தனது ஊழியர் ஒருவரை மிரட்டிய மாணவரைக் கண்டித்துள்ளதாக செயின்ட்ஸ் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளி தெரிவித்துள்ளது. மிரட்டப்பட்ட ஊழியரும் அப்பள்ளியில் வேலை செய்பவர்.
ஊழியர்களிடம் மரியாதையின்றி நடந்துகொள்வதைப் பள்ளி சகித்துக்கொள்ளாது என்றும் சம்பந்தப்பட்ட மாணவர் கண்டிக்கப்பட்டதாகவும் செயின்ட் ஆண்டுரூஸ் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
"அந்த மாணவரின் பெற்றோரையும் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களுடன் இணைந்து செயல்பட்டு மாணவருக்கு ஆலோசனை வழங்கி அவரை வழிநடத்துவோம்," என்றும் செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி கூறியது.
இச்சம்பவம் இடம்பெற்ற நான்கு காட்சிகள் ஒன்றுசேர்க்கப்பட்ட 56 விநாடி காணொளி இணையத்தில் பகிரப்பட்டது. அதில் இந்த மாணவர் ஓர் ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது பதிவானது.
சம்பவம் வகுப்பறையில் நடைபெற்றதுபோல் தெரிந்தது.
வாக்குவாதம் மோசமடைந்த பிறகு மாணவர் ஆடவரைத் தகாத வார்த்தையாலும் திட்டினார்.
மேலும், தகாத வாத்தையைக் தன்னிடம் பேசக்கூடாது என்று ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவரிடம் கூறுவதும் காணொளியில் பதிவானது.

