செயிண்ட் பேட்ரிக்ஸ் பள்ளியில் தாய்மொழி வார விழாவின் ஓர் அங்கமாக இம்மாதம் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை, "வாசிக்க வா" என்ற வாசிப்புப் பட்டறை உயர்நிலை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பெற்றது.
வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பின் வகைகள், வாசிப்பின் நன்மைகள், வாசிப்பு அனுபவம், ஏற்ற இறக்கத்துடன் வாசிப்பது போன்றவற்றைப் புதுமையாகவும் காணொளிகள், புதிர்ப் போட்டிகள், நடிப்பு ஆகியவற்றின் மூலமும் மகிழ்வூட்டும் வகையிலும் எழுத்தாளர், நடிகர், இயக்குநருமான திரு மில்லத் அகமது சிறப்பாக வழி நடத்தினார்.
பள்ளியின் தமிழாசிரியர் மா அர்ச்சுனன், இதுபோன்ற வாசிப்பு நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஐம்பது மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் புதிர்ப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் உயிர்மெய் பதிப்பகம் சார்பாக 'குவிக் மேத்ஸ்' என்ற நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

