எல்லா உயிரும் சுதந்திரமாய் வாழவே பூமி!
‘செல்லப்பிராணி’ என்ற பெயரில்!
நாய்களைச் சிறை வைப்பது என்ன நியாயம்?
கொலை என்பது... கத்தியால் மட்டும் குத்துவது மட்டுமல்ல,
கழுத்தில் சங்கிலி மாட்டி – அன்பென்ற பெயரில்
அடிமையாக்கி ‘நடைப்பயணம்’ கூட்டிப் போவது கூடத்தான்!
உனக்கு பிடித்த தயிர்ச்சாதத்தை ஊட்டிவிட்டு,
அதன் நிஜ பசி என்னவென்று ...இன்னும் தெரியாமல்!
நொந்து, வழியின்றி!
நாய் என்றும் நன்றியுள்ள விலங்குதான்...
அதைச் சிறைப்பிடித்த நாம் என்னவோ?...
அய்யா புவன்

