உலகெங்கும் தைப்பூசம் தமிழர்களால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும் பினாங்கு தீவில் பல இன மக்கள் தைப்பூசத்தைத் தங்கள் சொந்தத் திருவிழாவாகக் கொண்டாடுவது அதன் தனிச்சிறப்பாக உள்ளது.
கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பக்தர்கள், ஜனவரி 24,25ஆம் தேதிகளில் பங்கேற்றனர். 511 படிகளைக் கொண்ட தண்ணீர்மலைக் கோயில், 272 படிகள் கொண்டுள்ள பத்துமலையைக் காட்டிலும் அதிகமானவை.
தைப்பூசத்திற்கு முந்தைய நாளான செட்டி பூச தினத்தில் வீதி உலா மேற்கொண்ட தங்க, வெள்ளி ரதங்களைப் பொதுமக்கள் ஆவலுடன் வரவேற்றனர்.