எங்கே தேடியும் கிடைக்கவில்லை
தொலைத்துவிட்ட நான் அஞ்சி அழுதுகொண்டிருந்தேன்
அப்போது பேசிய தேவதையின் குரல்
என் உள்ளத்தில் தேன் வார்த்தது
அந்த இனிய குரல்
எனக்குள்
நம்பிக்கையை விதைத்து
என் கண்களுக்கு ஒளியூட்டி
ஒரு புதிய பாதையைத் திறந்தது
துணிவுடன் அந்தப் பாதையைக்
கடந்து கண்டுபிடித்தேன்
தொலைந்த என் முகவரியைத் தேடிக்
கண்டுபிடிக்க
வழிகாட்டிய அந்தத் தேவதையை
கட்டி அணைத்து கூறினேன்
அம்மா என்று.
வி. லெஷாந்த்

