எத்தனையோ சிந்தனைகள் எண்ணத்தில் தோன்றிடினும்
அத்தனையும் பாக்களென ஆவதில்லை - வித்தொன்று
உள்ளத்தில் வேரூன்றி ஆலமாய் வளர்ந்து
துள்ளி வரவேண்டும் சீர்
தொடையற்ற பாட்டு தொடரின்றி முற்றும்
நடையற்றுப் போகும் நலிந்து - தடையின்றி
யாப்பின் இலக்கணத்தை யாண்டும் பயின்றிட
நாப்பழக்க மாகும் நிலைத்து
புதுக்கவிதை என்றே பொதுவாகக் கூறி
எதுவும் எழுதலாம் என்றில் - அதுவே
உரைநடை போல உருவாகிப் போயின்
நிறைவாக வாராது நன்று
இலக்கணக் கட்டுக்குள் சிக்காது தீட்டும்
பலவகைப் பாவலர் பாட்டும் - நலமாய்
உவமைகள் தாங்கி உடன்வரும் போது
கவர்ந்திடும் படித்திடக் காண்


