நம்பிக்கை என்பது
இறகுகள் முளைத்த
ஒன்றைப் போன்றது
உயிரினுள் அமர்ந்துகொண்டு
வார்த்தைகளில்லா இசையை
நிற்காமல் பாடுகின்றது
தென்றலில் அதன் இசை
இனிதே ஒலிக்கின்றது
குளிரிலிருந்து
எத்தனையோபேரை
காத்துக்கொண்ட
அந்த சிறு பறவையை
அவமானப்படுத்தும் புயல்
எவ்வளவு மோசமானது
அதனை,
கடும் குளிரிலும்
விசித்திரமான கடல் பரப்பிலும்
கேட்டிருக்கிறேன்
ஆனால்,
கடுமையான நேரங்களிலும்
அது என்னில் ஒரு துளி கேட்டது
ரெமிலா
(அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்சனின் (Emily Dickinson) ‘ஹோப் இஸ் அ திங் வித் ஃபெதர்ஸ்’ (Hope is a Thing with Feathers) என்ற ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு)


