தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் ஓட்டுநர் இல்லா பேருந்து: பலருக்கு ரம்மியமான அனுபவம்

2 mins read

ஹாவ் பார் வில்லா, ஜூரோங் தீவு ஆகி­ய­வற்­றில் இந்த மாதம் ஓட்­டு­நர் இல்­லாத பேருந்­து­ சேவைகள் தொடங்­கி­ன. அதில் மொத்­தம் 320 பேர் பய­ணம் செய்துள்ளனர்.

அந்­தப் பேருந்து பய­ணம் ரம்­மி­ய­மான அனு­ப­வ­மாக இருக்­கிறது என்று பெரும்­பா­லா­ன­வர்­கள் தெரி­வித்­த­னர். பேருந்­து­கள் தாங்­கள் எதிர்­பார்த்த அள­வுக்கு மெது­வா­கச் செல்­ல­வில்லை என்று அவர்கள் கூறினர். அவ­ச­ர­கா­லத்­தில் உதவு­வதற்­காக ஓட்­டுநர் ஒரு­வர் பணி­யில் இருந்­தது தங்­க­ளுக்கு மன­நி­றை­வாக இருந்­த­தாக அந்­தப் பய­ணி­கள் குறிப்­பிட்­ட­னர்.

இருந்­தா­லும் பாது­காப்பு அம்­சங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­க­ளி­டம் தொடர்ந்து கவலை நில­வு­கிறது.

-

எஸ்­எம்­ஆர்டி, எஸ்­பி­எஸ் டிரான்­சிட் ஆகிய நிறு­வ­னங்­க­ளு­டன் சேர்ந்து எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம் சென்ற திங்­கட்­கி­ழமை சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது பரி­சோ­தனை ஓட்­டத்­தைத் தொடங்­கி­யது.

அந்த இரண்டு வழித்­த­டங்­க­ளி­லும் ஓட்­டு­நர்­ இல்­லாத பேருந்து­களில் பய­ணம் செய்­வ­தற்கு மக்­கள் கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

அந்­தப் பய­ணத்­திற்கு அவர்­கள் ஒரு செயலி மூலம் முன்­ப­திவு செய்து கட்­ட­ணத்­தை­ச் செலுத்த வேண்­டும். அந்­தச் சோ­தனை ஓட்­டம் ஏப்­ரல் 30ஆம் தேதி வரை இடம்­பெ­றும்.

ஓட்­டு­நர் இல்­லாத பேருந்­துச் சேவையை மிக­வும் பர­வ­லாக நடை­மு­றைப்­ப­டுத்த குறைந்­த­பட்­சம் ஐந்து முதல் 10 ஆண்­டு­கள் ஆகும் என்று தொழில்­துறை­ கவ­னிப்­பாளர்­கள் கூறு­கி­றார்­கள்.

இத்­த­கைய வாக­னத்தை எம்­ஆர்டி நிலை­யங்­க­ளுக்­கும் பேருந்து நிலை­யங்­க­ளுக்­கும் இடை­யில் இணைப்­புச் சேவை­யாக பயன்­படுத்­து­வது நடை­மு­றைக்கு உகந்த இலக்­காக இருக்­கும் என்­றும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தக­வல் தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­யாற்­றும் லிம் கா ஆன், 52, என்­ப­வர் தனக்கு இந்­தத் தொழில்­து­றை­யில் நாட்­டம் இருப்­பதா­கத் தெரி­வித்­தார்.

இந்­தத் துறை இன்­ன­மும் வளர்ச்சி அடை­ய­வில்லை என்­றும் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டால் சிங்­கப்­பூ­ரர்­கள் குறிப்­பாக இளை­யர்­கள் இந்­தப் புதிய தொழில்­நுட்­பத்­தைத் தழு­விக்­கொள்­வார்­கள் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

விபத்து நிகழ்ந்­தால் அதற்கு யார் பொறுப்பு என்­பது இன்­ன­மும் தெள்­ளத்­தெ­ளி­வாக தெரி­ய­வில்லை என்­பதை அவர் சுட்­டி­னார்.

-

எதிர்­பா­ராத சூழ்­நி­லை­கள் ஏதே­னும் ஏற்­பட்­டால் அதைச் சமா­ளிக்­கும் வகை­யில் அவ­ச­ர­கால பொத்­தான் ஒன்றை பேருந்­து­களில் பொருத்­த­லாம் என்று சிலர் யோசனை தெரி­வித்­த­னர்.

திரு­வாட்டி சடோகோ நேமோடோ என்ற 43 வயது ஜப்­பா­னிய குடும்ப மாது, மூன்று மாத­மாக சிங்­கப்­பூ­ரில் இருந்து வரு­கி­றார். இவர் பாசிர் ரிஸ்­சில் இருந்து ஹாவ் பார் வில்லா சென்று ஓட்­டு­நர் இல்­லாத பேருந்­துச் சேவையை அனு­ப­வித்துப் பார்க்க விரும்­பி­னார்.

அந்­தச் சேவை சர­ள­மாக இருக்­கிறது என்றும் பேருந்து மின்­சா­ரத்­தில் ஓடு­வ­தால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்­த­தாக உள்­ளது என்றும் அந்த மாது தெரி­வித்­தார்.