முன்னாள் குற்றவாளிகளுக்கான குற்ற எதிர்ப்பாளர்கள் அமைப்பு

முன்னாள் குற்றவாளிகளுக்கான குற்ற எதிர்ப்பாளர்கள் அமைப்பு

1 mins read

சிங்­கப்­பூர் சிறைத் துறை, பிற சமூக பங்­கா­ளித்­துவ அமைப்பு ­க­ளு­டன் இணைந்து முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் மீண்­டும் சமூ­கத்­தில் காலடி எடுத்து வைக்க ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில் குற்ற எதிர்ப்­பா­ளர்­கள் அமைப்பு அதி­கா­ர­பூர்­வ­மாக தொடங்கி வைக்­கப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் எக்ஸ்போ அரங்­கில் இந்த திட்ட அறி­முக நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

இந்­நி­கழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தி­ன­ராக உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டாக்­டர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் வருகை புரிந்­தார்.

200க்கும் மேற்­பட்­ட­வர்­கள் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டது மட்­டு­மல்­லாது, இது­வரை மொத்­தம் 53 நிறு­வ­னங்­கள் இத்­திட்­டத்­திற்கு கைகொ­டுக்க முன்­வந்­துள்­ளன.

முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் சரி­யான பாதை­யில் செல்­லவும் குற்றச்செயல்களுக்குத் திரும் பாதி­ருக்­க­வும் வழி வகுப்­பதே குற்ற எதிர்ப்­பா­ளர்­கள் அமைப்பு என்ற புதிய திட்­டத்­தின் நோக்­கம்.

முன்­னாள் குற்­ற­வா­ளி­யாக இருந்த திரு டேவிட் கிங் துரை­ரா­ஜன் தற்போது சிங்கப்பூர்ப் பின்னலச் சேவைச் சங்கம் தொண்­டூழி­ய­ராக உள்­ளார்.

"ஒரு முன்­னாள் குற்­ற­வா­ளி­யான நான் பல சவால்­க­ளைச் சந்­தித்­துள்­ளேன். என்­னைப் போன்ற பிற­ருக்கு புனர்­வாழ்­வை­யும் மறு ஒருங்­கி­ணைப்­பை­யும் உரு­வாக்க, அவர்­க­ளி­டையே தன்­னம்­பிக்­கை­யை­யும் ஊக்­கத்­தை­யும் அளிக்க வேண்­டும்," என்று திரு டேவிட் கூறி­னார். தனக்கு உத­விய இந்தச் சமூ­கத்­திற்கு தன்­னால் முடிந்த ஆத­ரவை வழங்க விரும்பு ­கி­றார் இவர்.

"முன்­னாள் குற்­ற­வா­ளி­களு­டன் அதிகம் பணி­யாற்­றி­யுள்ள குற்ற எதிர்ப்­பா­ளர்­கள் கட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­கள், மீண்­டும் குற்­றச்செயல்­க­ளுக்கு அவர்­கள் திரும்­பு­வ­தைத் தடுக்க பெரி­தும் உத­வுவார்­கள்," என்­றார் டாக்டர் ஃபைஷல் இப்­ரா­ஹிம்.