கிச்சனர் ரோடு குடியிருப்பில் தீ; மருத்துவமனையில் இருவர்
1 mins read
கிச்சனர் ரோட்டில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 13ஆம் தளத்திலிருக்கும் ஒரு வீட்டில் இன்று புதன்கிழமை காலை தீப்பிடித்ததை அடுத்து, குறைந்தது இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மூன்று, நான்கு முறை பெரும் சத்தம் கேட்டதை அடுத்ததாகக் கூறினார் அந்தக் கட்டடத்தின் ஏழாம் தளத்தில் வசிக்கும் திரு ஃபரூக் சம்சுதீன், 64. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் புவா, 12.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகக் குடியிருப்பாளர்களிடம் கூறினார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ் -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted

