யாரோடும் பகையில்லை

1 mins read
47981818-3032-49e9-9992-07561a4d26ab
-

யாரோடும் பகையில்லை

ஓடோடே அடங்கிக்கிடக்கும் -

ஆன்மாவிற்கு

ஊரோடு ஒழுகும் அன்பு

நீரோடு போகும் - இலைக்கு

போராட்டமில்லை பேரானந்தமே

காரோடு கொட்டும் மழைக்கு

சேரோடு சேரும் மகிழ்ச்சி

தொடர்புடைய செய்திகள்

தருவிற்கு பழம் தேவையில்லை

விறகுகளாகும் - கிளைகளும் தேவையில்லை

வேரோடுதான் உறவு

உறவென்று ஒன்றுமில்லை

பிறவிக்கு முளைக்கும் புல் போலத்தான்

தானே முளைக்கும் தானே அழியும்

புட்களுக்கு,

சிங்கமும் புலியும் நல்லவை

மாடும், ஆடும் ,மான்களும் தான் - பகை

புல்லொன்றின் பார்வையில்

ரிஷி சேது

குறிப்புச் சொற்கள்
சிறுகதைகதைஞாயிறு முரசு