நற்பண்பு, குடியியல் கல்விக்குப் புதிய ஆய்வு நிலையம் திறப்பு

நற்பண்பு, குடியியல் கல்விக்குப் புதிய ஆய்வு நிலையம் திறப்பு

2 mins read

சிங்­கப்­பூ­ரில் நற்­பண்பு, குடி­யி­யல் கல்வி கற்­பித்­தலை மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் கல்வி அமைச்­சும் தேசிய கல்­விக் கழ­க­மும் இணைந்து நற்­பண்பு, குடி­யி­யல் கல்­விக்­கான சிங்­கப்­பூர் நிலை­யத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளன.

தேசிய கல்­விக் கழ­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்­நி­லை­யம் சிங்­கப்­பூ­ரி­லுள்ள ஒரே நற்­பண்பு, குடி­யி­யல் கல்­விக்­கான நிலை­யம். கற்­றல், கற்­பித்­தல் ஆராய்ச்­சியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக இந்­நி­லை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

மாண­வர்­க­ளின் ஏட்­டுக்­கல்வி மட்­டு­மல்­லாது அனைத்து அம்­சங்­க­ளி­லும் அவர்­கள் முன்­னேற இந்­நி­லை­யம் வழி­வ­குக்­கின்­றது.

நற்­பண்பு, குடி­யி­யல் கல்விப் பாடங்கள் சிங்­கப்­பூ­ரில் அனைத்து நிலை மாண­வர்­க­ளுக்­கும் கற்­பிக்­கப்­ப­டு­கின்றன.

சிங்­கப்­பூர் சான்ட்ஸ் எக்ஸ்போ அரங்­கில் நேற்று நடை­பெற்ற கல்வி அமைச்­சின் ஆசி­ரி­யர்­கள் மாநாடு, உன்­னத விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்று உரை­யாற்­றிய கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், "நம் மாண­வர்­களை எதிர்­கா­லத்­திற்­குத் தயார்­படுத்த வேண்­டும். தொழில்­நுட்­பத்­தைக் கற்­ற­லில் புகுத்தி மாண­வர்­க­ளின் கற்­றல் அனு­ப­வங்­களை மேம்­ப­டுத்த வேண்­டும்," என்­றார்.

இவ்­வி­ழா­வில் 1,500க்கும் மேற்­பட்ட ஆசி­ரி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரின் ஆசி­ரி­யர் சமூ­கத்தை வலுப்­ப­டுத்­து­வது பற்­றி­யும் அதன்­மூ­லம் எப்­படி மாண­வர்­க­ளின் கற்­றலை மேம்­ப­டுத்­த­லாம் என்­பது பற்­றி­யும் பேசிய அமைச்­சர், அனைவருக்குமான ஒரே கற்றல்தள (ஒன் போர்ட்­டல் ஆல் லர்னர்ஸ்) அமைப்பைச் சான்­றா­கச் சுட்­டி­னார்.

இந்த அமைப்­பு­மு­றை­யின் மூலம் ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளது கற்­பித்­தல் திட்­டத்தை ஆவ­ணப்­ப­டுத்த முடி­வ­தோடு கற்­றல் வளங்­க­ளை­யும் எளி­தாக அந்தத் ­த­ளத்­தி­ல் காண­லாம்.

"நற்­பண்பு, குடி­யி­யல் கல்வி, ஆராய்ச்­சி­யின் முக்­கிய உல­க­ளா­விய மைய­மாக சிங்கப்பூர் திக­ழும் நோக்­கத்­து­டன் இந்­நி­லை­யத்­தில் நம் பய­ணத்தை நாம் தொடங்க வேண்­டும்," என்று திரு சான் கேட்­டுக்­கொண்­டார்.

2018ஆம் ஆண்டு கல்வி அமைச்­சால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட 'எஸ்­எல்­எஸ்' என்ற மாண­வர்­க­ளுக்­கான இணை­யக் கற்­றல்­த­ளம் இன்று மாண­வர்­க­ளால் பெரி­தும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

பாட வடி­வ­மைப்­பு­கள், காணொ­ளி­கள், வீட்­டுப்­பா­டங்­கள் என 12,000 கற்­றல் வளங்­க­ளைக் கொண்­டுள்ள இத்­த­ளத்தை 84 விழுக்­காடு மாண­வர்­கள் ஒவ்­வொரு மாத­மும் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

"'எஸ்­எல்­எஸ்' போன்ற இணை­யக் கற்­றல் தளங்­க­ளை­யும் மற்ற புதிய தொழில்­நுட்­பங்­க­ளை­யும் ஆசி­ரி­யர்­கள் அர­வ­ணைக்க வேண்­டும்," என்று திரு சான் வலி­யு­றுத்­தி­னார்.