வாழும் வானவில் நீ,
அறிவியலாளரையும் வியக்கவைக்கும் விடுகதை.
எத்திசையிலும் பறக்கும் வல்லமை,
நான்கு இறக்கைகள் சுமக்கும்
சிறு வானூர்தி.
உன் குறியில் தப்புவது அரிது;
உன் கண்கள்—
விழியாடிகள் அல்ல, பேரற்புதம்.
உழவர்க்கு விலைமதிப்பற்ற தோழன்,
குழந்தையின் முடிவில்லா சிரிப்பு நீ.
எல்லை தாண்டிப் பறந்தாலும்
அடக்கம் உன்னுள் உறையும்;
பின்புறத்தையும் பார்க்கும் வல்லமை கொண்ட
பொறுமையின் உருவம்.
எத்தனை அழகு!
எத்தனை அமைதி!
அரிமாவின் மேல் அமர்ந்தும்
அது அறியாது இருக்கும் போது,
தான் அரசன் என்று பெருமை பேசும் சிலரை விட,
நீதான் உண்மையான அரசன்!
பாலா ரமேஷ்

