விம்மல்

வெய்யோனின் வெண்கதிர்கள் பட்டதில்லை!

அதிகாலைப் பனிக்காற்றில் முகம் மோதியதில்லை!

சில்லென்ற மழைத்தூரலில் நனைந்ததுமில்லை!

ஆனாலும் ஆனந்தத்திற்கு அளவில்லை!

மாட மாளிகைகளைக் கண்டதில்லை!

பஞ்சு மெத்தைகளில் புரண்டதில்லை!

மின்விசிறியைக் கண்டதேயில்லை!

தென்றலின் அவசியமே ஏற்படவில்லை!

வேளாவேளை உணவிற்கு குறைவில்லை!

உறக்கத்திற்குப் பஞ்சமேயில்லை!

உடலுழைப்பிற்குத் தேவையில்லை!

மனதில் எந்த வஞ்சகமுமில்லை!

என் துயரெல்லாம் இது நெடுநேரம்

நீடிக்கப் போவதில்லை!

இனி இந்த இடத்தை வாழ்வில் மறுமுறை

நான் காணப் போவதுமில்லை!

என் தாயின் கருவறைக் கதகதப்பை

விட்டு வெளி வரப்போகிறேன்!

தாயன்பைத் தவிரக் கலப்படமில்லா

இப்பனிக்குடத்தின் தூய மீச்சிறுவெளியில் . . .

கடைசியாக ஒரு முறை சுவாசித்துக் கொள்கிறேன்

காலப்பெருவெளியில் அடைக்கலம் ஆகும் முன்!!!

சரஸ் வேல்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!