோ­டை­யைப் போல, சென்­று­கொண்­டி­ருந்த வாழ்க்­கை­யில் இரு­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் சல­னம்.

சிறிய கல்­லாக இருந்­தி­ருந்­தால் சட்­டென அடங்­கி­யி­ருக்­கும். ஆனால், 'காதல்' என்ற பெய­ரில், பெரிய குண்­டாக அல்­லவா தூக்கிப் போட்டு விட்­டாள். இதி­லி­ருந்து எப்­போது தெளிந்து தன் நிலை பெறு­வது?

என் நிலை­யைப் பார்த்­தும், அறிந்­தும்­கூட இந்­தப் பெண் இப்­ப­டிச் செய்­து­விட்­டாளே? என்ற கேள்­வி­களும் பதில்­களும் மாறி மாறித் தாக்க, நினை­வு­க­ளின் ஊடா­கப் பய­ணித்த மனத்தை நன­வு­ல­கிற்­குக் கொண்­டு­வந்­த­போது அவள் இறங்­க­வேண்­டிய இட­மும் வந்­து­சேர, இறங்கி வேக­மாக மருத்­து­வ­ம­னையை நோக்கி நடக்­கத் தொடங்­கி­னாள்.

மருத்­து­வ­மனை நுழை­வா­யி­லுக்கு வெளியே போடப்­பட்­டி­ருந்த இருக்­கை­யிலே சித்ரா இவ­ளுக்­கும் முன்­பா­கவே வந்து காத்­துக்­கொண்­டி­ருந்­தாள். இவள் வந்த வேகத்­தை­யும் இருந்த நிலை­யை­யும் கண்டு, ஏதோ பிரச்­சி­னை­யில் இருக்­கி­றாள் என்­பதை யூகித்­துக்­கொண்டு முத­லில் அவ­ளுக்­குத் தண்­ணீ­ரைக் குடிக்­கக்­கொ­டுத்து அமை­திப்­ப­டுத்­தி­னாள்.

பிறகு அவ­ளி­டம், "என்­னாச்சு சாரதா, ஏன், முக­மெல்­லாம் இப்­படி வெளி­றிப் போயி­ருக்கு? உன் குறுஞ்­செய்­தி­யைப் பார்த்­துட்டு உன் தொலை­பே­சிக்­குப் பல தடவை அழைச்­சேன். நீ எடுக்­க­வே­யில்லை. என்­னாச்சு? மறு­ப­டி­யும், உன் கண­வன் வந்து ஏதா­வது பிரச்­சினை கொடுத்­தானா, சொல்லு?"

ஓர­ளவு தன் நிலைக்­குத் திரும்­பி­யி­ருந்த சாரதா, கிளம்பி வர்ற அவ­ச­ரத்­துல தொலை­பே­சியை வீட்­டுல வெச்­சிட்டு வந்­துட்­டேன் சித்ரா. இப்போ பிரச்­சினை ரகு இல்ல, பூஜாதான்...."

"பூஜா­வுக்கு என்­னாச்சு? உடம்­புக்கு எது­வும் சரி­யில்­லையா? இல்ல, கல்­லூ­ரிலே ஏதா­வது பிரச்­சி­னையா?" என்று பதற்­றத்­து­டன் கேட்­டாள் சித்ரா.

"அவ உடம்­புக்­கெல்­லாம் ஒண்ணு­மில்லை. அவ, நல்லாதான் இருக்கா. ஆனா அவ, யாரோ ஒரு பையனை ஆறு மாசமா காத­லிக்­கி­றா­ளாம். இந்த வரு­ஷம், தேர்­வெல்­லாம் முடிஞ்ச பிறகு கல்­யா­ணம் பண்­ணிக்­க­லாம்ன்னு முடிவு பண்­ணி­யி­ருக்­காங்­க­ளாம். இதுக்கு, என்­னோட சம்­ம­தத்­தைக் கேட்டு நிக்­கிறா.."

"என்ன சொல்ற சாரதா?... நம்ம பூஜாவா? அவளா, அப்­ப­டிச் சொன்னா? நீ நிஜ­மாத்தான் சொல்றியா?.... நான், இன்­னும் அவ­ளைச் சின்­னப் பொண்­ணுன்ல நெனச்­சுக்­கிட்­டு­யி­ருக்­கேன்," என்று அதிர்ச்­சி­யும், ஆச்­ச­ரி­ய­மும் ஒன்றுசேர்ந்து சித்­ரா­வின் குர­லில் ஒலித்­தது.

நாமதான் அவள சின்­னப் பொண்­ணுன்னு நினைச்­சு­க்கிட்டு இருக்­கோம். அவ வளர்ந்­துட்டா. என்ன பேச்­சுப் பேசுறா தெரி­யுமா? மொதல்ல, அவ சொன்­னப்ப நானும் நம்­பல. ஆனா அவ முடிவை அழுத்­தந்­தி­ருத்­தமா சொன்­னப்ப நான் ஆடிப் போயிட்­டேன். நான்தான் அவள ரொம்ப நம்பி இதெல்­லாம் கவ­னிக்­காம, முட்­டாளா இருந்­துட்­டே­னோன்னு தோணுது. அதை நெனச்­சால, நெஞ்சு பட­ப­டன்னு அடிச்­சு­குது."

"ஏய்! சாரதா... எதுக்கு இவ்­வ­ளவு பட­ப­டப்பு. ஏற்­கெ­னவே உனக்­குப் பிளட் பிர­ஷர் இருக்கு. இப்­ப­டி­யி­ருந்தா உனக்கு ஏதா­வது ஆயி­டும். மொதல்ல கண்­ணைத் தொட."

"சின்­னச் சின்ன விஷ­யங்­க­ளைக்கூட என்­கிட்ட பகிர்ந்து­கிட்­டவ இந்­தக் காதலை மட்­டும் சொல்­லாம மறைச்­சுட்­டா­ளேன்னு நெனைக்­கும்­போது தாங்க முடி­யல," என்று குமு­றி­னாள் சாரதா.

"என்ன பண்­றது அவ வயசு அப்­படி. எங்க சொன்னா உன்­னோட நிலை­யைக் கார­ணம் காட்டி நீ அத மறுக்­க­லாம்ன்னு நெனச்­சு­கூட உன்­கிட்ட அத மறைச்­சி­ருக்­க­லாம். காத­லிக்­கிறது சரி. இப்போ கல்­யா­ணத்­துக்கு எதுக்கு இத்­தன அவ­ச­ரம்ன்னு கேட்­டியா?"

"அந்­தப் பைய­னோட அப்­பா­வுக்கு உடல்­நிலை மோசமா இருக்­காம். அத­னால கல்­யா­ணத்தை உடனே செய்­ய­னும்ன்னு நினைக்­கி­றாங்­க­ளாம். இப்போ நான் என்ன பண்­ணப் போறேன் சித்ரா. எந்­தக் காதல் என் வாழ்க்­கையையே சிதைத்­ததோ எந்­தக் காத­லால நான் வாழ்க்­கை­யில தோத்­துப்போய் உட்­கார்ந்து இருக்­கேனோ அதே காதல் இப்போ என் பொண்ணு வாழ்க்­கை­யை­யும் பாதிச்­சி­ரு­மோன்னு பயமா இருக்கு."

"சாரதா, பல பேரோட அன்­புக்­குப் பாத்­தி­ரமா இருக்­கிற நீயா வாழ்க்­கை­யில தோத்­துட்­டேன்னு சொல்ற. பல வரு­சங்­க­ளாக, இதே மருத்­து­வ­ம­னை­யில அலு­வ­ல­கப் பிரி­வில வேலை பார்த்­துக்­கிட்டு வர்ற எனக்­குக்­கூட, நோயா­ளிங்­க­ளப் பாத்து பாத்து என்ன வேலைடா இதுன்னு? சலிப்­ப­டஞ்­சி­ருக்­கேன். ஆனா அன்­றி­லி­ருந்து இன்­று­வரை முகம் கோணாம, உன் உதட்­டி­லி­ருக்­கும் புன்­னகை மாறாம புற்­று­நோயா­ளி­க­ளுக்கு நீ செய்­யிற சேவை­யைப் பார்த்து பல தடவை நானே பிர­மிச்­சுப் போயி­ருக்­கேன். ஏன்? சில வேளை­க­ள்ல பொறாமை கூடப்­பட்­டி­ருக்­கேன். அது­மட்­டு­மில்­லாம மன­த­ள­வுல சோர்ந்து போய் இருக்­கிற அவங்­க­ளுக்கு உன்­னு­டைய கனி­வான பேச்­சால, ஊக்­கத்­தால, அவங்க இழந்த துணிச்­ச­லைத் திரும்­பப் பெற்று தந்­து­ருக்கே. நீ கொடுத்த ஊக்­கத்­தால பலர் இந்த நோயோட துணிச்­சலா போராடி, இது­ல­யிருந்து மீண்டு வந்­து­ருக்­காங்க என்­பதை நான் சொல்லி உனக்­குத் தெரிய வேண்­டி­ய­தில்லை.

சிகிச்­சைக்கு வரும் சண்­மு­கம் அய்யா, ஒருபடி மேலே போயி உன்­னைத் தேவ­தையா அல்­லவா பார்க்­கு­றாரு. அந்த வானத்­துத் தேவதை கையில மந்­தி­ரக்­கோலை வச்­சி­கிட்டு மகிழ்ச்­சி­யை­ அள்­ளித் தரு­துனா, இந்த `பூலோக தேவதை' தன் உதட்­டி­லி­ருக்­கும் 'மந்­தி­ரப்­புன்­ன­கை­யாலே' என்­னைப் போல உள்­ள­வங்­க­ளுக்கு அன்­பை­யும் அமை­தி­யை­யும் அள்­ளித் தரு­துன்னு அடிக்­கடி சொல்லு­வாரு.

இப்­ப­டிப் பல பேரோட வாழ்க்­கைய திருப்­பிக்கொடுத்த நீதான் வாழ்க்­கை­யில உண்­மையா ஜெயிச்­சு­ருக்கே.

"இப்­படி அடுத்­த­வர்­க­ளின் வலி­யை­யும், வேத­னை­யை­யும் சுல­ப­மா­கக் கையா­ளத் தெரிந்த உன்­னால பூஜா­வின் காதலை மட்­டும் ஏன் சாதா­ர­ண­மாக எடுத்­துக்க முடி­யல? கார­ணம், உன் மன­சுல ஆறாத வடு­வாக, காதல் என்ற கத்­தி­யால கீறப்­பட்ட காயத்­தின் ரண­மும் வலி­யும்தான் உன்னை இந்த அள­வுக்­குத் துடிக்க வைச்­சி­ருக்கு.

"காத­லால, உனக்கு ஏற்­பட்ட நிலைமை எங்கே பூஜா­வுக்­கும் ஏற்­பட்டு விடு­மோங்­கற பயம் தான் உன்னை இப்­ப­டிப் பதட்­டப்­பட வெச்­சி­ருக்கு.

"முதல்ல, உன்­னோட பயத்­தை­யும், பதற்றத்­தை­யும் தூக்­கிப் போடு," இப்ப என்ன? அவ கல்­யா­ணம் பண்­ணி­கிட்டா போயிட்டா? காத­லிக்­கி­றேன், கல்­யா­ணம் பண்ணி வையுங்­கன்னு தானே கேக்­குறா... முதல்ல, அந்­தப் பையன் யாரு? குடும்­பம் எப்­ப­டின்னு? விசா­ரிப்­போம். ஒத்து வந்தா பார்ப்­போம்.

இல்­லைன்னா பூஜா­கிட்ட பக்கு­வமா பேசிப் புரியவைப்­போம். அவ கேப்­பாங்­கிற நம்­பிக்கை எனக்­கிருக்கு. மொதல்ல இந்த 'டிஷ்­யூ­வால' முகத்த தொட. மறு­ப­டி­யும், நான் அந்­தப் பழைய சார­தா­வைப் பார்க்­கணும் அதே மந்­தி­ரப்­புன்­ன­கை­யோட."

அது­வரை, தெளி­வற்ற நிலை­யில் இருந்த சார­தா­விற்­குப் பட்­டென்று மனத்தை மறைத்­தி­ருந்த திரை வில­கி­னாற்போல் ஓர் உணர்வு ஏற்­பட்­டது. வாழ்வா சாவா என்று அனு­தி­ன­மும் போரா­டிக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளின் வலியை விடவா என் வலி பெரி­யது?

பாசம் கண்ணை மறைக்கப் பார்த்ததே?

நல்­ல­வேளை!

சித்ரா, அதைச் சுட்­டிக்­காட்டி விட்­டாள். அது­வரை, அவ­ளைச் சூழ்ந்­தி­ருந்த கவலை மேகங்­கள் வில­கிச்செல்ல, தெளிந்த முகத்­தோ­டும் சஞ்­ச­ல­மில்­லாத மனத்­தோ­டும் நட்­பின் இலக்­க­ண­மாய்த் திக­ழும் தன் தோழியை நோக்கி, தன்­னு­டைய வழக்­க­மான 'மந்­தி­ரப்­புன்­ன­கை­யைப்' பூத்­தாள் சாரதா. *