ஓர் இசைக்கலைஞரின்
செருக்குடன்
தனது வயலினை
மெல்ல இசைக்கிறது
முயல் ஒன்று
அதை வேட்டையாட
அலையும் மிருகங்கள் கூட
வியப்பில் நின்று
கவனித்தன
தன்னையே மறந்து
தனது வயலினை
இசைத்துக்கொண்டிருந்த
வினோத முயலை
அனைவரும்
கேள்விகேட்காமல்
ரசித்தனர்
சில அதிசயங்கள்
இவ்வாறாகத் தோன்றுவதுண்டு
ரெமிலா


