தமிழ் ஆர்வத்தை விதைக்கும் இளையர்கள்

தமிழ் ஆர்வத்தை விதைக்கும் இளையர்கள்

8 mins read
9ae53460-e9e4-46dc-badc-b50842cc9830
பட்டயப் படிப்பில் மூன்றாம் ஆண்டு மாணவராக இருக்கும் இம்மானுவேல் சுவிசீஷ் தனது ஒப்படைப்பை, நடந்து முடிந்த பட்டயப் படிப்பின் 5ஆம் ஆண்டு நிறைவு விழாவில் காட்சிக்கு வைத்தார். விழாவில் பட்டயப் படிப்பின் முன்னாள்மாணவர்களும் தற்போதைய மாணவர்களும்கலந்துகொண்டனர். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 7

யுகேஷ் கண்ணன்

பிள்ளைகளின் சிந்தனையாற்றலும் கற்றலும் மேம்படுவதற்குத் தாய்மொழிக் கல்வி இன்றியமையாதது. எனவேதான், சிங்கப்பூரில் பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்குத் தாய்மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இதன் தொடர்பில் தமிழ்மொழிக் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்வி பட்டயப் படிப்பைத் தற்போது நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் இளம்பருவ வளர்ச்சிக்கான தேசிய கல்விக் கழகமும் இணைந்து வழிநடத்தி வருகின்றன. இப்பட்டயப் படிப்பில் இணைந்தவர்கள் தங்களின் கற்றல், கற்பித்தல் அனுபவம் குறித்து இங்கு பகிர்ந்துகொள்கிறார்கள்.

தமிழ்மொழிமீது தீராப் பற்று

தற்­போது பட்­ட­யப் படிப்­பில் மூன்­றாம் ஆண்டு மாண­வ­ரா­கப் பயி­லும் 20 வயது இம்­மா­னு­வேல் சுவி­சீஷ், ஒரு காலத்­தில் பாலர் பள்ளி ஆசி­ரி­யர் ஆவ­தில் அதிக ஈடு­பாடு இல்­லா­த­வராம். இருப்­பி­னும், பட்­ட­யப் படிப்­பில் சேர்ந்து ஒரு வாரத்­தி­லேயே தன் மனத்தை மாற்­றிக்­கொண்­ட­தா­கக் கூறி­னார்.

இளம் வய­தி­லி­ருந்தே தமிழ்­மொழிப் போட்­டி­க­ளி­லும் விழாக்­களி­லும் பங்­கேற்­ற­தால் தமிழ்­மீது பற்­றும் ஆர்­வ­மும் தனக்கு இருந்து வந்­த­தா­கக் குறிப்­பிட்­டார் இம்­மானு­வேல்.

நண்­பர் ஒரு­வ­ரின் மூலம் இப்­பட்­ட­யப் படிப்­பைப்­பற்றி தெரிந்­து­கொண்ட இம்­மா­னு­வேல், தமி­ழைப்­பற்றி அதி­கம் கற்­கும் வாய்ப்பு இதில் கிடைக்­கும் என்­ப­தால் உடனே இத்­து­றை­யைத் தேர்ந்­தெடுத்­தார். பட்­ட­யப் படிப்­பில் கற்­பிக்­கப்­பட்ட பாடங்­கள் தன்­னைக் கவர்ந்­த­தா­க­வும் பாலர் பள்ளி ஆசி­ரி­யர் ஆவ­தற்­குத் தன்­னா­லும் முடி­யும் என்ற நம்­பிக்­கையைத் தன்னுள் ஏற்­ப­டுத்­தி­ய­தா­க­வும் கூறி­னார் இம்­மா­னு­வேல்.

சிங்­கப்­பூ­ரில் தமி­ழா­சி­ரி­யர்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­வதை­யும் உணர்ந்த இவர், அத்­துறை­யில் பணி­யாற்­று­வது தனக்­குச் சாத­க­மாக அமை­யும் எனக் கருதி, இம்­மு­டிவை எடுத்­தார்.

ஆனால், இவர் நினைத்­தது போல் இபபட்­ட­யப் படிப்பு அவ்­வளவு எளி­தாக அமை­ய­வில்லை. சில நேரங்­களில் இத்­துறை ஆண்­க­ளை­விட பெண்­க­ளுக்கு ஏற்ற துறையோ என்ற கேள்வி தனக்­குள் எழுந்­த­தாகக் கூறி­னார் இம்­மா­னு­வேல். இருப்­பி­னும், தன்­னா­லும் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும் என்ற நம்­பிக்­கை­யு­டன் இவர் செயல்­பட்­டு வருகிறார்.

வர­வுள்ள தன் வேலை அனு­பவப் பயிற்சி சற்று சவால்­மிக்­க­தாக இருக்­கலாம் என்றாலும் அந்த அனு­ப­வத்­தை­யும் ஆவ­லு­டன் சந்­திக்­கத் தான் தயார் என்கிறார் இவர். ஊட­கத் துறை­யி­லும் ஆர்­வ­முள்ள இம்­மா­னு­வேல், பொழு­து­போக்­காகக் குறும்­ப­டங்­களைத் தயாரிக்கிறார். தனது தேசிய சேவைக்­குப் பின்பு, பாலர் பள்ளி ஆசி­ரி­ய­ரா­கத் தனது பய­ணத்தை இம்­மா­னு­வேல் தொடங்­க­வுள்­ளார்.

அடையாளத்தை உணர்த்தி வரும் ஒரு பயணம்

தமிழ்­மொழி மீதுள்ள ஆர்­வத்­து­டன் கல்­வி­யி­யல் தொடர்­பான ஈடு­பா­டும் தனக்கு உள்­ள­தாகக் கூறு­கி­றார் சிவ­ருத்­திரா ராம­சாமி, 19. இரண்­டாம் ஆண்டு மாண­வி­யான இவர், உயர்­நிலை மூன்­றில் தொண்­டூ­ழி­யம் செய்­வ­தற்­காக வியட்­னாம் சென்­ற­போது தனது இலக்கு என்ன என்­பதை உணர்ந்­த­தா­கச் சொன்­னார்.

அங்­குள்ள சிறு­வர்­க­ளுக்­குப் பாடம் கற்­பித்­தது தனக்கு மறக்க முடி­யாத ஓர் அனு­ப­வ­மாக அமைந்­த­தெ­னக் கூறி­னார். சிறு­வர்­கள் ஆவ­லு­டன் பாடத்­தைக் கவ­னித்­தது, பாடங்­கள் முடிந்­த­பின் அவர்­க­ளு­டன் செல­விட்ட நேரம் போன்ற தரு­ணங்­கள் ஒரு பாலர் பள்ளி ஆசி­ரி­யர் ஆக வேண்­டும் எனத் தன்னை ஊக்­கு­வித்­த­தாக இவர் கூறுகிறார். தனது பாலர் பள்­ளி­யில் தமிழ்ப் பாடம் இல்­லா­த­தால், தொடக்­கப்­பள்­ளி­யில் தமிழ் கற்­க இவர் சற்று சிர­மப்­பட்­டார்.

மற்ற மாண­வர்­களும் தன்போல் அவ­திப்­ப­டக்­கூ­டாது என எண்­ணிய சிவ­ருத்­திரா, இந்­தப் பட்­ட­யப் படிப்­பில் இணைந்­தார்.

ஆங்­கி­லம், தமிழ் இரண்­டி­லும் பட்­ட­யப் படிப்பு கவ­னம் செலுத்­து­வதால் பிற்­கா­லத்­தில் வேலைவாய்ப்பு­கள் சிறப்­பாக இருக்­கும் எனத் தன் பெற்­றோ­ரும் நம்­பி­ய­தா­கக் கூறுகிறார் சிவ­ருத்­திரா.

தொடக்­கப்­பள்ளி முதல் பெண்­கள் பள்­ளி­யில் படித்து வந்த இவர், பல­து­றைத்­தொ­ழிற்­கல்­லூ­ரி­யில் ஆண் மாண­வர்­கள் அதி­கம் இருப்­பர் என எண்­ணி­னார்.

ஆனால், இக்­கு­றிப்­பிட்ட பட்­ட­யப் படிப்­பில் ஆண் மாண­வர்­களின் எண்­னிக்கை குறை­வா­கவே உள்­ளது என இவர் கூறுகிறார். இத்­துறை­யில் அதிக ஆண்­கள் சேர்­வ­தன் மூலம், பாலர் பள்ளி முதல் பிள்­ளை­கள் ஆண் ஆசி­ரி­யர்­க­ளுக்­குப் பழ­கிக்­கொள்­வர் என்­றார் இவர்.

தன் அடை­யா­ளத்தை உணர்த்­தும் வகை­யி­லும் இந்­தப் பட்­ட­யப் படிப்பு தனக்கு உதவி வரு­வ­தா­கக் கூறு­கி­றார் சிவ­ருத்­திரா.

ஆண் ஆசிரியர்களுக்கு வரவேற்பு உண்டு

தமிழ்ப் பிள்­ளை­கள் தங்­கள் இல்­லங்­களில் தமிழ் பேசு­வது குறைந்­துள்­ள­தாக ஆய்­வு­க­ளின் மூலம் கண்­ட­றி­யப்­பட்டுள்ளது. பாலர் பள்­ளி­களில் தமிழ்­மொ­ழிப் பாடம் கற்­பிக்­கப்­ப­டாத கார­ணத்­தாலும் இந்­தப் பட்­ட­யப் படிப்பு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாகப் பட்­ட­யப் படிப்­பின் தலை­வர் திரு­வாட்டி தர்­ஷினி, 48, தெரி­வித்­தார்.

பாலர் பள்­ளி­யில் தமிழ் கற்­காத மாண­வர்­கள் தொடக்­கப்­பள்­ளி­யில் சிர­மப்­ப­டு­த­வ­தால் பாலர் பள்ளி முதல் தமிழ்­மொழி கற்­பிக்­கப்­பட வேண்­டும் எனக் கல்வி அமைச்சு முடி­வெ­டுத்­த­தாக இவர் கூறுகிறார்.

இதற்­குத் தகுந்­தாற்­போல் ஆசி­ரி­யர்­க­ளைத் திறன்­மிக்­க­வர்­க­ளா­கத் தயார்­ப­டுத்­து­வதே இப்­பட்­ட­யப் படிப்­பின் இலக்கு என்­றார் இவர்.

இது­வரை இப்­பட்­ட­யப் படிப்பை மேற்­கொண்டு 84 மாண­வர்­கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறை­வான எண்­ணிக்­கை­யில் ஆண் மாண­வர்­கள் இருந்­தா­லும் அந்த எண்­ணிக்கை மெல்ல அதி­க­ரித்து வரு­வ­தாக இவர் கூறுகிறார்.

ஆண்­க­ளி­டையே தற்­போது இப்­பட்­ட­யப்­ப­டிப்பு குறித்த விழிப்­பு­ணர்வு ஏற்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர்­களில் பலர் முன்­ன­னு­ம­தித் திட்­டத்­தில் பங்­கேற்க ஆர்­வம் காட்டி வரு­வதா­க­வும் இவர் தெரி­வித்­தார்.

ஆரம்­ப­காலக் கல்­வித் துறை­யில் ஆண்­க­ளுக்­கும் பெண்­க­ளுக்­கும் போட்டி என்று எது­வும் இல்லை என்­கி­றார் திரு­வாட்டி தர்­ஷினி.

பெண் ஆசி­ரி­யர்­கள் மாண­வர்­களுக்கு வழங்­கக்­கூ­டிய கற்­பித்­தல் அனு­ப­வத்­தி­லி­ருந்து ஆண் ஆசி­ரி­யர்­கள் வழங்­கும் அனு­ப­வம் சற்று மாறு­பட்­டது என்­றும் அவர் கூறி­னார்.

பெற்­றோர் பலர் தற்­போது தங்­கள் பாலர் பரு­வப் பிள்­ளை­க­ளுக்கு ஆண்­கள் ஆசி­ரி­யர்­க­ளாக இருப்­ப­தை­யும் வர­வேற்­ப­தாக இவர் குறிப்பிட்டார். ஆகை­யால், ஆண் பெண் இருபாலரும் இந்­தத் துறை­யில் நல்ல ஆசி­ரி­யர்­க­ளா­கத் திகழ முடி­யும் என்பது இவரது கருத்து.

தமிழ்மொழியை மதிக்காத நிலை ஏற்படக்கூடாது

தமிழ்க் கல்­வி­யு­டன் கூடிய ஆரம்­ப­காலக் கல்வி பட்­ட­யப் படிப்­பில் தேர்ச்சி பெற்ற மாறன் அன்­ப­ழ­கன், 20, அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­குத் தமி­ழின் அழ­கைக் கொண்டு சேர்க்க வேண்­டும் என்ற வேட்கை கொண்­ட­வர்.

இக்­கா­லப் பிள்­ளை­க­ளுக்­குத் தமி­ழ்மீது ஆர்­வ­மில்­லா­த­தை­யும் தன் நண்­பர்­களில் சில­ருக்­குத் தமிழ் விரும்­பத்­த­காத ஒரு மொழி­யாக உள்­ள­தை­யும் கண்ட மாறன், தமிழ்­மொ­ழியை அனை­வ­ரும் மதிக்க வேண்­டும் என்ற லட்­சிய உணர்­வு­டன் இப்­பட்­ட­யப் படிப்­பைத் தான் தேர்ந்­தெ­டுத்­த­தா­கக் கூறி­னார்.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் பட்­ட­யப் படிப்பை முடித்த மாறன், இதில் சேர்­வ­தற்கு முன்பு வழங்­கப்­பட்ட பாடங்­கள் குறித்து ஆராய்ந்­த­தில் அவை சுவா­ர­சி­ய­மாக இருக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் பட்­ட­யப் படிப்­பைத் தொடங்­கி­னார்.

தமிழ் கற்­ப­தால் வேலைவாய்ப்பு­கள் குறை­வாக இருக்­குமோ எனத் தன் பெற்­றோர் அஞ்­சி­ய­போ­தும் தமிழ் கற்­ப­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­கள் பல உண்டு என அவர் புரிய வைத்­தார்.

உற­வி­னர்­கள் சிலர் இம்­மு­டி­வைப் பற்றி கேள்­வி­கள் எழுப்­பி­னா­லும் பெற்­றோ­ரின் ஆத­ர­வு­டன் தன் முடிவி­லி­ருந்து மாறன் பின்­வாங்­க­வில்லை.

ஆனால், கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ணத்­தால் எவ்­வித முன்­ன­னு­ப­வ­மும் இல்­லா­மல் வேலைப் பயிற்­சிக்­குத் தான் முதன்­மு­த­லில் சென்­ற­போது, அது சற்று சவால்­மிக்­க­தாக இருந்­த­தாக இவர் குறிப்பிடுகிறார்.

இருப்­பி­னும் பிற­ரு­டன் இணைந்து வேலை செய்­யும் வாய்ப்பு கிடைத்­த­தால் எதிர்­கா­லத்­திற்­குத் தன்­னைத் தயார்­ப­டுத்­திக்­கொள்ள முடிந்­த­தாக இவர் தெரி­வித்­தார்.

தேசிய சேவைக்­குச் செல்­ல­ இருக்­கும் மாறன், அதை முடித்தபின் கல்­வி­யி­யல் துறை­யில் பட்­டம் பெற திட்­ட­மிட்­டுள்­ளார்.

சவால்களுக்கு இடையே நேர நிர்வாகத்தைக் கற்றுத்தந்த துறை

சிறு வய­தி­லி­ருந்தே தமிழ்­மொழி மீது கொண்ட ஆர்­வத்­தால் அருண் ஜூட் லோபெஸ், 18, உயர்­நி­லைப் பள்­ளி­யில் தமிழ் இலக்­கிய பாடத்­தைத் தேர்ந்­தெ­டுத்­துப் படித்­தார். தமி­ழைப் பற்றி ஆழ­மா­கக் கற்­றுக்­கொள்ள எண்­ணிய இவர், இந்­தப் பட்­ட­யப் படிப்­பைப் பற்றி இணை­யத்­தில் ஆராய்ந்து, இதுவே தனக்­கான பாதை என முடி­வெ­டுத்­தார்.

தற்­போது இரண்­டாம் ஆண்டு மாண­வ­ரா­கப் பயின்று வரும் இவர், சவால்­கள் அவ்­வப்­பொ­ழுது தனக்கு இருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார். ஆங்­கி­லம், தமிழ் என இரு மொழி­க­ளி­லும் பாடங்­கள் அமைந்­தி­ருப்­ப­தால் ஒவ்­வொரு பாடத்­திற்­கும் நேரம் ஒதுக்­கு­வது கடி­ன­மாக இருக்­கிறது என்று இவர் தெரி­வித்­தார். ஆனால், இருக்கும் நேரத்தை சரியாக ஒதுக்கீடு செய்ய இது தனக்கு கற்றுத்தந்ததாக இவர் கூறுகிறார்.

முன்­பை­விட தற்­போது இந்­தப் பட்­ட­யத்தை மேற்­கொள்­ளும் ஆண் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருந்­தா­லும் இன்­னும் அதி­க­மான ஆண்­கள் இத்­து­றை­யில் சேர்ந்­தால் சிறப்­பாக இருக்­கு­மென இவர் கரு­து­கி­றார்.

"ஆண்­க­ளுக்­குப் பொது­வாக பெண்­க­ளை­விட பொறுமை குறைவு என்று சிலர் எண்­ண­லாம். இத­னால், சிறு பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்­கொள்ள முடி­யா­தெ­னக் கரு­தப்­படு­கிறது," என்று அருண் கூறி­னார். பரா­ம­ரிப்­புச் சேவை­கள் சில­வற்றை ஆண் ஆசி­ரி­யர்­க­ளால் செய்ய முடி­யாத சில கட்­டுப்­பா­டு­களும் உண்டு என்று இவர் தெரி­வித்­தார்.

ஆனால், இவற்றைக் கடந்து ஆண்­க­ளால் நல்ல பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளா­கத் திகழ முடியு­மென அருண் கூறு­கி­றார். இன்­றைய பாலர்­களை நாளைய தலை­வர்­க­ளாகச் செதுக்­கு­வது தன் போன்ற வருங்­கால பாலர் பள்ளி ஆசி­ரி­யர்­க­ளின் தலை­யாய கடமை எனக் கூறும் இவர், பட்­ட­யம் பெற்ற பிறகு கல்­வி­யி­யல் பாடத்­தில் இளங்­கலை பட்­டம் பெறத் திட்­ட­மிட்­டுள்­ளார்.

பாலர் பள்ளி ஆசிரியர் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம்

முதன்­மு­த­லில் இந்­தப் பட்­ட­யப் படிப்பு 2017ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­ட­போது அதில் சேர்ந்த மாண­வர்­களுள் 24 வயது புவித்ரா சிங்­கா­ரம் ஒரு­வர். சிறு­வர்­க­ளுக்­குக் கற்­பிப்­பதில் அவ்­வ­ள­வா­கத் தனக்கு ஆர்­வம் இல்­லா­த­போ­தும் தமி­ழின்மீது இருந்த மிகுந்த ஈடுபாட்டால் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்தப்பட்ட பட்­ட­யப் படிப்பில் துணிச்­ச­லு­டன் சேர முன்­வந்­தார் இவர்.

தன் அக்கா தொடக்­கப்­பள்­ளித் தமி­ழா­சி­ரி­ய­ராக இருப்­ப­தா­லும் குடும்­பத்­தில் அனை­வ­ரும் தமி­ழின்மீது பற்­று­டை­ய­வர்­கள் என்­ப­தா­லும் அவர்­கள் தனக்கு ஆத­ரவு அளித்­த­தாக புவித்ரா தெரி­வித்­தார்.

புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட பட்­ட­யப் படிப்­பில் சேர்ந்­தது தனக்கு ஒரு வித்­தி­யா­ச­மான அனு­ப­வ­மாக அமைந்­த­தா­கக் கூறி­னார்.

இந்­தி­யா­வில் உள்ள அர­சாங்­கப் பள்­ளி­களி­லும் தனி­யார் பள்­ளி­க­ளி­லும் கற்­பிக்­கும் வாய்ப்பு இந்­தப் பட்­ட­யப் படிப்­பின் வழி­யா­கத் தனக்­குக் கிடைத்­த­தாக­ இவர் தெரி­விக்கிறார்.

சில பாலர் பள்­ளி­க­ளுக்­குக் கற்­றல் பய­ணத்­துக்­கா­கத் தான் சென்­ற­போது, தன்­னால் நல்ல ஆசி­ரி­ய­ராக இருக்க முடி­யுமா என்ற கேள்வி தன்­னுள் எழுந்­த­தாக புவித்ரா குறிப்­பிட்­டார்.

ஆனால், வேலை அனு­ப­வப் பயிற்­சிக்­குப் பிறகு அந்தச் சந்­தே­கம் வில­கி­ய­தாக இவர் கூறுகிறார். பிள்­ளை­கள் தன்னை அர­வ­ணைத்த விதம், தன்­னால் மாண­வர்­க­ளுக்கு தமிழார்­வத்­தைக் கொண்டு சேர்க்க முடி­கிறது என்ற எண்­ணம் போன்­றவை இவ­ருக்கு நம்­பிக்கை ஊட்­டின. மாண­வர்­க­ளுக்­குக் கற்­பிக்­கும் முறை­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கும் சுதந்­தி­ரம் தனக்கு உள்­ள­தால், தன் பணி ஒரு சுமை­யா­கவே தெரி­ய­வில்லை என்று இவர் கூறி­னார்.

எதிர்­கா­லத்­தில் தமிழ் சார்ந்த மற்­றத் துறை­களில் பணி­யாற்றவும் தனக்கு விருப்­பமுள்­ள­தாக புவித்ரா தெரி­வித்தார்.

தமிழ்க் கல்வியுடன் கூடிய ஆரம்பகாலக் கல்விப் பட்டயப் படிப்பின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

தமிழ்க் கல்­வி­யு­டன் கூடிய ஆரம்­ப­காலக் கல்­விப் பட்­ட­யப்­ப­டிப்பு தொடங்­கப்­பட்டு ஐந்­தாண்­டு­கள் ஆகி­விட்­டன. இதை முன்­னிட்டு அப்­பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர் சங்­கக் கட்­ட­டத்­தில் கடந்த வாரம் கொண்­டாட்ட விழாவிற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

முன்­னாள் மாண­வர்­க­ளுக்­கும் தற்­போது பட்­ட­யப் படிப்பை மேற்­கொண்டு வரும் மாண­வர்­க­ளுக்­கும் இடையே உள்ள பிணைப்பை வலு­ப்ப­டுத்­தும் வகை­யில் அமைந்த இந்­நி­கழ்­வில், கலை­நி­கழ்ச்­சி­யு­டன் கல்­வி­சார்ந்த கலந்­து­ரை­யா­டல் அங்­கமும் இடம்­பெற்­றது.

கலந்­து­ரை­யா­ட­லின்­போது தங்­க­ளது அனு­ப­வங்­கள், தாங்­கள் சந்­தித்த சவால்­கள், அவற்­றைக் கையா­ளும் உத்­தி­கள் ஆகி­ய­வற்­றைப் பற்றி முன்­னாள் மாண­வர்­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

மாண­வர்­க­ளால் இயற்­றப்­பட்ட பாடல், பர­த­நாட்­டிய நட­னம், நாட்­டுப்­புற நட­னம், தவில் இசை­யு­டன் இணைந்த பாடல் தொகுப்பு என பல்­சுவை அங்­கங்­கள் இந்­நி­கழ்ச்­சி­யில் இடம்­பெற்­றன.

தமக்­குப் பெரு­மி­தம் அளிக்கும்படியாக இந்­நி­கழ்ச்சி அமைந்­துள்­ள­தாக இளம்­பருவ வளர்ச்­சிக்­கான தேசி­ய கல்­விக் கழ­கத்­தின் இயக்­கு­நர், திரு­மதி லோக் யோ டெக் யோங், 55, தெரி­வித்­தார்.

நிகழ்ச்­சி­யின் ஏற்­பாட்­டுக் குழு­வில் இடம்பெற்றிருந்த அருண் ஜூட் லோபெஸ், இந்­நி­கழ்ச்­சியை ஏற்­பாடு செய்­வ­தற்கு ஒரு மாத காலம் ஆன­தா­கக் குறிப்­பிட்­டார்.

இரண்­டாம், மூன்­றாம் ஆண்டு மாண­வர்­க­ளுக்கு ஒப்­ப­டைப்­பு­களும் பாடங்­களும் இருந்த நிலை­யில் அனை­வ­ரும் ஒரே சம­யத்­தில் கூடி ஒத்­திகை பார்ப்­பது கடி­ன­மாக இருந்­தது. இருப்­பி­னும், நிகழ்ச்சி சிறப்­பாக நடந்­தேற வேண்­டும் என்று அனை­வ­ரும் விரும்பி உழைத்­த­தால் அனை­வ­ரா­லும் ரசிக்­கப்­பட்ட ஒரு நிகழ்ச்­சி­யைத் தங்­க­ளால் படைக்க முடிந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.