பட்டைதீட்டியவன்.....

பட்டைதீட்டியவன்.....

1 mins read
62ff80aa-fe2d-479d-b289-68f9a512a7a3
-

மல்லிகையை விஞ்சும்

மண்வாசம் சொன்னவன்

அரசியலைவிடவும்

அரிசியைப் பேசியவன்

குச்சுவீட்டுக்குள்

கோபுரம் கட்டியவன்

வாத்து கிழித்த நீரின்

கூரைநுனி மழையில்

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

காதலைச் சொன்னவன்

மண்ணில் மழையில்

பூச்சியில் சிட்டில்

தாய்மை சொன்னவன்

ஆலமர ஊஞ்சலென

குடும்பம் சொன்னவன்

புயல் கிழித்த கூட்டில்

வன்மம் சொன்னவன்

கழுகின் கண்களில்

குரூரம் சொன்னவன்

நந்தவனக் குருவிகளில்

நட்பைச் சொன்னவன்

பதுங்கும் புலியில்

பகைமை சொன்னவன்

மனம்கவர் அழகை

மயிலிறகில் சொன்னவன்

புதுமைப்பெண்ணின்

பாரதியைக் கண்டவன்

வெள்ளித்திரை வைரங்களைப்

பட்டை தீட்டியவன்

பறந்துபோனானே

அம்மவோ!

பறந்துபோனானே

அமீதாம்மாள்

குறிப்புச் சொற்கள்
கவிதைகதைஅமிதாம்மாள்

தொடர்புடைய செய்திகள்