மறைவாய் செயல்பட்டு மாயமான கள்ளக் குடியேறிகள் - விசாரணை
6 Dec 2023 17:16
சுங்கை கடூட் தொழிற்பேட்டையில் கள்ளக் குடியேறிகளைக் கைப்பற்றும் நோக்கில் சிங்கப்பூர் போலிஸ், சோதனை நடவடிக்கையை செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 5) மேற்கொண்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
ஜேடிசி நிறுவனமும் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் போலிசாருடன் சோதனை நடவடிக்கையில் இணைந்தன.
கட்டடம் மட்டுமின்றி, மூடப்பட்ட கால்வாய் ஒன்றும் சோதிக்கப்பட்டது. கயிறு ஒன்றில் தொங்கவிடப்பட்ட ஈரத் துணிகள், மரப்பலகைகளால் செய்யப்பட்ட தற்காலிக மெத்தை, காலி பிளாஸ்டிக் போத்தல்கள், மருந்துச் சிமிழ் உள்ளிட்ட பொருள்கள் அதற்குள் காணப்பட்டிருந்தன.
எவரும் கைது செய்யப்படவில்லை. இருந்தபோதும், அவ்வட்டாரத்தில் கைவிடப்பட்ட கட்டடம் ஒன்று போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கூடாரமாக இயங்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கட்டடத்தில் பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டுகள், மதுபானக் கிண்ணங்கள் போன்றவையும் தென்பட்டன.