அனுப்பாத கடிதம்
ராணுவத்தில் இறந்தவர்கள்
அவர்களிடம் கேட்டுப்பார்
அனுப்பாத கடிதத்தின் மகிமையை
கூச்சப்படும் காதலர்கள்
அவர்களிடம் கேட்டுப்பார்
அனுப்பாத கடிதத்தின் மகிமையை
வயதாகி இறந்தவர்கள்
அவர்களிடம் கேட்டுப்பார்
அனுப்பாத கடிதத்தின் மகிமையை
கண்களைப் பார்த்துப் பேசமுடியாத ஏக்கத்தை
தீர்க்கப் போராடுவது ஒரு கடிதம்
அதன் வரிகளின் ஆழம் அந்த இருவரைத் தவிர
வேறு யாருக்குப் புரியும்
தன் காதலைச் சொல்லத் தயங்கும்
இளைஞன் ஒருவனுக்குத் தெரியாது
அந்தத் தனிமையின் அர்த்தம்
ராணுவத்தில் நாட்டுக்காகப் போராடும் வீரனிடம் கேட்டுப்பார்
அதில் உள்ள முத்தங்களின் வலி தெரியும்
நீ சாப்பிட்டாயா என்று கேட்கத் தவிக்கும் ஒரு தாயின் பாசம்
அவர் இறக்கும்போது கேட்கும் கடைசி வார்த்தையின்போது
ஒரு மகனுக்குப் புரியும்
குமரன் யோஷிதா

