தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேதம்

1 mins read
9207a501-be03-4f4c-b0af-7ef75de40c95
-

கி. சுப்பிரமணியம்

வண்ணப் பறவையாம் பச்சை கிளிகளை

கண்டால் மனதை கவரும் - மண்ணில்

கருப்பின காகத்தை கூண்டில் அடைத்தே

பொறுப்பாய் வளர்ப்பரோ பார்

தெருவினில் நாய்கள் திரியும் பசியால்

தருவதற்கு யாருக்கும் தோன்றா - உருவத்தில்

மெருகான நாய்களை மெல்ல தழுவி

பெருமிதம் கொள்வோர் பலர்

சாதிகள் போற்றும் சுயநல போக்கினை

நாதியற்ற நாயிடமும் நோக்கிடும் - போதிய

சிந்தனை இல்லா சிறுமதி மானிடரால்

நொந்தன சிற்றுயிர்கள் நாளும்!

குறிப்புச் சொற்கள்